அன்புள்ள ராட்சசி – பகுதி 57

ச்ச்சே.. ஏனடி பைத்தியம் இப்படி எல்லாம் மனதை அலைபாய விடுகிறாய்..?? ‘உடலை இன்னொருவனுடன் பகிர்ந்துகொண்டவள் என்கிற உண்மையறிந்தும்.. உன்னுடனே வாழ்வினை பகிர்ந்துகொள்வதில் அவன் உறுதியாக இருக்கிறான்..’ என்பதினால் உருவாகிட்ட உவகையோ..?? அவனுக்குத்தான் உன்மீது பித்து என்றால்.. உனக்கெங்கே போயிற்று புத்தி..?? அவனுடைய காதல் அழுத்தமானதுதான்.. ஆனால் அத்தகைய காதலுக்கு நீ பொருத்தமானவளா..?? யோசி..!!!!’

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

என்பது மாதிரி ஒரு எண்ணம் இப்போது அவளுக்குள் தோன்ற.. மீண்டும் கழிவிரக்கத்தின் பிடியில் சிக்கி கண்ணீர் வடிக்க ஆரம்பித்தாள்..!! அவளது உதடுகள் துடிக்க.. மூக்கு விசும்பிக் கொண்டது..!!

‘வேண்டாத நினைப்பெல்லாம் வெட்டி எறிந்துவிடு.. எடுத்த முடிவில் எப்போதும் உறுதியாக இரு..!! அவனுக்கு நீ வேண்டாம்.. அவனுடைய நல்ல மனதிற்கு தகுதியான ஒருத்தியுடன்தான், அவனது இல்வாழ்க்கை அமைந்திட வேண்டும்.. அதை என்றும் மனதில் நிறுத்திக்கொள்..!!’

திரும்ப திரும்ப அந்த மாதிரி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு.. அலைபாய்கிற மனதை ஒருநிலையில் நிறுத்தி வைக்க முயன்றாள்..!! ஆனால்.. அந்த முயற்சியில் அவளால் வெற்றி பெற முடியவில்லை..!! புள்ளிமானாய் துள்ளியோடிய மனதை கட்டிப்போட.. காய்ந்தகொடியாய் துவண்டிருந்த மீராவால் சற்றும் முடியவில்லை..!!

‘கற்பென்பது உடல்ரீதியானதா.. மனரீதியானதா..??’ – மனதின் ஓரத்தில் ஒரு பட்டிமன்றம்.

‘அவன் மீது உனக்கு அளவிலா காதல் உள்ளது.. அவனுக்கு வாழ்க்கைத் துணைவியாவதற்கு, அந்தக்காதலை தவிர வேறென்ன தகுதி வேண்டிக் கிடக்கிறது..??’ – நறுக்கென்று கேள்வி கேட்டது நல்ல மனதொன்று.

‘உண்மையை சொல்லி காதலைப் பெற்றவர்களுக்குத்தான் அதெல்லாம் பொருந்தும்..!! அவனது கண்மூடித்தனமான காதலை உனக்கு சாதகமாய் உபயோகித்துக்கொள்ள.. இப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுகிறாயே.. வெக்கமாயில்லை உனக்கு..??’ – பரிகாசம் செய்து பார்த்து ரசித்தது இன்னொரு மனது.

‘இன்னும் ஐந்தே நாட்கள்தான்.. அப்புறம் எந்தப் பிரச்சினையும் இருக்கப் போவதில்லை..!! அதுவரை பொறுமையாக இரு.. தெளிவாக சிந்தி.. குழப்பத்திற்கு இடம் தராதே..!!’ – தெளிவாகவே குழப்பியது அடுத்தொரு மனது.

அப்படியும் இப்படியுமாய் அல்லாடிய எண்ணங்கள்.. பிறகு வேறொரு நினைவு வந்ததும், ஒரு நிதான நிலையை அடைந்தது..!! சற்றுமுன் அசோக்கிடம் ஃபோனில் பேசிய கடைசி வார்த்தைகளின் நினைவுதான் அது..!!

‘சரி.. அதையும் பாக்கலாம்.. அது எப்படி நம்மள சேர்த்து வைக்குதுன்னு பார்க்கலாம்..!! நீ சொல்ற அந்தக்காதல்.. உன்னையும் என்னையும் இன்னொரு முறை நேருக்கு நேர் சந்திக்க வைக்கட்டும்.. அப்போ நான் அக்ஸப்ட் பண்ணிக்கிறேன்.. நீயும் நானும் ஒண்ணா சேர்றதுதான் விதின்னு..!!’

அந்த நினைவு வந்த பிறகு.. அவள் சிந்திய வார்த்தைகளை அவளே சற்று தீவிரமாக ஆராய்ச்சி செய்த பிறகு.. அத்தனை நேரம் குழப்பத்தில் உழன்று கொண்டிருந்த மனதில் ஒருவித நிம்மதி பரவுவதை அவளால் உணர முடிந்தது..!! அவள் இருந்த நிலைமையில் அந்த முடிவுதான் சரியென அவளுக்கு தோன்றியது.. அசோக்கை போலவே அவளும் காதலின் மீது பாரத்தை போட முடிவு செய்தாள்..!!

‘பார்க்கலாம்.. நானாக எந்த முயற்சியும் எடுத்துக் கொள்ளப் போவதில்லை.. அப்படியே எடுத்தாலும், அது அவனை விட்டு விலகிப் போகிற முயற்சியாகவே இருக்கும்..!! உண்மையிலேயே எங்கள் காதலுக்கு சக்தி இருந்தால்.. எனது முயற்சியையும் மீறி, அந்த காதல் அவனுடன் என்னை சேர்த்து வைக்கட்டும்..!! இன்னும் ஐந்து நாட்கள்.. ஐந்தே ஐந்து நாட்கள்.. அதன்பிறகு அவனை விட்டு நான் வெகுதூரம் சென்று விடுவேன்.. அப்புறம் அவன் என்னை தேடிக்கண்டுபிடிப்பது நடவாத காரியம்..!! எங்களுடைய காதல் உண்மையானதாக இருந்தால்.. அந்தக் காதலுக்கென்று ஒரு வலிமை இருந்தால்.. நானும் அவனும்தான் கரம் கோர்க்கவேண்டும் என்பது விதியாக இருந்தால்.. இன்னும் ஐந்து நாட்களுக்குள், எனது இருப்பிடம் அறிந்து அவனே என் எதிர் வந்து நிற்கட்டும்.. அவனும் நானும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளுமாறு ஆகட்டும்..!! பார்க்கலாம்.. எங்கள் காதலுக்கு எத்தனை ஆற்றல் உள்ளதென்று..!!’

அலைபாய்ந்த மனது இப்போது அமைதியாகிப் போய்விட.. அத்தனை நேரம் உறக்கம் இல்லாமல் உருகிக் கொண்டிருந்த கண்களும், மெல்ல மெல்ல மூடிக் கொண்டன..!! எப்போது உறங்க ஆரம்பித்தோம் என்ற உணர்வே இல்லாமல்.. மீரா நிம்மதியாக நித்திரையில் ஆழ்ந்து போனாள்..!!

இரவு நெடுநேரம் தூங்காமல் விழித்திருந்ததால்.. காலையிலும் அவள் எழுந்து கொள்ள தாமதமானது..!! சுள்ளென்று கன்னத்தில் வெயில் அடித்த போதிலும்.. சுரணையற்று சுருண்டு கிடந்தாள்..!! கடிகாரத்தின் சின்ன முள் ஒன்பதை தொட்ட சமயத்திலும்.. கடைவாயில் நீரொழுக தலையணை நனைத்து கிடந்தாள்..!!

பிறகு.. அவளுக்கு அருகே குப்புற கிடந்த செல்ஃபோன்.. ‘விர்ர்ர்ர்ர்.. விர்ர்ர்ர்ர்…’ என்று பதறி துடித்ததும்.. உடலும், தலையும் சிலிர்த்துக்கொண்டு உறக்கம் கலைந்தாள்..!! இமைகளை பிரித்து ஓரிரு வினாடிகள் மலங்க மலங்க விழித்தவள்.. அப்புறம் குப்புறக் கிடந்தவாறே துள்ளிய அந்த செல்ஃபோனை கையில் எடுத்தாள்..!! புதியதொரு எண்ணிலிருந்து வந்திருந்த அழைப்பு அது..!! ஓரிரு வினாடிகள் குழம்பியவள்.. பிறகு கால் பிக்கப் செய்து.. தூக்கம் நிறைந்த குரலிலேயே சொன்னாள்..!!

“ஹ்..ஹலோ..!!”

“மேடம்.. நான் ஹீசுலியா ட்ராவல்ஸ்ல இருந்து பேசுறேன்..!!”

“ம்ம்.. சொல்லுங்க..!!”

“உங்க ஃப்ளைட் டிக்கெட்ஸ் ரெடி..!! அட்ரஸ் சொன்னிங்கன்னா.. வந்து டெலிவர் பண்ணிடுவோம்..!!”

கரகர குரலில் கேட்டவனுக்கு.. மீரா தனது வீட்டின் முகவரியை சொன்னாள்..!! எப்போ டெலிவர் பண்ணுவிங்க என்று இவள் கேட்க.. இன்னைக்கு ஈவினிங்கே என்று அந்த கரகர குரல் சொல்ல.. தேங்க்ஸ் என்று திருப்தியானாள்..!! காலை கட் செய்து.. செல்ஃபோனை மெத்தையின் ஓரமாய் தூக்கி போட்டாள்..!!

அவளுடைய முகம் உறங்கி வழிந்தாலும், மனம் இப்போது மிக தெளிவாக இருந்தது.. நேற்று இரவு இறுதியாய் எடுத்த முடிவினால் வந்திருந்த தெளிவு அது..!! இரவு மார்போடு அணைத்தபடி படுத்திருந்த அசோக்கின் புகைப்படத்தை இப்போது கையில் எடுத்தாள்.. காதலாக ஒரு பார்வை பார்த்தாள்.. இதமாக ஒரு புன்னகையை சிந்தினாள்.. ஈரமாக ஒரு முத்தம் வைத்தாள்..!! அருகிலிருந்த டேபிளில் புகைப்படத்தை வைத்துவிட்டு.. படுக்கையில் இருந்து எழுந்தாள்..!!

பாத்ரூம் சென்று முகம் கழுவிக்கொண்டாள்.. ப்ரஷ் எடுத்து பேஸ்ட் பிதுக்கிக் கொண்டாள்.. வாய்க்குள் ப்ரஷுடன் வாசலுக்கு வந்தாள்.. கீழே கிடந்த தினமலரை கையில் எடுத்தாள்..!! முதல் பக்கத்திலேயே.. கீழ்ப்புற கால்வாசி பரப்பை அடைத்திருந்தது அந்த செய்தி.. ரெட்ஹில்ஸ் ரெட்டைக்கொலை செய்தி..!! ந்யூஸ் பேப்பரை விரித்து வைத்து.. ஒரு கையை இப்படியும் அப்படியுமாய் அசைத்து பல் துலக்கிக்கொண்டே.. அந்த செய்தியின் ஒவ்வொரு எழுத்தையும் மிக கவனமாக வாசித்தாள்..!!

பல் துலக்கி முடித்ததும் ஏதோ நினைவுக்கு வந்தவளாய், சமயலறைக்கு சென்று.. அந்த பிளாஸ்டிக் கேனை கையில் எடுத்தாள்.. அப்படியே அந்த பெரிய சைஸ் சமையலறை தீப்பெட்டியையும்..!! படுக்கையறைக்கு வந்து விஜயசாரதியின் செல்ஃபோனை கையகப்படுத்தினாள்.. வீட்டுக்கு பின்புறம் சென்றாள்.. சுற்றும் முற்றும் ஒரு பார்வை பார்த்து, யாரும் தென்படவில்லை என்பதை உறுதி செய்துகொண்டாள்..!! செல்ஃபோனை கீழே விசிறி.. கேனில் இருந்த திரவ எரிபொருளை அதன் மீது ஊற்றி.. தீக்குச்சி கிழித்து விட்டெறிய.. குப்பென்று பற்றிக்கொண்டது நெருப்பு..!!

கொழுந்து விட்டெரிகிற தீஜுவாலையை பார்த்தவாறே சிறிது நேரம் சலனமில்லாமல் நின்றிருந்தாள்.. பிறகு சாம்பல் மிச்சத்தை அள்ளிக்கொண்டு மீண்டும் பாத்ரூம் சென்றாள்.. டாய்லட் சின்க்குக்குள் கொட்டி தண்ணீர் திறந்துவிட்டாள்..!! நிம்மதியாக ஒரு பெருமூச்சு விட்டாள்..!!

அப்படியே ஷவருக்கு அடியில் சென்று நின்று.. ஜில்லென்று சிதறிய நீரில் நனைந்தாள்.. குளித்து முடித்து பாத்ரூமில் இருந்து வெளிப்பட்டாள்..!! வேறு உடை மாற்றிக்கொண்டு கண்ணாடி முன் வந்து நின்றாள்.. சீப்பு எடுத்து கேசம் வாரியபோதுதான் அதை கவனித்தாள்.. ப்ரேஸ்லட்டில் தொங்குகிற பென்டன்டை காணவில்லை..!!!!

‘ப்ச்’ என்று ஒரு சலிப்பை உதிர்த்தாள்.. ‘எங்கே விழுந்திருக்கும்..’ என்று நெற்றியை கீறினாள்.. ‘ஒருவேளை அங்கே..??’ என்பது மாதிரி ஒரு எண்ணம் தோன்றவும் உடல் சிலிர்த்துக் கொண்டது..!! ‘சேச்சே.. அப்டிலாம் இருக்காது.. வேற எங்கயாவது விழுந்திருக்கும்..’ என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள்..!!

படுக்கையறையில் தேடிப் பார்க்கலாம் என்று அவள் திரும்பிய போதுதான்.. திடீரென..

“கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்…!!!!”

என்று காலிங்பெல் சப்தம் எழுப்பியது..!! அந்த சப்தத்தை கேட்டதுமே, மீரா அப்படியே ப்ரேக் போட்ட மாதிரி டக்கென்று நின்றாள்.. கண்களில் மெலிதான ஒரு மிரட்சியுடன் திரும்பி, வாசற்கதவை வெறித்தாள்..!! அவளுடைய உடலில் ஒருவித பதற்றம் ஊற்றெடுக்க.. உதடுகள் சன்னமான குரலில் முணுமுணுத்தன..!!

“போலீஸ்..!!!!”

மீராவின் பென்டன்டை கைப்பற்றியதிலும்.. ஸ்ரீனிவாச பிரசாத்தை பேச விடாமல் தடுத்ததிலும்.. அசோக் மிகுந்த திருப்தியுற்றிருந்தான்..!! போலீசின் கவனத்தை மீராவின் பக்கம் இருந்து திருப்பியாயிற்று.. அவர்கள் அவளை நெருங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று நினைத்திருந்தான்..!! அவன் செய்த விஷயங்கள் மீராவுக்கு மிகவும் சாதகமான விஷயங்களாக அமைந்த போதிலும்.. போலீஸ் மீராவை நெருங்குவதை தவிர்க்கும் அளவிற்கு போதுமானதாக இருக்கவில்லை..!!

அந்தவகையில் அசோக்கை விட மீரா மிகவும் கூர்மையாக இருந்தாள் என்றுதான் சொல்லவேண்டும்..!! விஜயசாரதியை பார்ப்பதற்கு கிளம்பும்போது, சமையலறை சென்று அந்த கத்தியை எடுத்து தனது கைப்பைக்குள் திணித்தாளே.. அந்த நொடியே.. அடுத்தநாள் தன் வீட்டு வாசலில் வந்து போலீஸ் நிற்கும் என்பதை தெளிவாக அறிந்தே வைத்திருந்தாள்..!! அதனால்தான்.. இப்போது கதவை திறந்ததும்.. எதிர்ப்பட்ட இரண்டு காக்கி உடுப்புகளை பார்த்து.. அவளால்..

“எஸ்..!!” என்று இயல்பாக சொல்ல முடிந்தது..!!

கான்ஸ்டபிள்கள் இருவர் மீராவின் வீட்டை அணுகியிருந்த அதே சமயத்தில்.. அசோக் ரெட்ஹில்ஸ் காவல் நிலையத்தில்தான் இருந்தான்.. அவனுடன் ஸ்ரீனிவாச பிரசாத்தும் இருந்தார்..!! இருவரும் சேர்ந்து.. முதல்நாள் நடந்த சம்பவத்தினைப் பற்றி.. ஒரு ஃபார்மல் ஸ்டேட்மன்ட் எழுதி தர வேண்டி இருந்தது..!! அப்புறம்.. முதல்நாள் மலரவன் கேட்டுக்கொண்ட மாதிரி.. இருவரது கைரேகை பிரதிகளையும் ரெட்ஹில்ஸ் போலீஸ் வசம் ஒப்படைத்தனர்..!! மலரவன் மேலும் சில கேள்விகளுடன் தயாராக இருந்தார்.. அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் அந்த கேள்விகளுக்கு பதில் சொல்லி அவரை திருப்தி செய்தனர்..!!

“​​விஜய சாரதியோட செல்ஃபோன் இன்னும் கெடைக்கல..!! பட்.. அவரோட செல்நம்பர் வச்சு.. அவருக்கு நேத்து வந்த கால்லாம் ​ட்ரேஸ் ​பண்ணினோம்..​ ​லாஸ்டா உங்க நம்பர்ல இருந்துதான் அந்த நம்பருக்கு கால் போயிருக்கு.. ஐ மீன்.. கொலை நடந்த கொஞ்ச நேரத்துக்கு அப்புறம்..!!” மலரவன் சொல்லிவிட்டு அசோக்கை கூர்மையாக பார்த்தார்.

“ஓ..!!” அசோக் திகைப்பது போல நடித்தான். அவசரமாய் தன் செல்ஃபோன் எடுத்து பார்த்தான்.

“அந்த காலை யாரோ அட்டண்ட் பண்ணிருக்காங்க.. ஒருநிமிஷம் வரை அந்த​ கால் போயிருக்கு..!!”​

“தெ..தெரியல ஸார்..!! என் மொபைல பேன்ட் பாக்கெட்ல வச்சிருந்தேன்.. தானா டயல் ஆகி இருக்கும்ன்னு நெனைக்கிறேன்.. நிச்சயமா நானா பண்ணல..!!”

“கொலை பண்ணினவங்கதான் செல்ஃபோனை எடுத்துட்டு போயிருக்கனும்.. அவங்கதான் அந்த காலையும் அட்டன்ட் பண்ணிருக்கணும்..!!”

“இருக்கலாம் ஸார்..!! நான் ஆக்சிடண்டா டயல் பண்ணின மாதிரி.. அவங்களும் ஆக்சிடண்டா கால் பிக்கப் பண்ணிருக்கலாம்..!! தெரியல ஸார்.. ஐம் நாட் ஷ்யூர்..!!”

அசோக்கின் சமாளிப்பை நம்புவதை தவிர மலரவனுக்கு வேறு வழியிருக்கவில்லை. ​ அசோக்கிற்கு பொய் சொல்ல எந்த அவசியமும் இல்லை என்று அவர் உறுதியாக நம்பியதால்.. அவன் சொன்ன அந்த ஆக்சிடன்ட் டயல் லாஜிக்கை ஒரு பெருமூச்சுடன் ஏற்றுக் கொண்டார்..!! பிறகு.. ஸ்ரீனிவாச பிரசாத் கேட்ட சில பொதுவான கேள்விகளுக்கும்.. மலரவன் பதிலளித்தார்..!!

“மூர்த்தி ஸார் வந்தாச்சா..??”

“ம்ம்.. காலைலேயே வந்துட்டார்..!!”

“இன்வெஸ்டிகேஷன்ல ஏதாவது இம்ப்ரூவ்மன்ட்..??”

“ப்ச்.. எதுவும் இல்ல ஸார்..!! என்ன மோட்டிவ்னு கூட இன்னும் தெரியல..!! பட்.. இன்வெஸ்டிகேஷன் புல் ஃஸ்விங்ல ஸ்டார்ட் பண்ணிருக்கோம்.. ரெண்டு ஆங்கிள்ல இன்வெஸ்டிகேஷன் மூவ் பண்ண நெனைச்சிருக்கோம்..!!”

“ஓ.. என்ன ஆங்கிள்ஸ்..??”

“ஒன்னு.. மூர்த்தி ஸாரோட பிஸினஸ் எதிரிங்க யாராவது, அவர் மேல இருக்குற பகைல.. அவரோட ஒரே பையனை தீர்த்து கட்டிருக்காங்களான்னு..!! இன்னொன்னு.. அந்த காசிப்பயலோட ட்ரக் பெட்லிங் கேங்ல யாராவது.. அவன் மேல இருக்குற பகைல இதைப் பண்ணிருக்கலாமான்னு..!!”

“ஓகே ஓகே.. குட்..!!”

எல்லா சம்பிரதாயங்களையும் முடித்துவிட்டு.. அசோக்கும் ஸ்ரீனிவாச பிரசாத்தும் அங்கிருந்து கிளம்ப.. ஒருமணி நேரத்துக்கும் மேலாகிப் போனது..!!

“ம்ம்.. அப்புறம் இன்னொரு விஷயம் தம்பி.. கேஸ் கோர்ட்டுக்கு வர்றப்போ.. நீ வர்ற மாதிரி இருக்கும்..!! உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே..??” கிளம்புகிற சமயத்தில் மலரவன் அசோக்கிடம் கேட்க,

“இ..இல்ல ஸார்.. ஒன்னும் ப்ராப்ளம் இல்ல..!!” அவன் புன்னகையுடன் சொல்லிவிட்டு திரும்பி நடந்தான்.

அசோக்கும், ஸ்ரீனிவாச பிரசாத்தும் மலரவனின் அலுவலகத்தை விட்டு வெளியே வந்தனர்.. வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஸ்ரீனிவாச பிரசாத்தின் ஜீப்பில் ஏறிக் கொண்டனர்..!! சாவி திருகி ஜீப்பை கிளப்பினார் ஸ்ரீனிவாச பிரசாத்.. ஆக்சிலரேட்டரை மிதித்து வேகம் கூட்டினார்..!! அந்த ஜீப்.. காவல்நிலைய வளாகத்தின் நுழைவாயிலை தாண்டியபோது.. எதிர்ப்பக்கம் இருந்து இன்னொரு ஜீப் க்ராஸ் செய்து, காவல் நிலையத்துக்குள் நுழைந்தது..!! அந்த ஜீப்பில்.. பின் சீட்டில்.. அமர்ந்திருந்தாள்.. மீரா..!!!

ஒரு ஜீப்பில்.. ‘அடுத்து என்ன செய்யப் போகிறோம்?’ என்ற கவலை தோய்ந்த முகத்துடன் அசோக்..!! அடுத்த ஜீப்பில்.. எதைப் பற்றிய அக்கறையும் இல்லாமல்.. எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மீரா..!! இரண்டு ஜீப்புகளும் ஒன்றை ஒன்று எதிரும் புதிருமாய் க்ராஸ் செய்து கொண்டன.. அசோக்கும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள வாய்ப்பில்லை..!! இருவரையும் சந்தித்துக்கொள்ள வைத்து.. அவர்களது காதலுக்கு உதவி செய்கிற மாதிரி ஒரு எண்ணம்.. பாழாய்ப்போன அந்த விதிக்கும் வரவில்லை..!!

அடுத்த ஐந்தாவது நிமிடம்.. மீரா மலரவனின் முன்பு அமர்ந்திருந்தாள்..!! அவளுடைய இதயத்தின் துடிப்பு வழக்கத்தைவிட அதிகமாயிருந்தது.. ஆனால் அந்த பதற்றத்தை தனது முகத்தில் காட்டாமல், மிக லாவகமாக மறைத்திருந்தாள்..!! சில வினாடிகள் அவளை ஏற இறங்க பார்த்த மலரவன்.. பிறகு மிக இயல்பாகவே தன் விசாரணையை ஆரம்பித்தார்..!!

“இது ஜஸ்ட்.. ஒரு ஃபார்மல் என்கொய்ரிதான்..!! நீங்க எதுவும் நெர்வஸ் ஆகிக்க தேவை இல்ல..!!”

“இ..இல்ல ஸார்.. ஆகல.. சொல்லுங்க..!!”

“ஹ்ம்ம்.. ந்யூஸ் பேப்பர் பாத்திருப்பிங்கன்னு நெனைக்கிறேன்….??”

“ம்ம்.. பார்த்தேன் ஸார்.. பாத்ததுக்கு அப்புறந்தான் எனக்கு விஷயமே தெரிஞ்சது.. அப்படியே.. I was shocked..!! எப்படி சொல்றதுன்னு தெரியல.. I.. I just.. I couldn’t believe that..!!”

பொருத்தமான ஆங்கில வார்த்தைகளை உபயோகித்து.. அழுதுவிடுகிற குரலில் சொன்னாள் மீரா..!! மிக திறமையாகவே நடித்தாள் என்றுதான் சொல்லவேண்டும்.. முணுக்கென்று அவளுடைய கண்களில் ஒருதுளி கண்ணீர் பூத்தது.. அதை அவசரமாக கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்..!! அவளுடைய நடிப்பை மலரவன் அப்படியே நம்பிவிட்டார் போல தோன்றியது.. அவளது அழுகை அவரிடம் ஒரு பதற்றத்தை கொடுத்திருந்தது..!!

“ப்ளீஸ் மிஸ்.. கண்ட்ரோல் யுவர்செல்ஃப்..!!”

என்றார் கனிவான குரலில். உடனே மீரா ஒருமுறை மூக்கை விசும்பிக் கொண்டாள். விசும்பிக்கொண்டவள், ஒருவித குசும்புடன் கேட்டாள்.

“யா..யார் பண்ணாங்கன்னு கண்டுபிடிச்சாச்சா ஸார்..??”

“இன்னும் இல்ல.. இப்போத்தான் இன்வெஸ்டிகேஷன் ஆரம்பிச்சிருக்கோம்.. கூடிய சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவோம்..!!”

“ம்ம்..!!
​​
“ஆக்சுவலி.. விஜய சாரதியோட செல்ஃபோன் எங்களுக்கு இன்னும் கெடைக்கல..!! பட்.. அவரோட செல்லுக்கு வந்த கால்லாம் எங்களால கண்டு பிடிக்க முடிஞ்சது.. அது மூலமாத்தான் உங்க நம்பர் எங்களுக்கு கெடைச்சது..!!”

“ம்ம்.. புரியுது ஸார்..!!”

“அவர் இந்தியா வந்து ரெண்டு நாள்தான் ஆகுது.. அதுக்குள்ள அஞ்சாறு தடவை உங்களுக்கு கால் பண்ணி பேசிருக்காரு.. இல்லையா..??”

“எஸ்..!!

“ஹ்ம்ம்.. நேத்து ஈவினிங் நீங்க எங்க இருந்தீங்கன்னு சொல்ல முடியுமா..??”

மலரவன் அந்த மாதிரி கேட்டதும், மீரா படக்கென உஷாரானாள். நேற்று இறுதியாக விஜயசாரதியுடன் ஃபோனில் பேசியபோது, தான் ஆட்டோவில் வந்துகொண்டிருந்தது எந்த இடம் என்று அவசரமாக யோசித்தாள். யோசித்தவள்,

“அண்ணாநகர்ல ஷாப்பிங் போயிருந்தேன்.. மத்தபடி என் வீட்லதான் இருந்தேன்..!!” என்றாள் இயல்பான குரலில்.

“உங்க வீடு சிந்தாதிரிப்பேட்டைல..??”

“எஸ்..!!”

“உங்களுக்கும் விஜயசாரதிக்கும் எப்படி பழக்கம்னு நான் தெரிஞ்சுக்கலாமா..??”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



Othukupuram otha kathaikurup sex tamilkamakathailomaster-spb.rukama kathaitamilauntybfsex tamil kathiதமிழ் காமகடல் imagesகாமகதைtamil actress kamakathaitamil kamaveri.com/periyamma kathaiPool umbum kathali tamil sex storytamil new sexstoriesசுண்ணி ஊம்பல் காமகதைVukku xxxமனைவியின் நிர்வாண நடை கதைஅண்ணிகூதிதமிழ் செக்ஸ் புக் அம்மா சித்தப்பாtamil kamaveri kathaikal comicsTamil kama kathakal cththi periyamaஅனுஸ்க்கா சாெ க்ஸ் விடியாேதிருப்பூர் ஆண்டி முலை படம்கேரளம் கிளவிகள் செக்ஸ் படம்தமிழ் செக்ஸ் விடியோ பெரிய முலைdilto பயன்அக்கா அம்மா ஊட்டி காமக்கதைகுண்டு தமில் "xvibeos"பெண்கள் எப்போது ஓகலாம்பால் முலை செக்ஸ் விடியோ 3 G puvana chithi olukathaikavitha kolunthan sex kathaiபாத்ரும் ஆண்டி காம கதைகள்இரட்டை லெஸ்பியன் அண்ணன் தங்கை அண்ணி காம கதைகள்சகோதரி காம கதைரீமாசென் அபச புண்னட படம்அத்தை காம கதைகாமத்தில் திளைக்கும் மனம் free download pdfmamiyar mulai kamakadhaiகிழவனை ஓழ் அக்கா கதைதமிழ்ஆண்டிகுளிக்கும் முறை xnxx comtamil kamakaghaikal newபுன்டைக்குல்நிர்வான படம் காம கதைஅக்கா புண்டைpundaiimage with vinthuதாத்தா காம வெறி காம கதைபருவ தாகம் காமக்கதைமீரா ஜாஸ்மின் அபச செக்ஸ் படம்தமிழ் விதவை புண்டைNew gay sex story tamil kanavan matri tamil kamakathikal comகேரளா செக்ஸ்வீடியோTamil kanni penkal sexviteosகூதிரதா ஆன்டி செக்ஸ்விடியோஸ்புண்டை பழம்மூலை.பெரிய.பெண்கள்.செஸ்Sexanubavangalசெம்ம செக்ஸ் வீடியோtamil new kamakataiஆடை இல்லாத மேனிappavai okum magal sex kathaikalsex kama keramathu pen kuleyal vedeyo padamமஜா மல்லிகாதங்கசி செக்ஸ் கதைகள்நல்ல ஓழ் படம்.அம்மா, அப்பா மகன் ஹோட்டல் ரூம் உடலுறவு sunni umbum girl sex kathaitantai magal kama kataiஆய் காட்டில் சுகம் காமாகதைகள்sex tamil story comஆண்டிகள் செம மூடு செக்ஸ் வீடியோKalla kamam tharum mamanarwww tamilscandals xyz aunty pondatti moodu etrum pundai sugamநடிகை மாதவி காம கதைகள்அக்கா செக்ஸ்அம்மா இல்லாத சமயத்தில் மகன் வேலைகாரியின் செக்ஸ்