மலரே என்னிடம் மயங்காதே – பகுதி 8

“எப்டி..?” என்றேன் குழப்பமாய்.

“இங்க பாரு அசோக்கு.. நான் நேத்து அவளை அறைஞ்சது.. அத்தனை பேர் முன்னாடி உன்னை அவமானப் படுத்தினதுக்காக..!! உன்னை விரும்புறேன்னு சொன்னதுக்காக இல்ல..!!” அவர் தெள்ளத்தெளிவாய் சொல்ல, நான் இப்போது தடுமாறினேன்.

“ப…பன்னீர்.. எ..என்ன சொல்ற நீ..?”

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“ஆமாம்.. உனக்கு புரியலையா..? வேற எதுக்கு அவளை அறைஞ்சேன்னு நெனச்ச..? பொண்ணு பாக்க வந்தவங்க முன்னாடி உன்னை அவமானப் படுத்துனத்தை தவிர.. என் பொண்ணு வேற என்ன தப்பு பண்ணிட்டா..? ஒரு அயோக்கியனை லவ் பண்றேன்னு சொல்லிட்டு வந்து நின்னா.. அவளை கண்டிக்கிறதுல ஒரு நியாயம் இருக்கு..!! அவ உன்னைல லவ் பண்றேன்னு சொல்றா..? என்ன சொல்லி என் பொண்ணை கண்டிக்க சொல்ற அசோக்கு..?? அவளை எதுத்து பேசுறதுக்கு எனக்கு ஏதாவது பாயிண்ட்டு சொல்லு பாப்போம்..? இல்ல.. திருத்துற அளவுக்கு என் பொண்ணு என்ன தப்பு பண்ணிட்டான்னாவது சொல்லு..!!”

அவர் பேச பேச.. நான் அப்படியே திகைத்துப் போய் நின்றிருந்தேன். பன்னீரிடம் இருந்து இந்த மாதிரி வார்த்தைகள் வரும் என்று நான் சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசக்கூட, எனக்கு நாவெழவில்லை. அதிர்ந்து போன முகத்துடன் அவரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னுடைய அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினார்.

“என் பொண்ணுக்கு எவ்வளவு துணிச்சல்னு நேத்தே பாத்தேல..? அவ மனசை மாத்த முடியும்னுலாம் எனக்கு தோணலை அசோக்கு.. மாத்துறதுக்கும் நான் முயற்சி பண்ண போறதும் இல்ல.. முடிஞ்சா நீ உன் மனசை மாத்திக்கோ..!!”

தீர்க்கமாக சொன்ன பன்னீர், தீர்ந்து போன சிகரெட்டை காலில் போட்டு மிதித்து நசுக்கிவிட்டு, என் பதிலுக்கு கூட காத்திராமல் என்னை கடந்து சென்றார். நான் செயலிழந்தவனாய் அப்படியே உறைந்து போய் நின்றிருந்தேன். அப்புறம் சிகரெட் நெருப்பு என் விரல்களை சுட.. சுய நினைவு வந்து வெடுக்கென அதை உதறினேன்..!!

எபிஸோட் – IV

ஏன் யாருமே என்னை புரிந்து கொள்ள மாட்டேன் என்கிறார்கள்..? ஏன் எல்லோருமே என் உணர்சிகளை சீண்டி விளையாடுகிறார்கள்..? காலம் பிரிக்கப் போவது தெரியாமல், கட்டிய மனைவி மீது கொள்ளை கொள்ளையாய் காதல் வைத்தது தவறா..? அந்த காதல் மனைவியை கோர விபத்தில் இழந்துவிட்டு, அவளுடைய நினைவுகளில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறேனே.. அது தவறா..? இந்த ஜென்மத்தில்.. இதய வீட்டில்.. அவளுக்கு மட்டுமே இடம் என்று வாழ முடிவு செய்ததில் ஏதேனும் தவறு கண்பீர்களா..? இதில் எது எனது தவறு..?? ஆனால்.. மலர், பன்னீர்.. அந்த முகுந்த் முதற்கொண்டு.. என் மீதுதான் ஏதோ தவறு என்பது போலல்லவா பேசுகிறார்கள்..??

கயல் என்னை விட்டுச்சென்ற இந்த ஒரு வருட காலத்தில், அவளுடைய நினைவுகளில் நான் வாழ்ந்திருப்பதில் எனக்கு எந்த பிரச்னையும் வரவில்லை. அவளை தவிர என் வாழ்வில் வேறொரு பெண்ணுக்கு இடமில்லை என்ற என் மனவுறுதியிலும் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நடந்த சம்பவங்கள் என் மனவுறுதியை சற்றே ஆட்டம் காண வைத்திருக்கின்றன என்றே எனக்கு தோன்றிற்று. இதை இப்படியே விடக்கூடாது என்று நினைத்தேன். மலரிடம் பேச வேண்டும்..!!

அன்று மாலை ஆபீசில் இருந்து கிளம்பி பெசன்ட் நகர் பீச் சென்றேன். நிலவு வெளிச்சத்தில் கருநீலமாய் காட்சியளித்த கடலையே வெறித்து பார்த்தபடி, நெடு நேரம் அமர்ந்திருந்தேன். இருண்டுபோன கடற்கரை நோக்கி தவழ்ந்து வந்த வெள்ளி அலைகளையே, அமைதியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன். என் மனதுக்குள்ளும் அந்த மாதிரி எண்ணற்ற குழப்ப அலைகள்..!! திரும்ப திரும்ப.. சுழன்று சுழன்று.. மோதி மோதி.. என் அமைதியை அபகரித்துக்கொண்ட குழப்ப அலைகள்..!!

அன்று இரவு வீடு திரும்ப மிகவும் தாமதாமாகி விட்டது. பதினோரு மணியை நெருங்கியிருந்தது. பன்னீரும் அபியும் தூங்கியிருந்தார்கள். மலர்தான் வந்து கதவு திறந்து விட்டாள். ஒருமாதிரி சலனமில்லாமல் என் கண்களையே கூர்மையாக பார்த்தாள். என்னால் நெடுநேரம் அவளுடைய பார்வையை தாங்க முடியவில்லை. கடந்து உள்ளே சென்றேன். என்னுடைய அறைக்குள் புகுந்து கொண்டேன். வேறு உடைக்கு மாறி, படுக்கையில் விழுந்தேன். கொஞ்ச நேரம் கழித்து கதவருகே மலரின் குரல்.

“சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்.. வாங்க..”

“எ..எனக்கு பசிக்கல..” நான் அவளை ஏறிட்டு மெல்லிய குரலில் சொன்னேன்.

“ஏன்..?”

“பசிக்கலன்னா விடேன்..” நாம் சலிப்பாய் சொல்ல, மலர் இப்போது சீறினாள்.

“இப்டிலாம் பண்ணாதீங்கத்தான்.. என் மேல எதுவும் கோவம்னா.. என்னை நாலு அறை அறைஞ்சிடுங்க..!!”

“எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல..”

“அப்புறம் சாப்பாட்டு மேல மட்டும் என்ன கோவம்..?”

“ப்ச்..!! பசிக்கல மலர்..”

“பொய் சொல்லாதீங்க.. காலைலயும் சாப்பிடலை.. மதியமும் சாப்பிடலைன்னு அப்பா சொன்னார்.. இப்பவும் பசியில்லைன்னா என்ன அர்த்தம்..??”

“சாப்பிட பிடிக்கலைன்னு அர்த்தம்..!! எ..எனக்கு.. எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு மலர்.. கொஞ்ச நேரம் என்னை நிம்மதியா தூங்க விடுறியா..? ப்ளீஸ்..!!”

“ஓ..!! நான்தான் உங்க நிம்மதியைலாம் கெடுக்குறேன்ல..?”

“……………………..”

“சரி..!! இதையும் கேட்டுக்குங்க.. நானும் நேத்துல இருந்து ஒன்னும் சாப்பிடலை.. நீங்க சாப்பிடுற வரைக்கும் நானும் சாப்பிடறதா இல்ல..!! இப்போ வந்தீங்கன்னா.. ரெண்டு பேரும் ஒண்ணா சாப்பிட்டு நம்ம விரதத்தை முடிச்சுக்கலாம்..!! அதுக்கப்புறம் நான் இங்க வந்து நின்னு.. உங்க நிம்மதியை கெடுக்க மாட்டேன்.. விடியிற வரை நல்லா தூங்குங்க..!!”

நான் அதற்கும் அமைதியாக இருக்க, மலர் இப்போது சற்றே கோபமாய் கத்தினாள்.

“நான் சொல்றதுக்கு பதில் கூட சொல்ல மாட்டீங்களா..?? அவ்ளோ கோவமா என் மேல..??? சரி..!! நான் டைனிங் டேபிள்ல வெயிட் பண்ணுறேன்.. உங்களுக்கு எப்போ சாப்பிடனும்னு தோணுதோ.. அப்போ வாங்க..!! நீங்க வர்ற வரைக்கும் நான் அந்த எடத்தை விட்டு அசைய மாட்டேன்..!!”

படபடவென சொன்ன மலர், என் பதிலுக்காக காத்திராமல் திரும்பி நடந்தாள். டைனிங் டேபிளை அடைந்து, சேரை இழுத்து போட்டு அமர்ந்தாள். முழங்கைகளை டேபிளில் ஊன்றி, இரண்டு கையாளும் தன் கன்னங்களை தாங்கி பிடித்துக் கொண்டாள். எதிரே இருந்த சுவரையே ஒருமாதிரி நிலை குத்திப் போன பார்வை பார்க்கலானாள்.

எனக்கு இப்போது நிஜமாகவே தலை வலி வரும் போல் ஆனது..!! ப்ச்..!! ஏன் இப்படி செய்கிறாள் இவள்..?? எவ்வளவு பிரியம் வைத்திருந்தேன் இவள் மேல்..?? எரிச்சலுற செய்கிறாளே இப்போது..?? அவள் சொன்ன மாதிரி, கன்னத்தை சேர்த்து நான்கு அறை விடலாமா என்று கூட தோன்றுகிறது..!! அப்படி என்ன கண்டு தொலைத்தாள் என்னிடம்.. இந்த அறிவு கெட்டவள்..??

நான் ஒரு நான்கைந்து நிமிடங்கள் பெட்ரூமில் இருந்தபடி, தூரத்தில் அமர்ந்திருந்த மலரையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவள் இம்மி கூட அசைவது மாதிரி தெரியவில்லை. அழுத்தக்காரி.. பிடிவாதக்காரி.. ராட்சசி..!! எனக்கு அதன் பிறகும் அமைதியாய் இருக்க பிடிக்கவில்லை. எரிச்சலாய் ஒரு பெருமூச்சு விட்டவாறே படுக்கையில் இருந்து எழுந்தேன். விறுவிறுவென நடந்து சென்று, மலருக்கு அருகில் கிடந்த சேரை இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தேன்.

நான் சாப்பிட வந்தமர்ந்ததற்கு மலர் எந்த வித உணர்ச்சியுமே காட்டவில்லை. நான் நிச்சயமாய் வருவேன் என்று முன்கூட்டியே அவளுக்கு தெரியும் என்பது மாதிரிதான் நடந்து கொண்டாள். என் முகத்தை திரும்பி கூட பாராமலே எழுந்து கொண்டவள், ப்ளேட் எடுத்து எனக்கு முன்பாக வைத்தாள். ஆறிப் போன சாதத்தை அள்ளி ப்ளேட்டில் போட்டாள். ஆவி பறக்கும் சாம்பாரை மேலே ஊற்றினாள். அப்பளத்தை ஒரு சின்ன தட்டில் வைத்து, எனக்கு முன் தள்ளி விட்டாள்.

“நீ சாப்பிடலையா..??” நான் சாதத்தில் கை வைக்க போவதற்கு முன்பாக கேட்டேன்.

“நீங்க சாப்பிட்டப்புறம் சாப்பிடுறேன்..” அவள் இறுக்கமான குரலில் சொன்னாள்.

நான் இப்போது திரும்பி, அவளை ஒரு நம்பிக்கையில்லாத பார்வை பார்க்க, அவள் அந்தப் பார்வையின் அர்த்தத்தை பட்டென புரிந்து கொண்டாள். சலிப்பும் கிண்டலும் சரிவிகிதத்தில் கலந்த குரலில் சொன்னாள்.

“ப்ச்.. நான் ஒன்னும் உங்களை மாதிரி.. சின்னப்புள்ளத்தனமா அடம் புடிக்க மாட்டேன்..!! நீங்க சாப்பிடுங்க.. கண்டிப்பா நான் சாப்பிடுறேன்..!!”

அப்புறம் நான் எதுவும் பேசவில்லை. அமைதியாக சாப்பிட ஆரம்பித்தேன். ‘பசிக்கல.. சாப்பிட பிடிக்கல..’ என்று என் வாய்தான் வக்கனையாக சொன்னதே தவிர, வயிறு பசியில் காய்ந்து போய்தான் கிடந்தது. எதைத் தின்று ஏப்பம் விடலாம் என்ற எதிர்பார்ப்போடுதான் இருந்தது. கொஞ்ச நேரம் வெட்கத்தையும், வீராப்பையும் மறந்து, வேக வேகமாய் சாப்பாட்டை அள்ளி விழுங்கினேன். மலரின் கைமணம், பசி இல்லாதவனுக்கும் கூட பசியை தூண்டிவிடும்..!! நானோ அகோர பசியில் இருந்தேன்.. எப்படி சாப்பிட்டிருப்பேன் என்று எண்ணிப் பாருங்கள்..!! பாதி சாதம் காலியான போதுதான், எதேச்சையாக திரும்பி மலரை பார்த்தேன். சற்றே அதிர்ந்து போனேன்.

அவள் நான் சாப்பிடுவதையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். பசி தந்த வேகத்தில், நான் அவசர கதியில் சாப்பிடுவதையே பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருந்தது. இப்போது நான் அவள் பக்கம் திரும்பியதும், பட்டென கண்ணீரை துடைத்துக் கொண்டாள். எதுவுமே நடவாதவள் போல இயல்பான குரலில்,

“ரசம் கொஞ்சம் போட்டுக்குங்கத்தான்..”

என்றவாறு ஒரு கரண்டியில் ரசம் அள்ளி, சாதத்தில் ஊற்றினாள். பின்பு வேறுபக்கமாய் திரும்பி, மூக்கை உறிஞ்சிக் கொண்டாள். நான் இப்போது அவளுக்காக சற்றே உருகிப் போனேன். ‘என் மீது இவள் எக்கச்சக்க அன்பு வைத்திருக்கிறாள்.. அதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.. ஏற்றுக் கொள்ளவோ எனக்கு மனமில்லை..!! என்னதான் முடிவு இதற்கு..??’ அதே யோசனையுடன் கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், அப்புறம் சாதத்தை பிசைந்து சாப்பிட ஆரம்பித்தேன். ஓரிரு நிமிடங்களில்.. நான் சாப்பிட்டு முடிக்கப் போகும் வேளையில்.. மலர் மெல்லிய குரலில் சொன்னாள்.
“ஸாரித்தான்..!!”

“ஸாரியா..? எதுக்கு..??” நான் புரியாமல் அவளை ஏறிட்டேன்.

“நேத்து நான் அப்படி நடந்துக்கிட்டதுக்கு..”

“ஓ..!!”

“அவங்க முன்னாடி நிக்கிறது.. எனக்கு அன்ஈசியா இருக்குமேன்னுதான் நான் நெனச்சேனே ஒழிய.. நான் நடந்துக்கிட விதத்தால.. உங்களுக்கு எவ்வளவு அவமானமா இருக்கும்னு நான் நெனச்சு பாக்கலை..!!! தப்பு பண்ணிட்டேன்.. என்னை மன்னிச்சுடுங்கத்தான்..!!”

“ப..பரவால விடு..”

“இ..இனிமே.. இனிமே நீங்க தலை குனியிற மாதிரி ஒரு காரியத்தை.. ச..சத்தியமா நான் பண்ண மாட்டேன்..!! சத்தியமா..!!!!” அவள் குரல் தழதழக்க சொல்ல, எனக்கு இப்போது அவள் மீது பட்டென ஒரு பரிதாபம் வந்தது.

“ஹேய்.. இப்போ எதுக்கு அதை இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிட்டு பேசுற..? நான்தான் ‘பரவால.. நான் எதுவும் நெனைக்கலை..’ ன்னு சொல்றேன்ல..? விடு..!!”

நான் இலகுவான குரலில் அப்படி சொன்னதும், மலர் சற்றே சமாதானம் ஆனாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தாள். அப்புறம் தொண்டையை செருமிக்கொண்டு, சகஜமான குரலில் பேச ஆரம்பித்தாள்.

“உங்ககிட்ட இன்னொன்னு கேக்கணும்..”

“என்ன..?”

“ந..நடந்ததுலாம் மனசுல வச்சுக்காம.. நீங்க எப்போவும் போல எங்கிட்ட பேசணும்..!! ரெண்டு நாளா.. என்னை பாக்குறப்போலாம் ஒருமாதிரி எரிச்சலாத்தான் பாக்குறீங்க.. முறைக்கிறீங்க.. எனக்கு அது பிடிக்கலைத்தான்.. நீங்க அப்படி எரிச்சலா என்னை பாக்குறது.. எ..என்னால தாங்கிக்க முடியலை..!!”

“…………….”

“என் காதலை என் மனசுக்குள்ளயே போட்டு பூட்டிடனும்னுதான் நான் நெனச்சிருந்தேன்.. சொன்னா நீங்க கஷ்டப்படுவீங்கன்னு எனக்கு தெரியும்..!! ஆனா.. அந்த சூழ்நிலைல.. எ..எனக்கு சொல்றதை தவிர வேற வழி தெரியலை..!!”

“…………….”

“என் காதலை ஏத்துக்க சொல்லி.. எந்த வகைலையும் இனிமே நான் உங்களை தொந்தரவு பண்ண மாட்டேன்..!! என் பார்வையிலையோ, வார்த்தையிலேயோ கூட.. என் காதலை காட்ட மாட்டேன்..!! என் கூட எப்போவும் போல பேசுங்கத்தான்.. ப்ளீஸ்..!!”

அவள் உருக்கமாக சொல்ல, நான் அமைதியாக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘எனக்காக எவ்வளவு ஏங்குகிறாள் இவள்..??’ என்று தோன்றியது. ஆனால்.. அந்த நினைவே இன்னொரு பக்கம் கவலையாகவும் இருந்தது..!! அவளும் நான் என்ன சொல்லப் போகிறேன் என்று தெரிந்து கொள்வதற்காக, என் முகத்தையே ஒரு மாதிரி பயமும், எதிர்பார்ப்புமாய் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் ஓரிரு வினாடிகள்தான் யோசித்திருப்பேன். அப்புறம் மெல்ல அவளை பார்த்து நான் புன்னகைக்கவும், இப்போது அவளது தடித்து சிவந்த உதடுகளும்.. தாராளமாய் புன்னகையை பூசிக்கொண்டன..!!

“தேங்க்ஸ்த்தான்..!!” என்றாள் கண்களில் நன்றி மின்ன.

“இட்ஸ் ஓகே..!! ம்ம்ம்ம்ம்ம்… சரி.. டைமாச்சு.. நீயும் சாப்பிட்டு தூங்கு..!!”

“ம்ம்… சரித்தான்..!!”

உற்சாகமாக சொன்னவள், நான் சாப்பிட்டு முடித்த தட்டையே தன் பக்கம் இழுத்து, அதில் சாதத்தை போட்டுக் கொண்டாள். அதைப் பார்த்து லேசாக தடுமாறிய நான், ஏதோ சொல்ல நினைத்தேன். அப்புறம், பசியில் இருப்பவளை எதுவும் சொல்லி, சாப்பிடாமல் செய்து விட வேண்டாம் என்று எண்ணி, அப்படியே விட்டு விட்டேன். எழுந்து கை கழுவிக்கொண்டு, என் அறைக்குள் நுழைந்தேன். மெத்தையில் வீழ்ந்து சிந்தனையில் ஆழ்ந்தேன்.

இரண்டு நாளாய் அலைபாய்ந்து கொண்டிருந்த மனம், இப்போது சற்றே அமைதிப்பட்டிருப்பதாக தோன்றியது. மலருடன் நிலவிய அந்த இறுக்கமான சூழ்நிலை, அவளைப் போலவே எனக்கும்தான் பிடிக்கவில்லை. அதற்கு இப்போது ஒரு முடிவு ஏற்பட்டதில், ஓரளவுக்கு என் மனமும் நிம்மதியை உணர்ந்தது. ஆனால்.. மலர் அவளுடைய மனதை முழுமையாக மாற்றிக்கொண்டு, வேறொருவனை மணம் முடிக்கும் வரை என் மனதிற்கும் முழு நிம்மதி கிட்டாது என்றே தோன்றியது. கயல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று ஒரு வேதனையான எண்ணம் வேறு மனதுக்குள் ஓடியது..!!

படுக்கையிலிருந்து புரண்டு நிமிர்ந்து பார்த்தேன். கம்ப்யூட்டர் டேபிளில்.. கள்ளம் கபடம் இல்லாமல்.. கன்னத்தில் குழி விழ.. கயல் சிரித்துக் கொண்டிருந்தாள். கண்ணை இமைக்காமல்.. காதலும், குறும்புமாய்.. என்னையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள். நான் எழுந்து சென்று கயலின் ஃபோட்டோவை எடுத்து வந்து, தலையணைக்கு அருகில் வைத்துக் கொண்டேன். இது தினமும் நான் செய்வதுதான். காலையில் கண்விழிக்க கயல் வேண்டுமே எனக்கு..??

இன்று எக்ஸ்ட்ராவாக இன்னொரு காரியமும் செய்தேன். கப்போர்ட் திறந்து, கயலுடைய ஃபோட்டோ ஆல்பத்தையும் எடுத்துக் கொண்டு வந்து படுத்தேன். கட்டிலில் வசதியாய் சாய்ந்து படுத்துக்கொண்டு, ஆல்பத்தை பொறுமையாக புரட்டி, ஒவ்வொரு ஃபோட்டோவாக பார்த்துக் கொண்டிருந்தேன். கயல் சிரித்தாள்.. கன்னம் சிவக்க வெட்கப்பட்டாள்.. நாக்கை நீட்டி பழிப்பு காட்டினாள்.. முகம் முழுவதும் தீற்றலோடு ஐஸ்க்ரீம் சாப்பிட்டாள்.. கை நிறைய வளையலும், கர்ப்பம் தாங்கிய வயிறுமாய் புன்னகைத்தாள்.. உதடுகளை ‘ஓ’வென வைத்துக்கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்..!!

ஆல்பத்தில் இருந்த ஒருபடம் என் நினைவுகளை பின்னோக்கி இழுத்து சென்றது. நானும் கயலும் நடுவில் நிற்க, எனக்கு அருகே பன்னீர், கயலுக்கு அருகே மலர் என.. நாங்கள் நான்கு பேரும் இருக்கும் படம் அது..!! நானும் கயலும் ஊட்டிக்கு தேனிலவு சென்ற போது எடுத்த படம்..!!! ஹாஹா.. வியப்பாக இருக்கிறதா..?? ஆமாம்.. நாங்கள் தேனிலவுக்கு நான்கு பேராகத்தான் சென்றோம்..!!

“ஸார்.. நீங்க கொஞ்சம் க்ளோஸா வாங்க ஸார்..!! ஏன் எல்லாரும் எதையோ குனிஞ்சு பாத்துட்டு இருக்கீங்க..? கீழ என்ன பொதையலா கெடக்குது..?? இப்படிலாம் பண்ணுனீங்கன்னா அப்புறம் நான் க்ளிக் பண்ணவே மாட்டேன்.. சொல்லிட்டேன்..!! கொஞ்சம் நிமிர்ந்து பாருங்க.. அப்போத்தான் போட்டோ நல்லா வரும்..!!”

அந்த ஆள் எங்கள் நால்வரையும் பொம்மைகள் மாதிரி ஆட்டுவிக்க, ‘இவனைப் போய் ஸ்னாப் அடிக்க இழுத்து வந்தோமே..?’ என்று நான் நொந்து கொண்டேன். ‘சீக்கிரம் க்ளிக் பண்ணித் தொலைடா வெண்ணை…’ என்று மனதுக்குள் அவனை மானாவாரியாக திட்டினேன். அந்த ஆளுக்கு அருகே நின்றிருந்த அவனுடைய புது மனைவியும், அதே மாதிரிதான் மனதுக்குள் அவனை திட்டியிருப்பாள் என்று தோன்றியது. இல்லாவிட்டால்.. இன்னும் கேவலமாக கூட திட்டியிருக்கலாம்..!! இடுப்பில் இரண்டு கைகளையும் ஊன்றியவாறு, ஆர்தர் வில்சன் போல் ஆக்டிங் கொடுத்துக் கொண்டிருந்த தன் புதுப்புருஷனையே.. வெறுப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஓகே.. க்ளிக் பண்ண போறேன்.. ஆல் ஸ்மைல் ப்ளீஸ்..” அவன் வாயிலிருந்து வந்த அந்த வார்த்தைகளுக்காக, நான் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கும்போதே,

“இரு இரு.. அமுக்கிடாத.. இருப்பா.. ஒரு நிமிஷம்…” என்று பன்னீர் இடையில் புகுந்து தடுத்தார்.

“என்னாச்சுப்பா..???”

எட்டிப் பார்த்து கத்திய மலரின் குரலிலும் எக்கச்சக்க எரிச்சல். கயல் வேறு கடுப்புடன் ‘ப்ச்..!!’ என்று முகத்தை சுருக்கினாள். எல்லோருமே ஃபோட்டோ எடுக்க வந்த அந்த ஆள் மீது கொலை வெறியில் இருக்கிறார்கள் என்று மட்டும் எனக்கு புரிந்தது.

“கூலிங் க்ளாஸ் போட்டுக்குறேன்..”

– தொடரும்

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



indinfamil sexpindaisextamiilantybfலதா காமகதைWwwthamilsexstorypaal tharava saar tamil sex storyswap அம்மா மனைவி காம கதைகாலேஜ் பொண்ணுங்க இளம் பெண்கள் ச***** வீடியோமுரட்டு கிழவன் சுன்னி கதைமுஸ்லிம் காலேஜ் பெண் KamakathaikalSex vindhu adithalமுலை படம்tamil pengal paal kudikum mulaitamilsexsotryகருப்பு நாட்டு கட்டைதமிழ் காதலர்கள் செக்ஸ் கதைகள்sexviedotamliammavin udaluravu pudhiya kaam kadhaigaltamil sex kamakathai annan thagachi with photosஆண் , பெண்களின் கை பழக்கம் xnxx video tamil scandals.comTamil asiriyar manavan sexmudalali munadi kamakathaikalதமிழ்புண்டைமுலை படம்ஜோடி மாற்றி ஓல்தங்கச்சி புண்டை முடி முலை பால் விடியோகுண்டு ஆன்டி அவுத்து போட்டுகுண்டாண கிழவிVasumathi vayathu 16 4 sex storyஆண்டி புண்டையும் பாலும் சாப்பிடுவதுஎன் சுன்ணி அம்மா கூதிஅக்கா செல்வி காமகதைகாம வெறிinnum vegama pannuda porn videosதங்கச்சியின் மொலைடீச்சர் girls முலைக்காம்பில் பால் sex கதைவேலைக்காரி எனக்கு சுண்ணியை சப்பிய காம கிராமம் கதைKamakkathiலெட்சுமிமேனன் புண்டை/பூல் புண்டை உடல் உரவு வீடியோகேமராவின் ஆல் ஒழிந்துஎடுத்த ஆபாச படங்கள்தமிழ்நாட்டு கொழுந்தனார் ச*****tsmilsexstoryspachaiya pesikittu sexTamil kudumba uruppinar kamakathaikalKarupu aunty kamakadaiசகிலா விடியா ComXXXtamilscandals xnxxxசெல்லம்மாள் புண்டை சேவிங் கதைகேரளாxxxpachai pachaiyaga pesum kamakathaikal 1997தமிழ் ஆண்டி பெரியம்மாள் செக்ஸ் படம் கதைகள்கலெஜ் பெண் படம்தமிழ்காமகதைகள் கண்ணன் மல்லிகாalagana ratchasi tamil sex kathaigalnew tamil sex storywww tamilscandals com anni anni kozhuthan sunniyai umbugiraalnallamma nattukattaiமுலை படம்karutha molaialagi sexvedioPundaiverikathaikalS.C. வயதாண பொம்பளைNewaundy. Sex comkundiyel.okkum.kamakathaiவிடுதியில் மானவிகள் குளிக்கும் Xnxx vidoes tamikcitylux-nn.ru videosதமிழ் புண்டை விடியொfuckung வீடியோக்கள்டீனேஜ் பெண்கள் Xxxஉறவு மாற்றம் காம கதை jexvetகாம படம்pundai enbathu enna xxx tamilSex okum padamamma koothi kathaiTamil joks storisஆண்டிகளின் அழகிய முலை படம்ஆண்டியின் ஓல்தங்கை புண்டைக்குள் குத்துபுண்டையில் வாய் போடும் வீடியோtamil velammaசின்னபுண்டைசெஸ் வீடியோxxxxxxxx ரொஜா செக்ஸ் விடியோஸ்செக்ஸ் அம்மாஅப்பா ஓத்த இன்பம்கூதியில் குத்தும் படங்கள்புண்டை ஓக்கும் சூப்பர் காமகதைநாயந்தர செக் ஒல்முஸ்லிம்கள் காம கதைதமிழ் குற்றாலம் ஆண்டி செக்ஸ்செக்குஸ் விடியேஸ்சித்தி முலை கதை