ஐ ஹேட் யூ, பட் – பகுதி 34

“இ..இன்னும் வாங்கலை ப்ரியா..!! அவன் டெமோ வேணுன்னு கேட்டான்..!!” அசோக் சற்று தடுமாற்றமாகவே சொன்னான்.

“எப்போ அவனுக்கு டெமோ கொடுக்க போற..??”

“நா..நாளைக்கு..!!”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“அவன் நாளைல இருந்து ரெண்டு நாள் லீவ்ல போறான்..!! தெரியுமா..??”

“ஓ..!! அப்போ சரி.. அவன் திரும்ப வந்தப்புறம் குடுக்குறேன்..!!”

“நோ வே..!! ரெண்டு நாள்லாம் அந்த இஷ்யூ பெண்டிங்லபோட முடியாது.. அது ரொம்ப க்ரிட்டிக்கல் இஷ்யூ..!!” ப்ரியா பொய் சொன்னாள்.

“ப்ச்.. இப்போ என்ன பண்ணலாம்னு சொல்ற..??” அசோக் இப்போது சற்று எரிச்சலுற்றவனாய் கேட்டான்.

“பர்சேஸ்னா.. பக்கெட்டு, மக்கு வாங்கணும்.. அவ்ளோதான.. அதை அவளே தனியா வாங்கிக்கட்டும்..!! நீ உடனே கெளம்பி வா.. அவன் நைன் ஓ க்ளாக் போல கெளம்பிடுவான்.. அதுக்குள்ளே வந்து அவனுக்கு டெமோ குடுத்து அப்ரூவல் வாங்கு..!!”

“நைன் ஓ க்ளாக்’குக்கா..?? என்ன வெளையாடுறியா..?? நான் மடிவாலால இருக்குறேன்டி.. இன்னும் டென் மினிட்ஸ்ல எப்படி எலக்ட்ரானிக் சிட்டி வர்றது..??”

“அதுலாம் எனக்கு தெரியாது.. அவன் கெளம்புறதுக்குள்ள நீ ஆபீஸ்ல இருக்கணும்.. அவ்ளோதான்..!!”

“ப்ச்.. இதெல்லாம் நேத்தே சொல்றதுக்கு என்ன..?? திடீர்னு வந்து இப்படி கிரிட்டிக்கல் இஷ்யூன்னா என்ன அர்த்தம்..??” அசோக் சூடாக கேட்க,

“நீ இப்படி திடீர்னு ஊர் சுத்த கெளம்புவேன்னு எனக்கு எப்படி தெரியும்..??” ப்ரியாவும் பதிலடி கொடுத்தாள்.

“போடீ.. என்னால முடியாது..!!”

“பாரு அசோக்.. அந்த இஷ்யூ இன்னைக்கு முடியலைன்னா.. அப்புறம் நான் மேட்டரை எஸ்கலேட் பண்ணவேண்டி இருக்கும்.. பிரச்சினையை நீ தான் ஃபேஸ் பண்ணனும்.. பாத்துக்கோ..!! நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன்.. அப்புறம் உன் இஷ்டம்..!!”

மிரட்டலாக சொல்லிவிட்டு ப்ரியா காலை கட் செய்தாள். செல்ஃபோனை தூக்கி ஓரமாய் போட்டாள். இரண்டு கைகளையும் விரித்து, முகத்தை அதில் கவிழ்த்துக் கொண்டாள். தான் செய்தது சரியா தவறா என்று மனதுக்குள்ளேயே பட்டி மன்றம் நடத்தினாள்.

ஒரு ஐந்து நிமிடம் ஆகியிருக்கும். அவளுடைய செல்போன் கிணுகிணுத்தது. எடுத்து பார்த்தாள். ‘அசோக் காலிங்..’ என்றது டிஸ்ப்ளே..!! கால் பிக்கப் செய்து காதில் வைத்தாள். எரிச்சலாகவே கேட்டாள்.

“ப்ச்.. எதுக்கு இப்போ கால் பண்ணிட்டு இருக்குற.. கெளம்புனியா இல்லையா..??”

ஆனால்.. இப்போது அடுத்த முனையில் அசோக்கின் குரலுக்கு பதிலாக இன்னொரு ஆளின் குரல் கரகரப்பாக ஒலித்தது.

“ஏம்மா.. இந்த செல்போன் வச்சிருந்த தம்பியை உங்களுக்கு தெரியுமா..??”

“தெ..தெரியும்.. நீ..நீங்க..??” ப்ரியா பட்டென குழப்புமுற்றவளாய் கேட்டாள்.

“இந்த தம்பிக்கு ஆக்சிடன்ட் ஆயிடுச்சுமா.. லாரில போய் மோதிடுச்சு..!!”

அந்த ஆள் சொல்ல, வாழ்நாளின் மிக மோசமான அதிர்ச்சியை ப்ரியா உள்வாங்கினாள்.

“வாட்..?????” என்று விழிகள் விரித்து கத்தினாள்.

“ஃபோன்ல கடைசியா இந்த நம்பருதான்மா இருந்தது.. அதான் இதுக்கு கால் பண்ணினேன்..!! சென்ட் ஜான்சுக்கு தூக்கிட்டு போறோம்.. இவரு வீட்டுக்கு தகவல் குடுத்து.. உடனே கெளம்பி வர சொல்லும்மா..!!”

ப்ரியாவுக்கு இப்போது கண்கள் செருகிக்கொண்டன. மயக்கம் வருவது போலிருக்க, தலையை பிடித்துக் கொண்டாள். அவளுடைய கையில் இருந்த செல்ஃபோன் நழுவி தரையில் விழுந்தது. அது நழுவுவதற்கு முன் அந்த ஆள் சலிப்பாக சொன்ன வார்த்தைகள், ப்ரியாவின் காதில் தெள்ளத் தெளிவாக வந்து விழுந்தன.

“சிக்னல் விழுறதுக்குள்ள அப்டியே பறக்குறாரு..!! ஹ்ஹ்ம்ம்.. அப்படி என்னதான் அவசரமோ..??”

ஸாரி ஃப்ரண்ட்ஸ்..!! மொத்தம் ஆறு எபிசோடுகளாக மெகா அப்டேட் கொடுத்து இந்தக்கதையை முடிக்க திட்டமிட்டிருந்தேன்..!! ஆனால்.. சற்று முன்பு வரை என்னால் ஐந்து எபிசொடுகளே எழுத முடிந்தது..!! காத்திருக்கும் நண்பர்களை ஏமாற்றவும் விருப்பம் இல்லை..!! அதனால்.. அப்டேட்டை இரண்டு பாகங்களாக பிரித்து.. இன்று, மூன்று எபிசொடுகளுடன் ஒரு பாகமாகவும்.. நாளையோ, நாளை மறுநாளோ.. மீதம் மூன்று எபிசொடுகளுடன் இன்னொரு பாகமாகவும்.. வெளியிட முடிவு செய்திருக்கிறேன்..!! நண்பர்களின் ஒத்துழைப்பை நல்குகிறேன்..!! இதோ.. கதைக்கடைசியின் முதல் மூன்று எபிசோடுகள்..!!

அத்தியாயம் 21

நீங்கள் அன்பு கொண்டிருப்பவரை தன்முனைப்புடன் அணுகுவது.. அளவற்ற வேதனையையே அள்ளித்தரும்.. அவருக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் சேர்த்து..!! தான் காதலிப்பவருக்கு சிறு கஷ்டம் நேர்ந்தாலே இதயம் பதைபதைத்து போகிறது.. கட்டுப்பாடின்றியே கண்கள் நீரை உகுக்க ஆரம்பிக்கின்றன.. அன்று நேத்ரா அழுதாளே.. அது மாதிரி..!! காய்ச்சலில் படுத்திருக்கும் காதலனுக்காவே நேத்ரா அந்த மாதிரி உருகிப் போனாள் என்றால்.. விபத்தில் காயம்பட்டு வீழ்ந்திருக்கும் காதலனை எண்ணி ப்ரியா எந்த மாதிரி உடைந்து போயிருப்பாள்..?? அதுவும் அந்த விபத்திற்கு காரணமே அவள்தான் என்று உணர நேருகையில்..!! அசோக்குடைய உடலில் பட்ட காயத்தின் அளவை விட.. ப்ரியாவின் உள்ளத்தில் ஏற்பட்ட காயத்தின் அளவுதான் பெரிதாக இருந்தது..!!

இதயத்தில் இடி விழுந்த மாதிரி இருக்க.. இரு கண்களும் இருட்டிக்கொண்டு வர.. மயங்கி சரிந்து.. சேரை தள்ளிவிட்டவாறு.. தரையில் வீழ்ந்தாள் ப்ரியா..!! அவளுடைய அறைக்கு மிக அருகில் அமர்ந்து வேலை பார்ப்பது கவிதாதான். அறைக்குள் ‘தட்..!!!’ என்று சேர் கவிழும் சப்தம் கேட்டதுமே படக்கென்று எழுந்து பார்த்தாள். ஒருவித பதட்டத்துடனே அறைக்குள் நுழைந்தவள், உள்ளே மயக்கமுற்று கிடந்த ப்ரியாவை காண நேரிட்டதும், அலறியே விட்டாள். கவிதாவின் அலறலை கேட்டு அனைவருமே எழுந்து ஓடி வந்தனர். அவசரம் தொற்றிக்கொன்றவர்களாய் ப்ரியாவின் மயக்கத்தை தெளிய வைத்தனர்.

கண் விழித்த ப்ரியா கண்ணீருடனே விபத்து பற்றிய விஷயத்தை எல்லோருக்கும் தெரிவித்தாள். பதறிப்போன ஹரி உடனே அசோக்கின் வீட்டிற்கு கால் செய்து விபரம் சொன்னான். கோவிந்த் பாலாவின் அறைக்கு ஓடி அவருடைய காரை இரவல் வாங்கி வந்தான். டீமில் இருக்கும் ஐந்து பேருமே அசோக்கை காண ஆபீசில் இருந்து பரபரப்பாய் காரில் விரைந்தனர். வழிநெடுக ப்ரியா புலம்பிக்கொண்டே வந்தாள்.

“எல்லாம் என்னாலதான்.. எல்லாம் என்னாலதான்..!!” தலையில் அடித்துக்கொண்டு அழுகிற ப்ரியாவை அருகிலிருந்த கவிதா ஆறுதலாக அணைத்துக் கொண்டாள்.

“ப்ச்.. அழாத ப்ரியா.. ப்ளீஸ்.. அவனுக்கு ஒன்னும் ஆகாது..!!”

கார் ஓட்டுகிற ஹரியும், அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த கோவிந்தும், பின்புறமாக திரும்பி ப்ரியாவை ஒருமுறை இரக்கமாக பார்த்தார்கள். ‘ப்ரியாவுடைய அழுகை, வெறும் நட்பினால் பிறந்ததா.. இல்லை.. அதையும் தாண்டிய உணர்வினாலா..?’ என்ற சந்தேகம் இப்போது எல்லோருக்குமே வந்திருந்தது. நேத்ராவுக்கு மட்டும், அன்று அழுதுகொண்டே அவள் கோவிந்தின் வீட்டுக்கு ஸ்கூட்டியில் பறந்தது நினைவுக்கு வந்து போனது.

கோவிந்த் அசோக்கின் செல் நம்பருக்கு கால் செய்து, அசோக்கை ஹாஸ்பிட்டலில் சேர்த்தவரிடம் பேசிக்கொண்டே வந்தான். அசோக்கின் நிலைமை பற்றி விசாரித்து தெரிந்து கொண்டான்.

“பயப்படுறதுக்குலாம் ஒண்ணும் இல்லையாம்.. ஹெல்மட் போட்டிருந்ததால தலை எதுவும் அடி இல்ல.. கைலதான் எலும்பு ஃப்ராக்சர் ஆயிருக்கும் போல.. ஆனா.. பெருசா கவலைப்படுறதுக்கு எதுவும் இல்லன்னு சொல்றாரு..!!”

கோவிந்தின் வார்த்தைகள் கொந்தளித்துக் கொண்டிருந்த ப்ரியாவின் மனதுக்கு ஓரளவு நிம்மதியை வார்த்தன. இருந்தாலும் அவளுடைய கண்கள் தொடர்ந்து நீரை சிந்திக்கொண்டேதான் இருந்தன.

கார் மருத்துவமனை சென்றடைந்தது. காரில் இருந்து இறங்கிய ஐந்து பேரும் அசோக் அனுமதிக்கப்பட்டிருக்கும் நான்காவது தளத்திற்கு அவசரமாய் விரைந்தார்கள். தம்பு பள்ளியிலும், ராஜேஷ் அலுவலகத்திலும் சிக்கிக்கொண்டதால், அவர்கள் இன்னும் வந்து சேர்ந்திருக்கவில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவை சார்ந்த அறை ஒன்றுக்கு வெளியே.. அதிர்ச்சியில் உடைந்து போனவளாய்.. அழுது ஓய்ந்து உறைந்து போனவளாய்.. செல்வி அமர்ந்திருந்தாள்..!! மருத்துவர்கள் அழைப்பிற்கும்.. மருந்து வாங்க அலைவதற்குமாய்.. செண்பகம்தான் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாள்.

“அ..அசோக்குக்கு என்னாச்சு..?? எப்படி இருக்கான் இப்போ..??”

கண்களில் நீருடன் தன் முன் நிற்கிற ப்ரியாவை செல்வி அதிர்ச்சியும் ஆச்சரியமுமாய் ஏறிட்டாள். ப்ரியாவும் செல்வியும் சந்தித்துக் கொண்டனர். ‘அசோக்குடன்தான் ப்ரியா ஆறு வருடங்களாக வேலை பார்த்திருக்கிறாள்’ என்ற விஷயம் செல்விக்கு தெரிய வந்தது. ‘அசோக்கிற்கும் ப்ரியாவுக்கும் திருமணப்பேச்சு நடந்திருக்கிறது’ என்ற விஷயம் மீதம் உள்ளவர்களுக்கும் தெரியவந்தது. அனைவருக்குமே ஆச்சரியம்..!! ஆனால் அந்த ஆச்சரியத்தை வெளிப்படுத்த முடியாதவாறு, அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலை அவர்களை தடுத்திருந்தது.

அசோக்கை மருத்துவமனையில் சேர்த்திருந்தவர் இவர்கள் அங்கே சென்றடைந்தபோது கிளம்பியிருந்தார். அவர் சொன்னதைப் போலவே, விபத்தினால் அசோக்கிற்கு பெரிய அளவு சேதம் எதுவும் இல்லை. இடது முழங்கை எலும்பு முறிவும்.. இரண்டு கால்களிலும் சிராய்ப்புகளும் மட்டுமே..!! முறிந்த எலும்பின் நகர்வு சற்று சிக்கலாகிப் போனதால்.. அறுவை சிகிச்சை மூலமே எலும்பை பொருத்தி நிலை நிறுத்த முடியும் என்றாகிப் போனது. ஆபரேஷன் தியேட்டருக்குள் அசோக் அடைபட்டிருக்க, அதற்கு வெளியே அனைவரும் கவலை தோய்ந்த முகத்துடன் காத்திருந்தனர்.

இவர்கள் சென்று சேர்ந்த அரை மணி நேரத்திற்கெல்லாம், ராஜேஷ் தம்புவுடன் ஹாஸ்பிடல் வந்து சேர்ந்தான். கணவனை கண்டதுமே, அதுவரை எங்கேயோ வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருந்த செல்வி, ‘என்னங்க..’ என்று கத்தியவாறு எழுந்து ஓடினாள்.

“அ..அவனுக்கு.. அவனுக்கு..” என்று வார்த்தை வராமல் திணறினாள். உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.

“அழாதம்மா.. ஒண்ணுல்ல.. ஒண்ணுல்ல..!!” ஆறுதலாய் சொன்னவாறே ராஜேஷ் அவளை அணைத்துக் கொண்டான்.

“நைட்டு ஒரு கெட்ட கனவுன்னு காலைலேயே சொன்னனேங்க.. இப்படி ஆயிடுச்சே..??”

“அழாத செல்வி.. ப்ளீஸ்..!!”

“அவன் கை காலெல்லாம் ஒரே ரத்தங்க..!!”

சொல்லிவிட்டு செல்வி கண்ணீரை சிந்த ஆரம்பித்தாள். மனைவியின் அழுகை ராஜேஷையும் பாதித்தது. அவனுடைய கண்களும் மெல்ல கசிய ஆரம்பிக்க, அதை அவசரமாய் துடைத்துக் கொண்டான். அவர்களையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த ப்ரியாவுக்கு, ‘சண்டை போடுறது எங்களுக்கு ஹாபி மாதிரி..!!’ என அசோக் அன்று புன்னகையுடன் சொன்னது ஞாபகம் வந்தது. வெளியே சண்டை போட்டுக்கொண்டாலும் உள்ளுக்குள் அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ‘இந்த குடும்பத்தில் ஒருத்தியாக எனக்கு கொடுத்து வைக்கவில்லையே..’ என்பது மாதிரியான ஒரு ஆதங்கம் அவளையும் அறியாமல் அவளுக்குள் எழுந்தது.

“ஹை.. ப்ரியா சித்தி..!!”

தம்பு கத்திக்கொண்டே அப்பாவின் கைகளில் இருந்து விடுபட்டு, ஓடிவந்து ப்ரியாவை கட்டிக்கொண்டான். சற்றே ஆச்சரியத்தில் திளைத்த ப்ரியாவும், உடனே அவனை ஆரத்தழுவிக் கொண்டாள். ‘ப்ரியாவின் புகைப்படத்தை காட்டி இவள்தான் உன் சித்தி என யாரோ சொல்லியிருக்கிறார்கள்’ என்பது மட்டும் எல்லோருக்கும் புரிந்தது. ஆனால்.. செல்வியாயிருக்கும் என ராஜேஷும்.. ராஜேஷாய் இருக்கும் என செல்வியும்.. அவர்கள் இருவருமாயிருக்கும் என அடுத்தவர்களும் நினைத்துக் கொண்டார்கள்..!! ‘இவள் எப்படி இங்கே..?’ என்று குழம்பிய ராஜேஷுக்கு ப்ரியா பற்றி செல்வியே எல்லாம் சொன்னாள்..!!

நண்பகல் ஒரு மணி அளவில்.. நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து.. அசோக் பொது வார்டுக்கு மாற்றப்பட்டான்..!! ஆனால் சிகிச்சைக்காக அளிக்கப்பட்டிருந்த செடேட்டிவ் அவனை மயக்கத்துடனே வைத்திருந்தது. இடையில் ஒருமுறை அரைகுறை மயக்கத்துடன் அவன் விழித்தபோதே, அவனிடம் ஆறுதலாக ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு, காரில் வந்த அனைவரும் திரும்ப ஆபீஸ் கிளம்பினார்கள்.

‘நான் வரல.. நீங்க கெளம்புங்க..’ என்று ப்ரியா மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள். மயக்கத்தில் இருக்கிற அசோக்கின் அருகில் அமர்ந்தவாறு, அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தனது முட்டாள்த்தனமான கோவத்தினால் கைமுறிந்து சுனங்கிப்போய் படுத்திருக்கும் காதலனை இரக்கத்துடன் பார்த்தாள். அவ்வப்போது அவளையும் அறியாமல் கண்களில் வழிந்த நீரை ரகசியமாய் துடைத்துக் கொண்டாள். யாரும் கவனிக்கவில்லை என்று தோன்றும்போது, தனது கையால் அசோக்கின் கையை பற்றி வாஞ்சையுடன் தடவினாள். ப்ரியாவின் இந்த செய்கைகளை எல்லாம் கவனித்த செல்வி, அவளை சற்றே வியப்பாகவும் வித்தியாசமாகவும் பார்த்தாள்.

மாலையில் அசோக் கண்விழித்து எழுந்ததும்.. எழுந்ததுமே அவன் சகஜமாக பேச ஆரம்பித்ததும்.. அதுவரை அங்கு நிலவிய இறுக்கமான சூழ்நிலை தளர்ந்து.. ஒரு இலகுவான சூழ்நிலை மெல்ல திரும்பியது..!! ப்ரியா மட்டும் அங்கேயே தங்கிவிட்டது அசோக்கை சற்றே ஆச்சரியமுற செய்தது. ஆனால் அவனுடைய மனமோ அவள் மீது ஒருவித வெறுப்பில் உழன்றதால், முகத்தில் எந்தவித உணர்ச்சியும் அவன் காட்டிக்கொள்ளவில்லை. கடந்த சில நாட்களாகவே கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரியாவின் மீது ஏறியிருந்த வெறுப்பு, இன்று உச்சபட்சத்தை எட்டியிருந்ததுதான் காரணம்.

அசோக் ப்ரியாவின் முகத்தை நேரிடையாக பார்ப்பதையே தவிர்த்தான். ஒருமுறை எதேச்சையாக பார்க்க நேர்ந்தபோது, அவள் பார்வையாலேயே பரிதாபமாக கெஞ்ச.. இவன் அவளை அலட்சியம் செய்தான்..!!

அசோக்கிற்கு ஸ்பூனில் சாப்பாடு ஊட்டிக்கொண்டே.. செல்வி அவன் மீதிருந்த அன்பை வெளிப்படுத்தினாள்.. அவளுடைய பாணியில்.. அவளுக்கு தெரிந்த விதத்தில்.. அதிகாரமும், கோபமுமாக..!!

“என்னைக்காவது யார் சொல்றதையாவது காது குடுத்து கேட்டாத்தான.. பொறுமையா போடா பொறுமையா போடான்னு.. எத்தனை நாள் சொல்லிருப்பேன்..?? பைக்கு ஓட்டுறதுனா எதோ ப்ளைட்டு ஓட்டுறது மாதிரி நெனைப்பு.. அப்படியே எடுத்த வாக்குல விர்ர்ருனு பறக்குறது..!!” என்று குழைத்த சாதத்தை அவனுடைய வாயில் திணித்தவாறே முறைப்பாக சொன்னாள்.

“ஷ்ஷ்ஷ்.. ப்பாஆஆஆ.. ஆரம்பிச்சாச்சா..??” அசோக் சலிப்பாக சொன்னவாறே சாதத்தை மென்றான்.

“அப்படி என்ன தலை போற அவசரம்னு கேக்குறேன்..?? எந்த கோட்டையை புடிக்க அம்புட்டு வேகம்..??” செல்வி அவனிடம் கேட்கும்போதே, ப்ரியாவுக்கு இங்கே சுருக்கென்று இருந்தது.

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



/kudumba-sex/aasaiyaaga-pool-umbum-ragasiya-sex/sunni pundaikul vaibathu eppadi xxx tamiltamil kudumba kathaikalthamel nadu கன்னி தங்கை xxx videosகாம வீடியோஓக்குர கூதிதம்பியின் காமம்ஜோடிகளின் காமperiya mulai sex thampathikal Video mattumமுலைசப்புதல்Marbagam elipundai mulai kathai/aasiriyar/aripeduthaabasa-aatam/காம நடிகைஅமலா பால் செக்ஸ் கதைபிசி கொடூர ச*****தமிழ் கிராமத்து பெண் ஓல் விடியோதங்கை புண்டைபண்ணை பெரிய முலை காம கதைகள்மாமியார் தந்த புன்டை ரசம் காம கதைஅண்ணன் தங்கை ஓல் படம் தமிழ்மனைவியை ஏமாற்றி மாமியாரை ஓத்த மருமகன்tamil sex kathaigal comதமிழ் செக்ஸ் விடியோdirty tamil storiestamil chithi pundai nakkum dirty sex storiesகுடும்ப காம கதைகள்செக்ஸ்nanpanin amma kamakathaigal hotel roomilThangaiyudan kadal kamakathaiபூலை சப்பி சுவைக்க ஆரம்பித்தாள் மச்சினிpolice Amma kamakathaiசுகத்தி.செக்ஸ்செக்ஸ்arbunatu women and men sex vedeoதமிழ் பெண் கள் Sex xxxTAMLSEX VTகூத்தி அம்மா செக்ஸ் வீடியோ namma veettu mundaigalVayatha? Kaamama?காதலர் மாற்றி ஓக்கும் காமக்கதைகள்மாமா மருமகள் sex videoஎன் குண்டியில ஓப்பது போல் கற்பனைநாட்டுபெண்கள் செக்ஷ் விடியோமல்லு மாமி அழகான குன்டிஆண்டிXxxTamil Kama Veri Konda aunty sex movieகாம கதைகள் அக்கா மாமா இரவு குத்துanty suthu kamakathaiமூடு ஏத்தும் குடும்ப காம கதைகள்ANNI.MAMIYAR.SEXSTORITAMIL.அக்கா.தங்கையின்.முலைபால்.காம.செக்ஸ்.கதைகள்ஒக்கும் படம்தமிழ் ஆன்டி ஆனுரை வீடியோக்கள்Kalla kama tharum mamanar kolunthanTamilsexstoreswww@comMBBS Maanavi Bathroomil Kaanbikkum Suya Inba VideoAmma bus bathroom sex tamiltamil sex photos tamil sex photosபெண்குறி படம்நடிகை மீனா மார்புஆன்ட்டி முலைப்பால் காம கதைகள்நக்மாவின் செக்ஸ் வீடியோஸ்பெங்களூரு அண்டி நிர்வாண போட்டொசுண்ணி மசாஜ் செய்த மாமிஅத்தை பீ மூத்திரம்செக்ஸ்கதைxxx tamil picVelammal sex kathaigalsexstory in tamilலெசிபியன் செக்ஸ் வீடியோஸ்www.sexyxxx.dll...புண்ட விரும்பிSupar Saxs Anteகாமா விளையாட்டுஸ்ரேயா ஜட்டி பிரா Within photoஅம்பிகா அம்மண படம்அம்மா குண்டி புதியா செக்ஸ் கதைகள்tamil home akka anty sex striesreal tamil sex storyஆபசம்tamil auntys nattukattai kadalil kulikura sex photosxvibeos com மல்லிகை பூ ஒல் sexஇளம்புண்டைபெரிய முலை புதிய படங்கள் தமிழ் அம்மா பெருத்தமுலை சோப்பு போடும் கதைகள்