ஆண்மை தவறேல் – பகுதி 9

“இங்க பாரு அசோக்கு.. நீ புடிச்ச புடிலையே நிக்காத.. நான் சொல்றதயும் கொஞ்சம் கேளு..!!”

“ப்ச்.. நீ என்ன புதுசா சொல்லப் போற..?”

“அந்தப்பொண்ணு மஹாலக்ஷ்மி கணக்கா இருக்குது அசோக்கு.. கொள்ளை அழகா இருக்குது.. கொழந்தை மாதிரி சிரிக்குது.. எங்கிட்ட கூட எவ்வளவு மரியாதையா பேசுச்சு தெரியுமா..??”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“ஓஹோ..?? பொண்ணு பாக்குற படலம்லாம் ஏற்கனவே முடிஞ்சு போச்சு போல இருக்கு..??”

“நேத்துத்தான் போய் நான் பாத்துட்டு வந்தேன் அசோக்கு.. அந்தப்பொண்ணு கெடைக்க நீ குடுத்து வச்சிருக்கணும் கண்ணு.. அவளை கட்டிக்கோயா.. என் ராசால்ல..?”

“போ கௌரம்மா.. நீயும் அவர் மாதிரியே அர்த்தம் இல்லாம பேசிக்கிட்டு..!! யாருக்காகவும் நான் என் முடிவை மாத்திக்கிறதா இல்ல..!!”

அசோக் அந்தமாதிரி பிடிவாதமாக சொல்ல, கௌரம்மா சற்றே எரிச்சலானாள். சில வினாடிகள் அசோக்கின் முகத்தையே சலிப்பாக பார்த்தவள், அப்புறம் அவனுடைய கையை பற்றி இழுத்தாள்.

“ஏய்.. என்ன.. எங்க இழுத்துட்டு போற என்னை..?”

“என்கூட வா.. உனக்கு ஒன்னு காட்டுறேன்..”

கௌரம்மா அசோக்கை வலுக்கட்டாயமாக பிடித்து, ஹாலுக்கு இழுத்து சென்றாள். அசோக்கும் என்னவென்று புரியாமலே அவளை பின்தொடர்ந்தான். ஹாலுக்கு கூட்டி சென்ற கௌரம்மா, டீப்பாய் மீதிருந்த அந்த புத்தகத்தை எடுத்தாள். அப்புறம் அந்த புத்தகத்துக்குள் செருகியிருந்த அந்த கவரை எடுத்தாள்.

“என்னது இது..?” அசோக்கிற்கு எதுவும் புரியவில்லை.

“ம்ம்.. அந்தப்பொண்ணோட ஃபோட்டோ..!! இந்த மூஞ்சியை ஒரு தடவை பாத்துட்டு.. அப்புறம் புடிக்கலைன்னு சொல்லு பாக்கலாம் ..!!”

சொன்ன கௌரம்மா அந்த கவருக்குள் இருந்த ஃபோட்டோவை எடுத்து, அசோக்கின் முகத்துக்கு முன்பாக காட்டினாள். அசுவாரசியமாக அந்த படத்தின் மீது பார்வையை வீசிய அசோக், அப்படியே உச்சபட்ச அதிர்ச்சியில் தத்தளிக்க ஆரம்பித்தான். அவனுடைய உடலெல்லாம் ஜிவ்வென்று ஒருவித சிலிர்ப்பு..!! அந்த போட்டோவில்.. அவள் அழகாக புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

நந்தினி..!!!!!!!

அசோக் அதை சுத்தமாக எதிர்பார்த்திரவில்லை. அதிர்ச்சியில்.. பிரம்மை பிடித்தவன் மாதிரி உறைந்து போய் நின்றிருந்தான். ‘நந்தினியை கல்யாணம் செய்து கொள்ளத்தானா எல்லோரும் என்னை கட்டாயப் படுத்துகிறார்கள்..? இரண்டு வருடங்களாக எனக்கு கீழே வேலை பார்த்த சதானந்தத்தின் மகள்தானா நந்தினி..? ஒரு காலத்தில் இவளை திருமணம் செய்து கொள்வதற்காக, இவளுடைய காலில் விழக்கூட தயாராக இருந்தேனே..? இன்று இவளை திருமணம் செய்து கொள்ள சொல்லி.. ஆளாளுக்கு என் காலில் விழாத குறையாக கெஞ்சுகிறார்களே..? நானும் வசதியான வீட்டுப் பெண்தான் என்று திமிராக சொன்னாளே..? அந்த வசதி எல்லாம் இப்போது எங்கே போயிற்று..?’

அன்பு, ஆச்சரியம், கோபம், ஏக்கம், கருணை, வெறுப்பு.. என அசோக்கின் மனதுக்குள் ஒரு கலவையான உணர்ச்சிக் கொந்தளிப்பு..!! செய்வதறியாது திகைத்து அவன் அசையாமல் நின்றிருக்க,

“என்ன அசோக்கு.. பேச்சையே காணோம்..? பொண்ணோட அழகுல அப்படியே மூச்சடைச்சு போயிட்டியா..??”

கௌரம்மா இளித்தபடியே கேட்ட கேள்விக்கு அசோக்கிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. நந்தினியின் ஃபோட்டோவையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனின் இதழ்கள் மட்டும், இங்க்லீஷில் எதையோ முணுமுணுத்தன.

“IT’S INTRESTING..!!!!!”

அத்தியாயம் 8

அதன்பிறகு இரண்டு நாட்கள் கழித்து..

அந்த மருத்துவமனையின் வரவேற்பு பகுதியில் கிடந்த நாற்காலிகளில் ஒன்றில் நந்தினி அமர்ந்திருந்தாள். அவளுடைய கன்னத்தை கையொன்று தாங்கியிருக்க, அவளது கண்களில் கவலை தேங்கியிருந்தது. ஆறு வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது அவளது தேகத்தில் சதைப்பற்று கூடி சற்று மினுமினுப்பாக தோன்றினாலும், அவளது மனமோ எதைப்பற்றியோ எண்ணி மருகிக்கொண்டு, முகம் களையிழந்து காட்சியளித்தது. கவலையில் இருந்தவள் அவ்வப்போது கண்களை சுழற்றி ஹாஸ்பிட்டல் வாசலையும் பார்த்துக் கொண்டாள்.

அப்போதுதான் வாசலில் அந்த ஆட்டோ வந்து அவசரமாய் நின்றது. பின் சீட்டில் அந்த ஆள்.. முரட்டு தேகமும், முள்முள்ளாய் தாடியும், முகமெங்கும் வழியும் கண்ணீருமாய்..!! அவருக்கருகில் அந்த பெண்மணி.. நிறைமாத வயிறும், தலையை சுற்றி துணிக்கட்டும், அந்த கட்டை மீறி நெற்றியில் வழியும் இரத்தமுமாய்..!! அந்தப்பெண்மணியும்.. வலியிலும், வேதனையிலும் ‘ஆ.. ஆ.. ஆ.. ஆ..’ என்று அரற்றிக் கொண்டு இருந்தாள்..!!

அவர்களைப் பார்த்ததுமே நந்தினியிடம் ஒரு பதற்றம் பரவ, நாற்காலியில் இருந்து எழுந்துகொண்டாள். ஆட்டோவை விட்டு கீழே இறங்கிய அந்த முரட்டு ஆள், இப்போது தன் லுங்கி மடிப்பை தடுமாற்றமாய் பிரிக்க, திரும்பி பார்த்த ஆட்டோ டிரைவர் கத்தினார்.

“துட்டுலாம் ஒன்னும் வேணாய்யா.. சீக்கிரம் உன் வூட்டம்மாவை உள்ள தூக்கினு போ..!!”

ஒருகணம் திகைத்த அந்த ஆள் அப்புறம் தன் மனைவியை இரண்டு கைகளிலும் அள்ளிக்கொண்டார். அவருடைய கண்கள் இரண்டும் அங்குமிங்கும் அலைபாய, அவசரமாய் ஹாஸ்பிட்டலுக்குள் ஓடி வந்தார். எதிர்ப்பட்ட நந்தினியிடம்,

“எ..எமர்ஜன்சி வார்டு எங்கம்மா இருக்குது..?” என கேட்டார் பதட்டமான குரலில்.

“நே..நேரா போய்..” என்று முதலில் கையை நீட்டிய நந்தினி, அப்புறம்

“என் பின்னால வாங்க.. நான் கூட்டிட்டு போறேன்..”

என்றுவிட்டு அந்த ஆளுக்கு முன்னால் ஓடினாள். அவரும் தன் மனைவியை இரு கைகளிலும் ஏந்திக்கொண்டு, ‘ஒன்னுல்லம்மா.. ஒன்னுல்லம்மா.. இதோ வந்துட்டோம்மா..’ என்று வேதனையில் துடிக்கும் மனைவிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டே, நந்தினியை பின் தொடர்ந்தார்.

“என்னங்க ஆச்சு.. தலைலாம் ரத்தம்..?” நந்தினி ஓடிக்கொண்டே கேட்க,

“புள்ளத்தாச்சி பொம்பளையை கார்ல இடிச்சுனு.. நிக்காம கூட போயிட்டான்மா.. ஒரு பொறம்போக்கு தே..புள்ள..!!” அவர் அவள் பின்னால் ஓடிக்கொண்டே சொன்னார்.

“பாரம் ஏதும் புல் பண்ணனுமாம்மா..?” அவர் கவலையாக கேட்க,

“எமர்ஜென்சிக்கு அதெல்லாம் தேவையில்லங்க.. அப்புறமா ஃபில் பண்ணிக்கலாம்..” நந்தினி ஆறுதலாய் சொன்னாள்.

அவசர சிகிச்சை பிரிவை அடைந்ததும் நாலைந்து மருத்துவமனை ஊழியர்கள் எதிர்ப்பட்டார்கள். ஓடிவரும் இவர்களை பார்த்ததும், உடனே அவர்களையும் ஒரு பதற்றம் தொற்றிக்கொண்டது. உடனடியாய் ஒரு ஸ்ட்ரெச்சர் இழுத்துவரப்பட்டது.

“அப்படியே ஸ்ட்ரெச்சர்ல வைங்க..!! என்ன ஆச்சு..??” அந்த கேரளத்து நர்ஸ் கவலையாய் கேட்டதற்கு,

“கார் மோதிடுச்சும்மா..!!” மனைவியை ஸ்ட்ரெச்சரில் கிடத்திக்கொண்டே அவர் சொன்னார்.

பணியாளர்களால் அந்த ஸ்ட்ரெச்சர் உள்ளே இழுத்து செல்லப்பட, கதவு மூடப்பட்டது. உள்ளே நுழைய முயன்ற அவரை, நர்ஸ் தடுத்தாள்.

“இருங்க இருங்க.. நீங்க உள்ள போககூடாது.. இங்கயே இருங்க..!!”

அவ்வளவு நேரம் பரபரப்பாய் இருந்த அந்த முரட்டு ஆசாமி, இப்போது சட்டென சோர்ந்து போனார். அப்படியே மடிந்து போய் தரையில் பொத்தென்று அமர்ந்தார். குழந்தை மாதிரி கேவிக்கேவி அழ ஆரம்பித்தார்.

“எப்படியாவது என் பொண்டாட்டியும் புள்ளையும் காப்பாத்தி கொடுத்திடும்மா.. உன்னை என் தெய்வமா நெனச்சு கேக்குறேன்..!!”

என்றார் அந்த நர்ஸை ஏறிட்டு..!! அவருடைய மனைவிக்கு சிகிச்சை உள்ளே மருத்துவர்கள் செய்ய, இங்கே இவர் சம்பந்தமே இல்லாமல் நர்ஸிடம் கெஞ்சிக்கொண்டிருந்தார். அந்த காட்சியைப் பார்த்த நந்தினியோ உடலெல்லாம் சிலிர்த்துப் போனாள். என்னவென்று சொல்லமுடியாத மாதிரி ஒரு உணர்ச்சி அவளுடைய மனதை பிசைந்தது. கண்களில் லேசாய் நீர் துளிர்த்தது. ஒரு கணம் தன் பார்வையை மெல்ல சுழற்றி, அந்த மருத்துவமனையை நாலாபுறமும் பார்த்தாள்.

எங்கெங்கும்.. நோயாளிகள்.. அவர்களுடன் வந்தவர்கள்.. மருத்துவர்கள்.. அடுத்தவர் உயிரைக் காப்பாற்ற அங்குமிங்கும் கவலையாய் ஓடித்திரிந்த பணியாளர்கள்..!! எத்தனை விதமான நோய்கள்.. எத்தனை விதமான சிகிச்சைகள்..? எத்தனை விதமான வலிகள்.. அதற்கு எத்தனை விதமான மருந்துகள்..? எத்தனை விதமான கண்ணீர்கள்.. அந்த கண்ணீர் துடைக்க எத்தனை விதமான விரல்கள்..? இறந்த ஒருவருக்காக உறவினர்கள் அழுது அரற்றிக்கொண்டிருக்க.. பிறந்த குழந்தை ஒன்று அடுத்த அறையில் விடாமல் வீறிட்டுக் கொண்டிருக்கிறது..!! வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர விரும்புவர்கள், முதலில் வந்து பார்க்க வேண்டிய இடம் மருத்துவமனை என்று தோன்றியது..!!

“கொ..கொஞ்சம் எழுந்து இந்த சேர்ல உக்காந்துக்கங்க..”

நந்தினி அந்த ஆளின் தோளைப்பற்றி எழுப்பி, அருகில் கிடந்த நாற்காலியில் அமர வைத்தாள். இன்னும் அழுது கொண்டே இருந்த அவர் முன் மண்டியிட்டு அமர்ந்து, மலர்ந்த முகத்துடனும், இதமான குரலுடனும் சொன்னாள்.

“இங்க பாருங்க.. உன் வொய்ஃபுக்கும், குழந்தைக்கும் ஒன்னும் ஆகாது.. அழாதீங்க.. கண்ணை தொடைச்சுக்காங்க..!!”

அவள் அந்த மாதிரி ஆறுதலும், நம்பிக்கையுமாய் சொல்ல, இப்போது அவருடைய அழுகை பட்டென நின்றது. கருணை கொஞ்சும் நந்தினியின் முகத்தையே கொஞ்ச நேரம் கண்ணிமைக்காமல் பார்த்தார். அப்புறம் தன் கண்களை அவர் துடைத்துக் கொண்டபோது, அவருடைய முகத்தில் ஒரு தெளிவு தெரிந்தது. மெலிதாக புன்னகைத்தார்.

“என் பேர் சூசை.. அது என் பொஞ்சாதி.. மரியம்..!! உன் பேர் என்ன பாப்பா..??”

“எ..என் பேர் நந்தினி..!!”

“ம்ம்.. எட்டு வருஷம் கழிச்சு இப்போத்தான் உண்டாயிருக்கா.. உண்டான நாள்ல இருந்தே நானும் மரியமும் தெனமும் சண்டை போட்டுப்போம்..!! அவளுக்கு பொண்ணுதான் வேணுமாம்.. சிங்கக்குட்டி மாதிரி பையன்தான் பொறப்பான்னு நான் சொல்லுவேன்..!! ஹஹஹா.. ஹஹஹா..!!” சிரித்தவர் உடனே ‘லொக்.. லொக்..’ என இருமினார்.

“க..கவலைப்படாதீங்க.. உங்க விருப்பப்படியே பையன் பொறப்பான்..”

“இல்ல இல்ல.. பொண்ணுதான் பொறக்கும் பாப்பா.. பொண்ணுதான் பொறக்கணும்.. அப்போதான் என் பொண்டாட்டி இன்னும் சந்தோஷப்படுவா..!!” அவசரமாக அவர் சொன்னதைக்கேட்டு நந்தினி திகைத்துக் கொண்டிருக்கும்போதே, அவர் திடீரென,

“என் பொண்டாட்டிக்கும், பொண்ணுக்கும் ஒன்னும் ஆயிடாதுல பாப்பா..??” என்று ஏக்கமாய் கேட்டார்.

“ஒன்னும் ஆகாதுங்க.. ரெண்டு பெரும் நல்லபடியா பொழைச்சு வருவாங்க..!!”

நந்தினி ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அவளுடைய செல்போன் பதறியது. எடுத்துப் பார்த்தவள், அவசரமாய் கால் பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டாள்.

“வ..வந்துட்டீங்களா அங்கிள்..? அங்க.. ரிசப்ஷன்லயே இருங்க.. நான் இதோ வந்துட்டேன்..!!” என்றவள் நாற்காலியில் அமர்ந்திருந்தவரிடம் திரும்பி,

“எனக்கு கொஞ்சம் வேலை இருக்குதுங்க.. நான் போயிட்டு அப்புறமா வந்து உங்களை பாக்குறேன்..!!”

என்று சொல்லிவிட்டு ரிசப்ஷன் நோக்கி ஓடினாள். மஹாதேவன் ரிசப்ஷனில் நின்றுகொண்டிருந்தார். அவள் அவரை நெருங்கியதும்,

“எந்த ஃப்ளோர்மா..?” என்றார்.

“ஃபர்ஸ்ட் ஃப்ளோர் அங்கிள்.. ஸ்டெப்ஸ்லயே போயிறலாமா..?”

“ம்ம்.. போலாம்..!!”

நந்தினி படிக்கட்டை நோக்கி நடக்க, அவளை நெருக்கமாக பின்தொடர்ந்தவாறே மஹாதேவன் கேட்டார்.

“என்னாச்சும்மா திடீர்னு.. நேத்து கூட அம்மாகிட்ட பேசினேனே..”

“காலைல பாத்ரூம் போனவங்க.. திடீர்னு மயக்கம் வந்து அங்கேயே விழுந்தாட்டாங்க..!! கையிலயும் தலையிலையும் சின்னதா அடி.. காலு வேற பிசகிக்கிச்சு..!!”

“ஓ..!!”

“அப்பா போனதுல இருந்தே.. அம்மா ரொம்ப உடைஞ்சு போயிட்டாங்க அங்கிள்.. ஒழுங்கா சாப்பிடுறது இல்ல.. சரியா தூங்குறது இல்ல.. சொன்னாலும் கேக்குறது இல்ல..!! எந்த நேரமும் அழுது பொலம்பிட்டே இருக்காங்க..!!”

“நீதான்மா அவங்களுக்கு கொஞ்சம் தைரியம் சொல்லணும்..!!”

“புரிஞ்சுக்க மாட்டேன்றாங்க அங்கிள்..!! அம்மா ரொம்ப அப்பாவி.. அப்பா அம்மாவை ஒரு கொழந்தை மாதிரிதான் பாத்துப்பாரு.. எந்த வேலையா இருந்தாலும் அவரே பாத்து பாத்து பண்ணிடுவாரு.. இப்போ அவர் இல்லாம என்ன செய்யப் போறோமோன்னு.. ரொம்ப பயப்படுறாங்க..!!”

“ம்ம்.. புரியுதும்மா..!!”

முதல்மாடியை அடைந்தவர்கள், அந்த அறைக்குள் நுழைந்தார்கள். உள்ளே நந்தினியின் அம்மா அமுதா பெட்டில் படுத்திருந்தாள். நந்தினியின் தங்கை வந்தனா அம்மாவின் கால்மாட்டில் அமர்ந்திருந்தாள். மஹாதேவனை கண்டதும் வந்தனா விருட்டென்று பெட்டில் இருந்து எழுந்து நிற்க, அமுதா அவருக்கு வணக்கம் சொல்ல கஷ்டப்பட்டு எழ முயன்றாள்.

“வாங்கண்ணே..”

“ஐயோ.. என்னம்மா இது.. படுத்துக்கோ.. படுத்துக்கோ..”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



நடிகை நயன்தாரா கமம் படம்Kalla kama tharum mamanar kolunthanGramathu kuliyal kamakathaikaloutdoor bathroom aunty povathu appati tamil sex video HD downloadஅம்மா முலைய கசக்கும் மகள் காம கதைகள்ஒழுக்கும் புகை படம்கிராமத்து அத்தை காமகதைசித்ராஅம்மணபடம்Akka thangai otha appaகருபு.முலைபால்.காம்பு.Hot.படம்ரேஷ்மா டவுன்லோட் செக்ஸ்கிராமம் அக்கா குளியல்Tamilsexsotries in pdf free download gramathutamilsexnekro sex mulai patam/sex-stories/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/ஆண்கள் ஒரிணச்சேர்க்கை புதியகதைஓத்துவாங்க ஓக்கTamilmulaiபுருஷன் பொண்டாட்டி ச***** வீடியோஸ்www.tamil.sax.adyo.vaiysகல் குவாரியில் ஓத்த கதைதங்கச்சி அண்ணன் காம வெறிammavai ooka vaitha magalநாயகி sex voiடாக்டர் குண்டி ஊசிகேரள ஆண்டி செக்ஸ் விடியோ தமிழ் வாசகர் group sex storyAmma bus bathroom sex tamilSex videos in tamilnadu veetu velakkariஆன்டி முளை பால் ௧ாம ௧தை௧ள் 2020aundi sex vodesஓவியா ஷர்மிளா செக்ஸ் வீடியோதமிழ்செக்ஸ் பெண்கள் புகை படங்கள்கலூரி ஆசிரியை செக்ஸ் வீடியோஒக்க விரும்பும் பெண்கள்கூதிபடம்சுண்னிபெரியம்மா கதைtamilnadi pankal sex videosparuva pennin pundaiஇலம் பென்கல் கூதி படம்அத்தைகள் செக்ஸ் உறவு படங்கள்மயக்கத்தில் ஓல்ஆடை இல்லாத மேனிtamil sex photowww.amutha pundai saritha pundai oluthenசெக்குஸ் விடியேஸ்tamil nanbanin manaiviyin sex storySex ஆண்டி கூதி படம்try.anitha.aondy.sex.videoசெக்ஸ்படங்கள்புண்னட.சுன்னி.ஸ்ரேயாசெக்ஸ் கூதிபள்ளி பருவ பெண்கள் முலை தடவல்மங்கலிய புண்டைபுண்டைபடம்lespan sex tamail tamail sextamil pakiyam aundi sexகிராமம் பெரியம்மா காமகதைtamil sex comicsnadehai shakila pundai sex kamakathaiஸ்மால்.பெண்புண்டை.தமிழ்appa magal Kama kisses sex video.ஒல் நடிகை திரிசா காமபெரிய முலை காமக்கதைtamil kamakadhaiசெக்ஸ் விடியோ. தமில்kolunthanannisextamil kamakadhaigalஆன்டியின் கவர்ச்சி மூக்குத்திசெக்ஸ்படம்