அன்புள்ள ராட்சசி – பகுதி 49

வீடே தங்குவதில்லை என்று.. அசோக்கைப் பற்றி பாரதி குறைபட்டுக்கொண்டது சரிதான்..!! வீடு தங்கவே அவன் விருப்பப்படவில்லை என்பதுதான் அதன் பின்னணியில் உறைந்திருந்த உண்மை..!! அடிக்கடி இந்த மாதிரி மீரா பற்றி பேசி.. அசோக்கின் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்தால்.. அவன் என்ன செய்வான் பாவம்..?? உள்ளம் கவர்ந்து சென்றவளை கண்டறியவும் வழியில்லை.. உள்ளது உள்ளபடி குடும்பத்தாரிடம் உரைக்கவும் துணிவில்லை.. உடைந்து போனான்..!! வீட்டை தவிர்த்தான்.. அலுவலக வேலை இருக்கிறதென அங்கேயே அடிக்கடி முடங்கிப் போனான்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

அலுவலகத்தில் மட்டும் என்ன அவனுக்கு நிம்மதியா கிட்டிவிடப் போகிறது..?? அவள்தான் நினைவை நிறைய கொடுத்துவிட்டு.. நிம்மதியை முழுதாய் எடுத்துச் சென்றுவிட்டாளே..?? அலுவலகத்தில் எப்போதும்.. புகை மண்டலத்துக்கு இடையில்தான் அவன் முகம் தேட வேண்டியிருக்கும்.. அந்த அளவுக்கு எந்த நேரமும் சிகரெட் புகைத்தான்..!! அவன் நெஞ்சில் எரிகிற நெருப்புக்கு தற்காலிக மருந்தாய்.. உதட்டில் பொருத்திய சிகரெட்டின் சிரத்தில் நெருப்பு வைத்தான்..!! நச்சுப்புகை உள்ளே சென்று அத்தனை உறுப்புகளையும் தடுமாறச்செய்ய.. அந்த தடுமாற்ற உணர்வில், தன் மனவேதனையின் வீரியம் குறைக்க முயன்றான்..!!

அலுவலக வேலைகளும் எதுவும் செய்வதில்லை.. அப்படியே செய்தாலும்.. யாருடனாவது, எப்படியாவது, ஏதாவது ஒரு சண்டை..!! புது ப்ராஜக்ட் சம்பந்தமாக பாலாஜி அட்வர்டைஸிங்குக்கு கலந்தாய்வு செய்ய சென்றவன்.. மோகன்ராஜுடன் கடும் விவாதத்தில் ஈடுபட்டான்..!!

“டேய்.. சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா..??”

“இன்னும் இதுல புரிஞ்சுக்க என்ன இருக்கு..?? என் முடிவை நான் சொல்லிட்டேன்.. அவ்வளவுதான்..!!”

“ப்ச்.. ஏண்டா இப்படி அடம் புடிக்கிற..??”

“யாரு அடம் பிடிக்கிறா..?? நான் சொன்ன கான்சப்ட்ல என்ன குறைன்னு சொல்லுங்க மொதல்ல..!! நீங்க எப்போவும் கேக்குற மாதிரி.. லவ், ஃபீல், எமோஷன், டெப்த் எல்லாம் இருக்கு.. அப்புறம் என்ன..??”

“குறைலாம் சொல்லலடா.. க்ளயன்ட்டுக்கு பிடிக்கல.. அவ்வளவுதான்..!!”

“புல்ஷிட்..!!”

“Emergency lamp ad.. கொஞ்சம் த்ரில்லிங்கா இருந்தா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்றாங்க..!! அவங்க சொன்ன கான்சப்ட்ல மட்டும் என்ன குறை.. நல்லாத்தான இருக்கு..??”

“ப்ச்.. எனக்கு பிடிக்கல.. இதெல்லாம் என்னால ஷூட் பண்ணமுடியாது..!!”

“ஷ்ஷ்ஷ்.. இப்போ முடிவா என்னதான் சொல்ற..??”

“நான் சொன்ன கான்சப்ட்ன்னா பண்றேன்.. இல்லனா என்னை ஆளை விடுங்க..!!”

“அவசரப்படாத அசோக்.. It’s going to affect your career..!!”

“பரவால ஸார்.. எனக்கு பரவால..!!”

அலுவலகத்தில் அடைந்து கிடக்கிற நேரங்களில்.. காதல் உல்லாசம் திரைப்படத்தை திரும்ப திரும்ப பெரிய திரையில் பார்த்தான்..!! அந்தப்படத்தின் நாயகன் நாயகியுடன்.. தன்னையும் மீராவையும் அவனால் எளிதில் பொருத்திப் பார்க்க முடிந்தது.. திரையில் அவர்கள் அழுகையில், நிஜத்தில் இவனால் இங்கு உருக முடிந்தது..!! முக்கியமாக.. முன்பொருமுறை ‘என்ன எழவெடுத்த படம்டா இது..??’ என்று நண்பர்களை கிண்டல் செய்த அதே காட்சி.. இப்போது அவனது ஏக்கத்தையும் துக்கத்தையும் கிளறிவிடுகிற காட்சியாக இருந்தது..!!

‘ப்ளீஸ் ப்ரியா.. என்னை விட்டு போயிடாத.. ப்ளீஸ்.. நீ இல்லனா, அப்புறம் நான் உயிரோடவே இருக்க மாட்டேன்..!!’

‘ப்ளீஸ் ஷிவா.. நான் போய்த்தான் ஆகணும்.. என்னை புரிஞ்சுக்கோ ப்ளீஸ்..!!’

‘இல்ல.. நான் உன்னை போக விடமாட்டேன்..!! நீ எனக்கு வேணும் ப்ரியா.. என் லைஃப் புல்லா நீ எனக்கு வேணும்..!!’

‘ப்ளீஸ் ஷிவா..!! கையை விடு ப்ளீஸ்.. நான் போகணும்..!!”

‘போ ப்ரியா.. போ..!! ஆனா.. போறதுக்கு முன்னாடி எனக்கும், என் காதலுக்கும் ஒரு முடிவு சொல்லிட்டு போ..!!’

‘என்ன முடிவு சொல்ல சொல்ற என்னை..??’

‘எதுக்கு என் லைஃப்ல வந்த..?? எதுக்கு எங்கிட்ட சிரிச்சு சிரிச்சு பழகின..?? காதல்னா என்னன்னே தெரியாம.. நான் சந்தோஷமா சுத்திட்டு இருந்தேன்.. ஏன் என் மனசுல காதல்ன்ற ஆசையை வளர்த்த..?? கனவுல மிதக்க வச்ச..?? இப்போ எல்லாத்தையும் கைகழுவிட்டு போற..?? எப்படி ப்ரியா.. எப்படி உனக்கு மனசு வந்தது.. சொல்லு ப்ரியா..!!’

அந்தக்காட்சியை பார்க்கையில் அவனையும் அறியாமல் அவனுடைய கண்களில் இருந்து நீர் கசியும்.. அவனையும் அறியாமல் அவனது உதடுகள் ‘மீரா’ என்ற பெயரை நடுக்கத்துடன் உச்சரிக்கும்..!! ரீவைன்ட் செய்து, ரீவைன்ட் செய்து.. திரும்ப திரும்ப அந்தக்காட்சியை ஓடவிட்டு.. அழுது அழுது கண்கள் சிவந்து..!! அவனுடைய மனநிலை அழுத்தம் குறைவதற்கு.. நிச்சயம் அந்தப்படமும், காட்சியும் கொஞ்சம் கூட உதவவில்லை.. மாறாக அவனது மனக்காயத்தை மேலும் புரையோடச் செய்யவே பயன்பட்டது..!!

ஸ்ரீனிவாச பிரசாத்தை போலவே.. அசோக்கின் நண்பர்களுக்கும் அவனது அந்த கோலத்தை காண சகிக்கவில்லை..!! ‘சும்மா இருந்தவனை காதலித்துப்பார் என்று ஏற்றிவிட்டு.. இந்த நிலைக்கு தள்ளிவிட்டோமோ..’ என்ற குற்ற உணர்வு வேறு அவர்களுக்கு..!! ஆனால்.. அவனுடைய நிலைக்கு என்ன தீர்வு காண்பது என்றுதான்.. அவர்களுக்கும் எதுவும் புரியவில்லை..!! அவர்களால் முடிந்த அளவுக்கு அவனுடைய மனதை வேறுபக்கம் திருப்ப முயன்றார்கள்.. அதிலும் தோல்விதான்..!!

மதுவின் போதை அவனது மனதின் வேதனையை குறைக்கும் நினைத்தார்கள்.. மதுவருந்த அழைத்து சென்றார்கள்..!!

“இதே டேபிள்தான் மச்சி.. நான் இங்க.. அவ அங்க..!!”

“…………………”

“இவ்ளோஓஓஓ பெரிய பச்சைமொளகாடா கிஷோரு..!! எடுத்து அவ பாட்டுக்கு கேரட் மாதிரி, ‘கர்ச் கர்ச் கர்ச்’ன்னு கடிச்சு தின்ன ஆரம்பிச்சுட்டா..!! எனக்குலாம் அப்டியே டவுசர் லூஸாயிடுச்சு..!!”

“…………………”

“திடீர்னு அப்டியே அழுறா.. எனக்கு ஒன்னும் புரியல..!! ‘என்னை விட்டு எங்கயும் போயிடாத அசோக்’ன்னு அப்டியே கொழந்தை மாதிரி ஏக்கமா சொன்னாடா.. பாவமா இருந்துச்சு..!! சொல்லிட்டு அப்டியே என்னை இறுக்க்க்கி கட்டிப் புடிச்சுக்கிட்டா..!!”

“…………………”

“எனக்கு அப்போ எப்டி இருந்துச்சு தெரியுமா..?? அவளுக்காக என்னவேணா பண்ணலாம்னு தோணுச்சுடா.. சத்தியமா சொல்றேன் மச்சி.. என்னவேணா பண்ணலாம்னு தோணுச்சு ..!!”

“…………………”

உற்சாகமாக சொல்லிக்கொண்டிருந்த அசோக்.. திடீரென உணர்ச்சி வசப்பட்டுப் போனான்..!! கடிப்பதற்காக கையில் எடுத்த சிக்கனை.. பிறகு கடிக்காமலே தட்டில் விசிறினான்..!! அவனுடைய கண்கள் பட்டென குளமாகிப்போக.. வேணுவை ஏறிட்டு உடைந்துபோன குரலில் கேட்டான்..!!

“அ..அப்டிலாம் சொல்லிட்டு.. கடைசில.. அவ ஏன்டா என்னை விட்டுட்டு போயிட்டா..?? ம்ம்..?? நான் ஒண்ணுமே செய்யலையேடா மச்சி..??”

“மச்சி.. போதுண்டா.. விடுறா..!!”

சாலமன்தான் அவ்வாறு பொறுக்கமாட்டாமல் சொன்னான்..!! அசோக்குக்கு மதுவை ஊற்றிவிட்டு.. அவனது மனதை மீராவிடம் இருந்து மீட்டெடுத்து.. சற்றேனும் அவனை சந்தோஷத்தில் வைத்திருக்க நினைத்த அவனது நண்பர்களின் திட்டம்.. பலிக்கவில்லை.. தவிடு பொடியானது..!! அங்கு சென்றும் அவன் புலம்பலைத்தான் இவர்கள் கேட்க வேண்டி இருந்தது.. அதுவும் வேதனையில் போதையை மிக்ஸ் செய்த புலம்பல் எப்படி இருக்கும் என்று சொல்லவே தேவையில்லை..!! மூன்று பேரும் நெற்றியை பிசைந்தவாறு.. ஒருவர் முகத்தை அடுத்தவர் அவஸ்தையாக பார்த்துக்கொண்டனர்..!!

“மச்சி.. எனக்கு இன்னொரு லார்ஜ் சொல்லேன்..!!” ஆறாவது லார்ஜையும் முடித்துவிட்டு அசோக் அவ்வாறு குழறலாக கேட்க.. இப்போது கிஷோர் எரிச்சலானான்..!!

“ஹேய்.. போதுண்டா.. ஏற்கனவே கன்னாபின்னான்னு குடிச்சுட்ட..!! கெளம்பலாம் வா..!!”

“ஹ்ஹ.. போதுமா..?? அதெல்லாம் நீ சொல்லக் கூடாது.. எனக்கு போதும்னா அதை நான்தான் சொல்லணும்..!! நோ.. எனக்கு போதாது.. போதவே போதாது..!!”

எகத்தாளமாக சொன்ன அசோக்.. தூரத்தில் தெரிந்த பேரரை பார்த்து.. இங்கிருந்தே பெருங்குரலில் கத்தினான்.. மீராவின் ஸ்டைலில்..!!

“ரிப்பீட்..!!!!”

அதிகமாக புகைத்தான்.. அளவில்லாமல் குடித்தான்.. ஆல்கஹாலும், டொபாக்கோவும் அவனது சிந்தனை ஓட்டத்தை மேலும் சிக்கலாக்கின.. மூளையின் செயல்பாட்டை முடக்கி வைத்தன..!! அசோக்கின் நிலை அவனது நண்பர்களுக்கும் கவலையையே தந்தது..!! சில நேரங்களில்.. அவன் மனநிலை பிறழ்ந்தவன் மாதிரியெல்லாம் பேச.. அவர்கள் மிரண்டு போய் பார்த்தார்கள்..!!

“அவ மட்டுந்தான் கவிதை எழுதுவாளா..?? எங்களுக்குலாம் எழுத தெரியாதா..?? நானும் எழுதுவேன்..!! அவள் பறந்து போனாளே.. என்னை மறந்து போனாளே..!!”

மோகன்ராஜுடன் அசோக் சண்டையிட்டதிலிருந்து மூன்றாவது நாள்.. ஓவராக குடித்து, ஓவராக புலம்பி நண்பர்களுக்கு கிலி கிளப்பியதிலிருந்து நான்காவது நாள்.. பாலாஜி அட்வர்டைஸிங்கில் இருந்து அசோக்கின் அலுவலகத்துக்கு அந்த தொலைபேசி அழைப்பு வந்தது.. புது வேலை தொடர்பாக இவர்களுடன் போட்டிருந்த ஒப்பந்தத்தை, முறித்துக் கொண்டுவிட்ட செய்தியை தாங்கி வந்த அழைப்பு அது..!!

கிஷோர்தான் அந்தக்காலை அட்டன்ட் செய்தான்.. விஷயம் கேள்விப்பட்டதுமே கொதித்துப் போனான்.. அசோக்கின் மீது அவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம்..!! ரிஸீவரை அதனிடத்தில் அறைந்து சாத்தியவன்.. அலுவலக அறையை விட்டு அவசரமாக வெளியே வந்தான்.. ‘எங்க அவன்..?’ என்று முனுமுனுத்துக்கொண்டே வீடியோ எடிட்டிங் அறைக்குள் நுழைந்தான்..!!

அந்த அறைக்குள் புகை மண்டலத்துக்கு நடுவே அசோக் அமர்ந்திருந்தான்.. அளவுக்கதிகமாய் ஆல்கஹால் உட்கொண்டு ஏற்கனவே எக்கச்சக்க போதையில் இருந்தான்.. திரையில் காதல் உல்லாசம் ஓடிக்கொண்டிருக்க.. இவன் அதை இருநூறாவது முறையாக பார்த்துக் கொண்டிருந்தான்..!! மற்ற நண்பர்களும் அங்கேதான் இருந்தனர்.. வேறு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்..!!

உள்ளே நுழைந்த கிஷோர்.. முதல்வேலையாக சென்று வீடியோ சிஸ்டத்தில் செருகியிருந்த மெமரி ஸ்டிக்கை படக்கென உருவினான்.. உடனே வீடியோ ஸ்க்ரீன் பட்டென இருட்டு போனது.. ஆர்வமாக படம் பார்த்துக்கொண்டிருந்த அசோக்கிற்கோ கிஷோரின் மீது சுருக்கென்று ஒரு ஆத்திரம்..!!

“ஏய்.. ஏன்டா இப்போ ஆஃப் பண்ண..??” என்று சீறினான்.

“ஆஃப் பண்ணது மட்டும் இல்லடா.. இனிமே இந்தப்படத்தை பாக்க உன்னை அல்லோ பண்ணவும் முடியாது..!!”

கிஷோரும் பதிலுக்கு சூடாக சொன்னான். சொன்னவன் கையிலிருந்த மெமரி ஸ்டிக்கை சரக்கென விசிறி எறிந்தான். அது தரையில் மோதி, உடைந்து சிதறி தெறித்து ஓடியது. அது அசோக்கின் கோபம் இன்னும் அதிகமாக்கியது. அமர்ந்திருந்த சேரில் இருந்து விருட்டென எழுந்தான். கோபத்தில் சிவந்த முகத்துடன் கிஷோரை நெருங்கி, அவனது மார்பில் கைவைத்து தள்ளியவாறே கேட்டான்.

“ஏய்ய்ய்.. என்னடா ஆச்சு உனக்கு இப்போ..??”

“எனக்கு எதுவும் ஆகலைடா.. நான் நல்லாத்தான் இருக்கேன்..!! உனக்குத்தான் பைத்தியம் புடிச்சிருச்சு.. உன் பைத்தியக்காரத்தனத்தால.. நாப்பது லட்ச ரூபா ப்ராஜக்ட், அப்படியே நக்கிக்கிட்டு போயிருச்சு..!!”

கிஷோர் கொதிப்புடன் கத்தினான். ப்ராஜக்ட் கைநழுவி சென்றதை அறிந்ததும், சாலமனும் வேணுவும் அதிர்ந்து போய், அவரவர் இருக்கையில் இருந்து எழுந்தார்கள். செய்தி கேட்டு அசோக்கின் கோபமுமே அப்படியே வடிந்து போயிருந்தது.

“போ..போனா போகட்டும்.. விடு..!! அதுக்கு ஏன் இப்படி டென்ஷனாகுற..??” என்றான் கம்மலான குரலில்.

“விட்டுர்றதா..?? போனா போகட்டும்னு ப்ராஜக்ட்டை வேணா விட்ரலாம்டா.. உன்னை எப்படி விடுறது..?? இந்த ப்ராஜக்ட் இல்லனா இன்னொரு ப்ராஜக்ட்.. ஆனா நீ அப்படி கெடையாது..!! அவளையே நெனச்சுக்கிட்டு.. நீ கொஞ்சம் கொஞ்சமா உன்னை அழிச்சுக்குறதை.. இனிமேலும் என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாது..!! எனக்கு இன்னைக்கே ஒரு முடிவு தெரிஞ்சாகனும்..!!”

“எ..என்ன தெரியனும்..??”

“எத்தனை நாளைக்கு இன்னும் இப்படியே இருக்கப் போற..?? எந்த நேரமும் தம்மடிச்சுட்டு.. தண்ணியடிச்சுட்டு.. பைத்தியக்காரன் மாதிரி பொலம்பிக்கிட்டு..!! ம்ம்..??”

“……………..”

“கேக்குறேன்ல..?? பதில் சொல்லுடா..!! இப்படி இருக்குறது உனக்கே வெறுப்பா இல்ல.. மாறணும்னு தோணல..??”

“இல்ல.. தோணல..!! எனக்கு இப்படி இருக்குறதுதான் புடிச்சிருக்கு..!!”

“அப்படியே அறைஞ்சுடுவேன்..!! ஏன்டா இப்படி என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டேன்ற..??”

“உங்களுக்குத்தாண்டா புரியல.. என் மனசைப் பத்தி யாருக்கும் புரியல.. எதுவும் புரியல..!!”

“ப்ச்.. உன் வேதனையை எங்களால புரிஞ்சுக்க முடியுதுடா..!! கஷ்டந்தான்.. அதுக்காக நீ இப்படியேதான் இருப்பேன்னா என்ன அர்த்தம்..?? உன்னை பார்த்தா எங்களுக்கு ரொம்ப கவலையா இருக்குடா..!!” கிஷோர் ஆதங்கத்துடன் கத்தினான்.

“……………..”

அசோக் அமைதியாய் இருக்க, கிஷோர் இப்போது சற்றே சாந்தமானான். குரலை இதமாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

“இங்க பாரு.. நாங்கதான் உன்னை ஏத்திவிட்டோம்.. லவ் பண்ணி காட்டுன்னு சவால்லாம் விட்டோம்..!! இப்போ நாங்களேதான் சொல்றோம்.. போதுண்டா மச்சி.. இதை முடிச்சுக்கலாம்.. It’s over now.. try to understand the fact..!!”

“fact-ஆ.. என்ன fact..??”

“அவ இனிமே திரும்ப வரப்போறது இல்லடா.. அவ்ளோதான்.. she’s gone..!! அவளை கண்டுபிடிக்கிறதுக்கும் எந்த வழியும் இல்ல..!! அவ இனிமே உன் லைஃப்ல இல்ல.. That’s the fact..!!”

“So..??”

“Accept the fact ashok..!! அவ உனக்கு வேணாம்.. அவளை மறந்து தலைமுழுகு..!!”

அசோக் மீதிருந்த அன்பில், ஸ்ரீனிவாச பிரசாத் செய்த அதே தவறையே கிஷோரும் செய்தான்.. ஸ்ரீனிவாச பிரசாத்தின் மீது வந்த அதே அர்த்தமற்ற கோபமே, கிஷோர் மீதும் அசோக்கிற்கு வந்தது..!! அவனுடைய உடம்பில் உடனடியாய் ஒரு நடுக்கம் ஏறியிருக்க.. நண்பனின் முகத்தை ஏறிட்டு வெறுப்பாக முறைத்தான்..!!

“லைஃப்ல இன்னும் எவ்ளோவோ இருக்கு மச்சி.. Life is larger than love..!!”

சொல்லிக்கொண்டே ஆறுதலாக பற்றிய கிஷோரின் கையை, அசோக் வெடுக்கென உதறினான். அவனுடைய செய்கை கிஷோருக்கு மீண்டும் கோவத்தை கிளறிவிட்டது.

“ஏய்..!!” என்றான் எரிச்சலாக.

“போடா..!! புத்தி சொல்ல வந்துட்டான்.. பெரிய புடுங்கி மாதிரி..!! மறக்கனுமாம்..!!! ம..மறக்கலாம் முடியாது.. என்னை மாத்திக்கவும் முடியாது.. நான் இப்படியேதான் இருப்பேன்.. போதுமா..??” அசோக் உறுதியான குரலில் சொல்ல, கிஷோரின் ஆத்திரம் இப்போது உச்சபட்சத்தை எட்டியது.

“ஓஹோ.. இப்படியேதான் இருப்பியோ..?? உன்னை இருக்க விட்டாத்தான..??”

சூடாக சொன்ன கிஷோரின் பார்வையில்.. சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த மீராவின் கவிதைக்காகிதம் கண்ணில் பட்டது.. உடனே..

“மொதல்ல இதெல்லாம் ஒழிச்சு கட்டனும்..!!”

என்று கருவியவாறு அந்த காகிதத்தை நோக்கி சென்றான்..!! அவனுடைய எண்ணம் அசோக்கிற்கு உடனே புரிந்து போனது.. கிஷோரை தடுப்பதற்காக அவனும் அவசரமாக அவனை நோக்கி ஓடினான்..!! அதற்குள்ளாகவே கிஷோர் அந்த காகிதத்தை சரக்கென கிழித்து எடுக்க.. அசோக் பாய்ந்து சென்று அதை அவனிடமிருந்து பறித்தான்.. பறித்த வேகத்தில் புறங்கையை வீசி, கிஷோரின் கன்னத்தில் ‘ரப்’பென ஒரு அறை விட்டான்..!! கிஷோருக்கு சுள்ளென்று கோவம் கிளம்பியது.. நிலமையைப்பார்த்து கலவரமாகி வேணுவும் சாலமனும் ஓடிவந்து அவனை தடுப்பதற்குள்ளாகவே.. அவனும் அசோக்கின் கன்னத்தில் பதிலுக்கு அறைந்து விட்டான்..!!

அடிபட்ட வேகமும், ஆல்கஹாலின் போதையும் சேர்ந்து அசோக்கை தடுமாறச்செய்ய.. அவன் அப்படியே சுவற்றில் மோதி.. தள்ளாடிச்சென்று மேஜையில் விழுந்து.. அதிலிருந்த பொருட்களை எல்லாம் கீழே சிதற செய்து.. அவனும் தரையில் போய் பொத்தென்று விழுந்தான்..!! விழுந்த வேகத்தில் எழுந்து வந்து திரும்ப கிஷோரை தாக்கப் போகிறான் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க.. அவனோ தரையில் கிடந்தவாறே கையிலிருந்த காகிதத்தை பார்த்தான்.. ‘சேதம் அதிகமில்லை’ என்று சந்தோஷப்பட்டான்..!! கசங்கிப் போயிருந்தது அந்த காகிதம்.. அதை தரையில் விரித்து வைத்து.. கைகளால் தடவி அந்த கசங்கலை நீக்க முயன்றான்..!!

“ஒன்னுல்ல.. ஒன்னுல்ல..!!”

என்று பித்துப் பிடித்தவன் மாதிரி முனுமுனுத்தவாறே அந்த காகிதத்தின் கசங்கலை நீக்கினான். நண்பர்கள் மூவருமே அவனுடைய செய்கையை மிரட்சியாக பார்த்தனர்.

“எ..என்னடா இவன்..??” கிஷோர் நொந்துபோனவனாய் சொன்னான். இப்போது வேணு கிஷோரின் புஜத்தை பற்றி,

“அவனை விடு மச்சி..!! நீ வா.. உன்கிட்ட கொஞ்சம் பேசணும்..!!”

என்று அவனை இழுத்து சென்றான். இருவரும் அலுவலகத்தை ஒட்டியிருந்த அந்த பால்கனியை நோக்கி நகர்ந்தார்கள். அசோக்கையே மேலும் ஒருசில வினாடிகள் பரிதாபமாய் பார்த்த சாலமன், பிறகு அவர்களை பின்தொடர்ந்து ஓடினான்.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



செக்ஸ் வீடீயோஸ்manaiviyin friendai mazhayil otha tamil kamakadaigaltamil aunty kathai௨௦௨௦ ஆண்ட்டி "கம"kolunthanannisexமாமிமுலைSexstyoesmanisa Kama kathaigalsexkathaikal.intamilamma magal lespo kathaikalஆபாச வீடியோக்கள் தமிழ் ஆண்டிsexviedotamliஅம்மவை நிர்வாணமாக பார்த்த செக்ஸ் ஸ்டோரிஆடை இல்லாத மேனிபாலும் பழமும் கதை பகுதி 2அண்ணன் தங்கை குளியல் கதைதங்கமணி ஆண்டி மலிகை கடை sex காம கதை comமனைவி தூங்கும்போது முலையை அமுக்கும் வீடியோஓழ்க்கும் படங்கள்antuy க்ஸ் vidoesகட்டுவாசி கமா கதை Pengalin sunnikalநடிகை,செக்ஸ்விடியோஸ்முலைமேடுசித்தி கொடூர காம கதைகள்குன்டு பென் காமகதைதமிழ் சூத்தடிக்கும்"வீடியோஸ்ஒரிணச்சேர்க்கைகூதி.முலைamma kama kathaigaltamil sex story mega thodarகுற்றாலம் கேல்ஸ் ரகசிய செக்ஸ்Velamma Kathaikalபுண்டை.ஆபசா.ரேஜாஅக்கா தம்பி சேக் ஸ் கதைbus sex kamakathai tamil lady policeakka pundaya sappi oppadhu eppadiஇன்பமான செக்ஸ் புகை படங்கள்sex new கை அடித்தல்new.tamil.en.amma.otha.desar.sex.videos.downloadஅத்தை சித்தி செக்சீtamil aunty galleryகூதி புண்டை மட்டும்/category/nadikai-abaasa-kathaikal/சின்ன பையன் என்னை ஊம்பினான்,மாயச்.sex.videoநடிகைகனகாமார்புகிழவன் கன்னி கழித்த கதைதெலுங்கு காலேஜ் வேலைக்காரி sex.comtamilsexkathaigalஎன் ஆசை அத்தையின் முலை பால்பருவபுண்டைகிழவி புண்டைxvibeos com மல்லிகை பூ ஒல் sex2019 new tamil kama kadaigal in lesbiyan stores in tamilகாலேஜ் பெண்கள்செக்ஸ் வீடியோ சித்தாள் சூத்துல ஓத்த காம கதைகள்elampen sex mulaipadamaunty pundai nakkum videoகிராமத்து செக்ஸ் வீடீயோஸ்tholiin kanavan kamakathai tamilவேலம்மா தொடர் 55மகளைஓத்தநன்பண் தங்கை கம கதைகள்வெளிநாட்டு sexநாட்டு கட்டை காமம் படம்xvibeos com சிட்டுக்கள் sexபுண்டைமுலைragavi sex tamil kamakathaikalPuntai virikkum padangalperiyamma magal akkavai olukum vediopangal mulai saking sex tamilAndikal koothi tamil Saxstoretmilஹோட்டல் பணிப்பெண் பாலியல் vedioes xhmasterவிளையாட்டு வீரர் பசங்க ஆபாச வீடியோக்கள் டீன்2000Bittu Padamthavidya udan firrt sex tamil storyvelamma tamil episodethatha பேத்தி sex stories tamilபஸ்னைட் xnxx vidiotamil scandal picturesஆணூம் ஆணூம் செக்ஸ் படங்கள் கதைகள்tamil kama kathaisex காமம் videoஅக்கா தங்கை புண்டை பற்றி சொல்லுங்கபெரிய அம்மாமுலைஅப்பா மகள் செக்ஸ் படம்குடும்ப செக்ஸ்