அன்புள்ள ராட்சசி – பகுதி 52

அத்தியாயம் 25

அதன்பிறகு வந்த ஒருவாரம்.. பத்து நாட்கள்..!! அசோக் முழுமையாக மாறிப்போனான் என்று சொல்ல இயலாது.. ஆனால் குறிப்பிடத் தகுந்த மாதிரியாக சில மாற்றங்கள் அவனிடம்..!! அவனுடைய நினைவு எப்போதும் மீராவைத்தான் சுற்றி வந்தது.. அவளை இழந்துவிட்ட துக்கம் அவன் மனதில் எப்போதுமே உறைந்து கிடந்தது.. ஆனால்.. முன்பு மாதிரி கழிவிரக்கத்தில் மூழ்கி அவன் சோர்ந்திருக்கவில்லை.. புகையினாலும், மதுவினாலும் அவனது சிந்தனையை சிதைத்துக் கொள்ளவில்லை..!! மாறாக.. உரம் கொண்டதென நெஞ்சினை மாற்றிக்கொள்ள முயன்றான்.. உடைந்து போய்விடக்கூடாதென உறுதியாய் இருந்தான்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

மீராவை கண்டுபிடிக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று.. திரும்ப திரும்ப யோசித்து பார்த்தான்..!! மீராவுடனான பழைய நினைவுகளை எல்லாம்.. மீண்டும் மீண்டும் அசை போட்டான்.. ஏதாவது வழி தென்பட்டுவிடாதா என ஏங்கினான்..!! எந்த ஒரு வழியும் அவனது புத்திக்கு புலப்படவில்லை.. அதற்காக அவன் தளர்ந்து போய் விடவும் இல்லை.. மறுபடியும் வேறொரு நினைவை அசைபோட்டு.. அவனது முயற்சியை தொடர்ந்துகொண்டே இருந்தான்..!!

அம்மா உதிர்த்த அறிவுரைகள் அவனுக்கு உபயோகமானதாய் இருந்தன..!! அத்தனை நாள் காதலுக்கு உண்மையாய் இருந்தவன்.. அதன்பிறகு .. உண்மையான அந்தக்காதல் மீது உறுதியான நம்பிக்கையும் வைக்க நினைத்தான்..!! வாழ்க்கையில் இடர்பாடுகளை சந்திக்க நேருகிற வறியவர்கள்.. ‘எல்லாம் அந்த ஆண்டவன் பாத்துப்பான்’ என்று.. கடவுள் மேல் பாரத்தை போடுவது போல.. ஆசைக்காதலியின் அழகுமுகம் காணத்துடித்த அசோக்.. ‘எங்க காதல் எங்களை சேர்த்து வைக்கும்’ என்பது மாதிரி.. காதல் மேல் தனது பாரத்தை போட்டான்..!!

பாரதி அன்று பேசுகையில்.. ‘அவளை கண்டுபிடிச்சு.. அவ கழுத்துல தாலியை கட்டி.. நாலஞ்சு கொழந்தையை பெத்து..’ என்கிற ரீதிரில்.. ஒரு எதிர்கால கனவுடன் அவன் மனதில் நம்பிக்கையூட்ட முயன்றவிதம்.. அசோக்கை பொறுத்தவரையில் மிக சக்தி வாய்ந்ததாக அமைந்தது..!! அவனது மனம் சோர்ந்து போக ஆரம்பிக்கும் போதெல்லாம்.. அம்மா சொன்ன அந்த வார்த்தைகளையே அசோக் நினைவுறுத்திக் கொள்வான்..!! சட்டென்று ஒரு எதிர்கால கனவில் மூழ்க ஆரம்பித்து விடுவான்.. அந்த கனவு முழுக்க மீராவே நிறைந்திருப்பாள்..!!

திடீரென இவன் எதிரே வந்து நிற்பாள்.. திணறிப்போகிற மாதிரி இறுக்கி அணைத்துக் கொள்வாள்.. ‘உன்னை பாக்காம என்னால இருக்க முடியலடா’ என்று இவன் மார்பில் முகம் புதைத்து அழுவாள்..!! கன்னங்களில் வழிகிற நீர் துடைத்து இவன் கனிவுமொழி பேச.. கண்கள் இரண்டும் திறந்து வைத்து அவள் காதலாக பார்ப்பாள்..!! காதல்க்கதிர்வீச்சு நடத்துகிற அந்த காந்தப்பார்வையில்.. இவன் கசிந்துருகி, கவர்ந்திழுக்கப்பட்டு, கவனம் தடுமாறி நிற்கையில்.. அவள் இமைகளை மூடிக்கொள்வாள்.. இதழ்களை திறந்து வைப்பாள்..!! ‘அமுதம் பருகிக்கொள்.. அதனையே பகிர்ந்தும்கொள்..’ என.. அசைவேதுமின்றியே அழைப்பு விடுப்பாள்..!!

உதடுகள் உரசிக்கொள்ளும்.. உடனடியாய் ஒரு தீப்பிடிக்கும்..!! உதட்டுவரிப் பள்ளத்தில்.. உமிழ்நீர் என்கிற பெயரினில்.. சுரந்து வடிகிற தேனொன்றே.. சுகமான அத்தீயினை மூட்டியிருக்கும்..!! ஆசை ஏக்கம் அத்தனையும்.. அதரம் சுவைத்தே அடுத்தவருக்கு அறிவித்திட முயல்வர்..!! முத்தம் இவனை முரடனாக்கும்.. காதலனின் வேகம் அவளை கர்வம் கொள்ள வைக்கும்..!! இதழில் நடக்கும் வன்முறைக்கு.. அவளும் இயன்ற அளவு ஒத்துழைப்பாள்..!!

முத்தம் முடிந்து நெடுநேரம் ஆகியும்.. மூடிய இமைகளோடு.. முகமெல்லாம் உணர்ச்சி கொப்பளிக்க நின்றிருப்பாள்..!! அவள் உதட்டில் மினுமினுக்கும் முத்த ஈரத்தினை.. விரலினால் இவன் துடைக்க.. விழிகள் திறந்து கொள்ளும் அவளுக்கு..!! உதட்டினை உடனடியாய் உள்ளே மடித்துக் கொள்வாள்.. எச்சில் மிச்சத்தை நாவால் தடவி சுவை ருசிப்பாள்..!! கண்களில் பளிச்சென ஒரு மின்னல் பிறந்திட.. கன்னங்களில் அழகாய் ஒரு பள்ளம் தோன்றிட.. காதலும் குறும்பும் கலந்த குரலில் கேட்பாள்..!!

“கல்யாணம் பண்ணிக்கலாமா..??”

பட்டு உடலை தொட்டுப் போர்த்திய பட்டுப்புடவையும்.. மலர்ப்பந்து மார்பினில் வந்து புரண்டிடும் மலர்மணமாலையும்.. நடுவகிடு வழியிறங்கி நெற்றி தவழும் சுட்டியும்.. நாசியின் நடுத்தண்டுதனில் தொங்கி மேலுதடு முத்தமிடும் புல்லாக்கும்.. அஞ்சனம் பூசிய வண்டின கண்களும்.. சந்தனம் தடவிய பஞ்சின கன்னங்களுமாய்.. குத்துக்கால் இட்டமர்ந்து.. குனிந்ததலை குனிந்தேயிருக்க.. மணமகளோடு குணமகளுமாக மாறிப்போய்.. மந்திரத்தோடு வாத்தியமும் சேர்ந்தொலித்திட.. மஞ்சளால் ஆனதொரு மங்கலநாணினை வாங்கிக்கொள்வாள்.. மாலைகளை தோள்மாற்றிக்கொண்டு மனைவியும் ஆகிப் போவாள்..!!

அட்சதை தலையில் படிந்திருக்கும்.. ஆசீர்வாதம்பெற தரையில் பரவுவார்கள்.. அத்தையின் காலில் விழுந்து கிடக்கும் அவள்.. அப்பாவின் பாதம் பணிந்திருக்கிற இவனை பார்த்து.. குறும்பாக கண்சிமிட்டி குழிவிழுகிற கன்னத்தோடு சிரிப்பாள்..!!

கல்யாணம் முடிந்துவிடும்.. கனவோட்டம் முடிந்திடாது.. முதலிரவு தேனிலவென முடிவிலாமல் முன்னேறும்..!! நெஞ்சத்தில் பூத்திருந்தவள் மஞ்சத்தில் வீற்றிருப்பாள்.. நேரங்காலம் தெரியாமல் வெட்கமுற்று வெறுப்பேற்றுவாள்..!! தாகம் முற்றிப்போன இவன் மாராப்பினை பற்றியிழுக்க.. தளிர்க்கரங்களால் அவள் மலர்க்குவியல்கள் மறைத்திடுவாள்..!! ஆசையெனும் ஆயுதம் ஏந்தி.. நாணமெனும் கோட்டையை தகர்த்து.. ஆடையெனும் பகைவனை வெல்வார்கள்.. உள்ளத்தால் ஒன்றானவர்கள், இப்போது உடலாலும் உறவாடுவார்கள்..!! இவனது வேகம் அவளுக்கு பிடிக்கும்.. அவளது வியர்வையும் இவனுக்கு மணக்கும்..!! நெற்றிக் குங்குமம் ஈரத்தில் கரையும்.. மெத்தை மல்லிகை மோகத்தில் கசங்கும்..!! உஷ்ணம் கொண்டு உடல்கள் தகிக்கும்.. உச்சம் கண்டும் தேடல்கள் தொடரும்..!! பகல்ப்பொழுதுகளே பகையாகிப் போகும்.. இருமனங்களுமே இரவுக்கென ஏங்கும்..!!

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.. வா..!!”

தனியாக அழைத்து செல்வாள்.. தனது அடிவயிறு திறந்து காட்டுவாள்..!! புரியாமல் இவன் விழிக்க.. ‘புத்தூ’ என்று தலையில் தட்டுவாள்..!! கருத்தரித்த செய்தியை காதோரமாய் கிசுகிசுப்பாள்..!! ஆனந்தத்தில் இவன் திளைத்துக் கொண்டிருக்க.. அவளும் அதே ஆனந்தத்தில் விழைந்த கண்ணீரோடு..

“தேங்க்ஸ்டா..!!” என்று பைத்தியம் போல் உளறுவாள்.

வயிறு பெரிதாகிப்போக அவள் இடுப்பு பிடித்து நடப்பாள்.. கர்ப்பிணி மனைவிக்கு இவன் கால் அமுக்கி விடுவான்..!! அகம் இருப்பவனை நெஞ்சில் சாய்த்து அவள் தாலாட்டுவாள்.. அடம் பிடிப்பவளை கெஞ்சிக் கூத்தாடி இவன் சாதமூட்டுவான்..!!

“கண்ணு மூக்குலாம் அப்படியே உன்னை மாதிரிதான்..!!”

களைத்துப்போன உடலும், தளர்ந்துபோன குரலுமாய் அவள் சொல்ல.. இவன் கலங்கிப்போன விழிகளுடன், கையிலிருக்கும் குழந்தையை விடுத்து.. மனைவியின் நெற்றியிலேயே முதலில் முத்தம் வைத்திடுவான்..!!

“தேங்க்ஸ்டி..!!” என்று இவன் இப்போது பைத்தியம் போல் உளறுவான்.

ஐந்தே வருடங்கள்.. ஒன்று கழுத்தை பற்றி தொங்கும்.. ஒன்று மீசை பற்றி இழுக்கும்.. ஒன்று தொடையில் விழுந்து கடிக்கும்.. ஒன்று மூக்கில் விரலை நுழைக்கும்.. எல்லாவற்றிற்கும் கடைக்குட்டியோ மடியில் கிடந்துகொண்டு, எட்டி எட்டி இவன் மார்பிலேயே உதைக்கும்..!! ஐந்து குழந்தைகளுடன் இவன் அவஸ்தைப் படுவதை.. அடக்கமுடியா சிரிப்புடன் அவள் பார்த்து ரசிப்பாள்..!!

இந்த மாதிரியாகவே அவனது கனவு நீளும்.. திரும்ப திரும்ப அதே கனவினை காணுவான்.. சற்றேனும் திகட்டிடாது..!!

உறக்கத்தில் காண்கிற கனவு, உறங்கி எழுகையில் உபயோகமில்லாமல் போகலாம்.. விழித்திருக்கையில் காண்கிற கனவு, விழிப்புடனே வைத்திருக்க உதவலாம்..!! அசோக் கண்ட கனவு அவனது மனநிலைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. அடுத்த நாளை நோக்கி அவனது வாழ்க்கையை உந்தித் தள்ளியது.. நனவாக அக்கனவினை மாற்றிட வேண்டுமென.. நம்பிக்கையையும், வைராக்கியத்தையும் கொடுத்தது..!!

அசோக்கிடம் மட்டுமில்லாது அவனை சுற்றி இருந்தவர்களிடமும் ஒரு மாற்றத்தை காண முடிந்தது..!! அவனிடம் எதிர்மறையாக பேசுவதை முதலில் விட்டொழித்தார்கள்.. அசோக்கின் மனநிலையை இலகுவாக்குகிற மாதிரியான வார்த்தைகளையே கவனமாக சிந்தினர்.. ‘இன்றோ நாளையோ மீரா கிடைத்துவிடப் போகிறாள்’ என்பது மாதிரியான கற்பனையை அவர்களுமே மனதுக்குள் வளர்த்துக் கொண்டனர்.. அது அவர்களது பேச்சிலும் வெளிப்பட்டது.. அசோக்கின் மன இறுக்கம் அகல, அது மிக அவசியமாயிருந்தது..!!

“தைரியமா இரு மச்சி.. எங்க போயிட போறா அந்த கோயில்பட்டி வீரலட்சுமி.. புடிச்சிடலாம்..!!” என்று நம்பிக்கையாக சொன்னது, எப்போதும் எதிர்மறையாக பேசுகிற சாலமனேதான்.

எல்லாம் பாரதி இட்ட கட்டளை.. தனது குடும்பத்தாரிடம் மட்டுமில்லாது, அசோக்கின் நண்பர்களிடமும் கடுமையான உத்தரவு பிறப்பித்திருந்தாள்..!! அசோக் தூக்க மாத்திரையை தூக்கி சென்ற விஷயத்தை.. இரண்டு பேரிடம் மட்டுமே பாரதி சொல்லியிருந்தாள்..!! ஒன்று அசோக்கின் அப்பா மணிபாரதியிடம்.. இன்னொன்று கிஷோரின் அக்கா பவானியிடம்..!! பவானியை டெலிஃபோனில் அழைத்த பாரதி.. அன்றே அவளை வீட்டுக்கு வரவழைத்தாள்.. அசோக்கின் நிலையை கவலையுடன் எடுத்துரைத்தாள்..!!

“எப்படி இருந்த எம்புள்ளை இப்படி ஆயிட்டான்.. ஆளாளுக்கு எதை எதையோ சொல்லி அவன் மனசை ரொம்ப நோகடிச்சுட்டோம்..!! அவனை நெனச்சா எனக்கு ரொம்ப பயமா இருக்குது பவானிம்மா..!!” தளர்ந்த குரலில் சொன்ன பாரதிக்கு,

“ப்ச்.. என்னத்தை நீங்க..?? நீங்களே இப்படி உடைஞ்சு போயிட்டா எப்படி..?? ஹ்ம்ம்.. அவனை பத்தி நீங்க இனிமே வொர்ரி பண்ணிக்காதிங்க.. எல்லாம் நான் பாத்துக்குறேன்..!!” பவானி தைரியமூட்டினாள்.

அசோக்கை தனது அரவணைப்புக்குள் எடுத்துக்கொண்டாள் பவானி..!! தனது உறவினன் என்பதை மறந்து.. மனஅழுத்தம் கொண்ட ஒரு பேஷண்ட்டை எப்படி அணுகுவாளோ, அந்த மாதிரி மிக கவனமாக அவனை அணுகினாள்..!! அசோக்கின் நிலை பற்றிய கவலையும், பாரதிக்கு கொடுத்த வாக்குறுதியும் அவள் மனதில் இருந்தன.. ஆனால் அவற்றை எப்போதும் அவளது குரலிலோ, நடவடிக்கையிலோ அவள் காட்டிக்கொண்டது இல்லை..!! இயல்பாக நடந்து கொள்வாள்.. இலகுவான குரலில் பேசுவாள்.. மிக அழகாக அசோக்கின் கவனத்தை திசை திருப்புவாள்.. அவன் அறியாமலே அவன் மனதுக்குள் நம்பிக்கை விதைகளை தூவுவாள்..!! மேற்சொன்ன அசோக்கின் மனமாற்றத்தில் பவானியின் பங்கும் மிக முக்கியமானது..!!

“உனக்கு ஒரு விஷயம் தெரியுமா..?? Stress-ன்றது நம்ம எல்லார்ட்டயுமே இருக்குது அசோக்.. நம்மளோட நார்மல் லைஃப்க்கு அந்த Stress ரொம்ப ரொம்ப essential..!! Stress இல்லாத மனுஷன்னா.. அது ஏதாவது கோமால கெடக்குற பேஷன்ட்தான்..!! என்ன.. அந்த Stress ஒருஅளவுக்கு மேல போறப்போதான் பிரச்னை.. அமிர்தம் கூட அளவுக்கு மிஞ்சினா நஞ்சுதான..?? காய்ச்சல் தலைவலி மாதிரிதான் இதுவும்.. கொஞ்சநாள் ட்ரீட்மன்ட் எடுத்துக்கிட்டா எல்லாம் சரியா போய்டும்..!! உன் ஆளு திரும்ப வர்றப்போ.. இப்படியா சீக்குக்கோழி மாதிரி அவ முன்னாடி நிப்ப..?? அப்படியே சிங்கம் மாதிரி நிக்க வேணாம்.. ஹஹா..!! என்ன சொல்ற..??”

“அச்சச்சோ.. அக்காக்கு லேட் ஆயிடுச்சுடா.. உன் பைக்ல என்னை ஹாஸ்பிடல் வரை ட்ராப் பண்றியா..??”

“ம்ம்.. வந்தது வந்துட்ட.. ‘Art of Living’ class ஆரம்பிக்கப் போகுது.. சும்மா அட்டண்ட் பண்ணி பாக்குறியா..??”

தற்கொலையை முயலாம் என்று அசோக் நினைத்த அன்றே.. அவன் வாழ்தல்கலையை பயிலுமாறு அமைந்து போனது..!! முதல்நாள் அனுபவம் அவனுக்குமே பிடித்திருந்ததால்.. அதன் பிறகு தினமும் அந்த வாழ்தல்கலை வகுப்புக்கு வருகை தர ஆரம்பித்தான்..!! முன்பொருமுறை டாகுமன்ட்ரி எடுப்பதற்காக அங்கே வந்திருந்தபோது அறிமுகமான மும்தாஜ்தான்.. இப்போது அசோக்கிற்கு யோகா பயிற்றுவித்தாள்..!! அசோக்கின் நிலையை பவானியின் மூலமாக மும்தாஜும் ஓரளவு அறிந்திருந்தாள்.. அவளும் அசோக்கிடம் தனிக்கவனம் எடுத்துக் கொண்டாள்..!!

“தலையை மேல கொண்டு போறப்போ மூச்சை நல்லா உள்ள வாங்கணும்.. அப்புறம் தலையை கீழ கொண்டு வர்றப்போ கொஞ்சம் கொஞ்சமா ரிலீஸ் பண்ணனும்..!!” கண்கள் மூடி அமர்ந்திருந்த அசோக்கின் தாடையை தாங்கியவாறு மும்தாஜ் சொன்னாள்.

“உடம்புன்றது நாம சாப்பிட்ட சாப்பாட்டோட விளைவு.. மனசுன்றது நாம பார்த்த, கேட்ட, படிச்ச விஷயங்களோட விளைவு..!! உடம்பு, மனசு.. இது ரெண்டுமே நாம கெடையாது..!! இது ரெண்டுல இருந்தும் நம்மள நாமளே பிரிச்சு எடுக்குறதுதான் தியானம்..!!” மேடையில் நின்று மும்தாஜ் சொல்ல, தரையில் இன்னும் சிலருடன் அமர்ந்திருந்த அசோக், அதை கவனமாக கேட்டுக்கொண்டான்.

“இந்த உலகத்துல வந்து பொறக்குறதை.. நாம எப்படி முடிவு பண்றது இல்லையோ.. அந்த மாதிரி இந்த உலகத்தை விட்டு போறதையும்.. நாம முடிவு பண்ணக் கூடாது அசோக்..!! அட்வைஸ் பண்றேன்னு நெனச்சுக்காதிங்க.. எனக்கு அந்த அருகதைலாம் இல்ல.. ஹ்ஹ..!! ஏதோ என் மனசுல தோணுனதை சொன்னேன்.. அவ்வளவுதான்..!! ம்ம்.. இந்தாங்க..!!” அசோக்கிற்கு தேநீர் கலந்து நீட்டிக்கொண்டே, ஒரு இதமான புன்னகையுடன் மும்தாஜ் சொன்னாள்.

வகுப்பின்போதும்.. வகுப்பு முடிந்து உரையாடுகிறபோதும்.. அசோக்கின் மனக்காயம் ஆறுவதற்கு.. மும்தாஜும் முடிந்த அளவு உபயோகமாக இருந்தாள்..!! மீதி நேரங்களில்.. பவானி தன்னால் இயன்ற அளவுக்கு அசோக்குடன் நேரத்தை செலவழித்து.. அவனது மனமாற்றத்துக்கு பெருவுதவி செய்தாள்..!!

“ஏன் கோவம் வருது..?? உன் மனசுல ஒரு கான்ஃபிடன்ஸ் இருந்தா.. உனக்கு கோவம் வர்றதுக்கு அவசியமே இல்லையே..?? யாரோ என்னவோ சொல்லிட்டு போறாங்கன்னு நீ கூலா இரு..!!” – அசோக்குடன் பைக்கில் செல்கையில் பவானி.

“தம்மடிக்கிறது தண்ணியடிக்கிறதுலாம் உனக்கு ஒரு temporary comfort தரலாம் அசோக்.. But.. long termல பாக்குறப்போ.. it’s too dangerous..!! உன் ப்ராப்ளத்துக்கு அது சொல்யூஷன் இல்ல..!!” – அலுவலக அறையில் தனக்கு எதிரே அமர்ந்திருந்த அசோக்கிடம் பவானி.

“ஏண்டா.. அவளுக்கு பிடிக்குமேன்னு ஆசையா வளர்த்தேன்னு சொல்ற.. இப்படியா தண்ணி ஊத்தாம காய விடுறது..?? நாளைக்கு அவ வந்து இதை பாத்தான்னா என்ன நெனைப்பா..?? அவ வர்றவரைக்கும் நீதான் இதை நல்லா கவனிச்சுக்குற.. சரியா..?? மார்னிங், ஈவினிங் ரெண்டு நேரமும் மறக்காம தண்ணி ஊத்தணும்.. அவ வந்து பாக்குறப்போ அப்படியே சொக்கிப் போயிடணும்..!!” – வீட்டின் பின்புறமிருந்த மஞ்சள் ரோஜா தோட்டத்தை நோட்டமிட்டவாறே பவானி.

மீராவின் வருகை பற்றி, அசோக் அறியாமல் அவன் மனதில் நம்பிக்கை வளர்ப்பது மட்டுமல்லாமல்.. சில சமயங்கள் நேரிடையாகவே, அசோக்கிடம் மீரா பற்றி பேசி அறிந்துகொள்வாள்..!!

“ஹ்ம்ம்.. தேடுதல் வேட்டை எந்த லெவல்ல இருக்குது..?? ஏதாவது லீட் கெடைச்சதா..?? என்னைக்கு அந்த அழகு மூஞ்சியை என் கண்ணுல காட்டப்போற..??”

“ப்ச்.. எந்த லீடும் கெடைக்கலக்கா.. எல்லாம் அப்படியே ப்ளாங்கா இருக்கு.. ஏதோ இருட்டு ரூமுக்குள்ள குருட்டு பூனை அலையுற மாதிரி இருக்கு..!!”

“ஏண்டா இப்படி பேசுற..?? அவகூட பேசினது பழகினதுலாம் கொஞ்சம் பொறுமையா நெனச்சு பாரு.. ஏதாவது லீட் கெடைக்கும்..!!”

“எல்லாம் நெனச்சு பாத்துட்டேன்க்கா.. எதுவும் பிடிபடல..!! எவ்வளவு பொய் சொல்லிருக்கா தெரியுமா..?? நான் உண்மைன்னு நெனச்சது எல்லாமே.. கடைசில பொய்..!! வரைமொறையே இல்லாம பொய் பொய்யா சொல்லிருக்கா.. சரியான புழுகு மூட்டை..!!” அசோக் சொன்னவிதம் பவானிக்கு சிரிப்பை வரவழைத்தது.

“ஹாஹாஹாஹா..!! ஓகே ஓகே..!! ஹ்ம்ம்… சரி.. அப்போ இப்படி பண்ணு.. கொஞ்சம் உல்ட்டாவா திங்க் பண்ணி பாரு.. ஏதாவது யூஸ்ஃபுல் மேட்டர் கெடைக்குதான்னு பாக்கலாம்..!!”

“உல்ட்டானா.. எப்படி..??”

“ம்ம்ம்ம்ம்.. எப்படி சொல்றது.. நீ உண்மைன்னு நெனச்சது எல்லாம் பொய்யா போச்சுன்னு சொன்னல..?? அப்படினா.. நீ பொய்னு நெனைக்கிற விஷயம் எதாவது ஏன் உண்மையா இருக்க கூடாது..?? அந்த ஆங்கிள்ல யோசிச்சு பாரு..!!”

“ம்க்கும்.. ஏன்க்கா நீங்க வேற..?? நானே கன்ஃப்யூஸ் ஆகிப்போய் கெடக்குறேன்.. நீங்க காமடி பண்ணிட்டு இருக்குறீங்க..??” அசோக் நொந்துபோன குரலில் சொல்ல,

“ஹாஹாஹாஹா..!! காமடி பண்ணலடா.. சீரியஸா சொல்றேன்..!!” பவானி சிரித்தாள்.

பவானியின் சிரிப்பு அசோக்கின் முகத்திலும் புன்னகையை பூக்க செய்தது..!! இந்த மாதிரி.. அசோக்கின் மனநிலை தேறுவதற்கும்.. ஒரு இதமான சூழ்நிலையை அவனுக்கு உருவாக்கி தருவதற்கும்.. அடுத்த நாளின் மீது அவனுக்கு ஒரு பிடித்தத்தை ஏற்படுத்துவதற்கும்.. பாரதி, பவானி, மும்தாஜ் ஆகிய மூன்று பெண்களுமே.. மிக மிக முக்கியமான பங்காற்றியிருந்தனர்..!!

மும்தாஜுடன் முன்பே இருந்த அறிமுகத்துடன்.. இப்போது வகுப்புக்கு வந்த இந்த பத்து நாட்களில்.. அவளுடனான அசோக்கின் நெருக்கம் நிறையவே அதிகரித்திருந்தது..!! மாலை நேரத்தில் வகுப்பு முடிந்தவுடன்.. மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே இருந்த சிறிய பூங்காவில்.. விளையாடுகிற குழந்தைகளையும், வாக்கிங் செல்கிற நோயாளிகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டே.. சிறிது நேரம் அவர்கள் பேசிக்கொண்டிருப்பது வாடிக்கையாகிப் போனது..!! ஆரம்பத்தில் பொதுவான விஷயங்கள் பேசிக்கொண்டவர்கள்.. பிறகு பர்சனல் விஷயங்களைக்கூட பகிர்ந்து கொண்டனர்கள்..!!

“இந்த புக் எனக்கு ரொம்ப பிடிக்கும் அசோக்..!! உங்களுக்கு படிக்கிறதுக்கு டைம் இருக்காதுன்னு எனக்கு தெரியும்.. இருந்தாலும்.. எனக்காக கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.. சரியா..??”

மும்தாஜ் நீட்டிய புத்தகத்தை வாங்கிகொண்டான் அசோக்.. பக்கங்கள் நிறைந்த தடிமனான புத்தகம்..!! புன்னகை படிந்திட்ட உதட்டுடன்.. புத்தகத் தலைப்பின் மீது பார்வையை வீசியவனுக்கு.. ஒரு புதுவித ஆச்சரியம்..!!

“தட்டுங்கள் திறக்கப்படும்..!!”

இயேசு கிறிஸ்துவின் போதனைகளை உள்ளடக்கிய புத்தகம் என்பது.. அந்த தலைப்பை பார்த்ததுமே புரிந்து போனது..!! அட்டையை புரட்டி பொருளடக்க பட்டியல் பார்த்து.. அந்த சந்தேகத்தை உறுதியும் செய்துகொண்டான் அசோக்..!! அப்படியே மும்தாஜை ஏறிட்டு.. மெலிதான ஒரு புன்முறுவலுடன் சொன்னான்..!!

“க்ரேட்..!!!”

“எ..என்ன.. என்ன க்ரேட்..??”

“இல்ல.. ஒரு முஸ்லிம் பொண்ணு.. ஒரு ஹிந்து பையனுக்கு.. கிறிஸ்டியன் புக் படிக்க தர்றீங்களே.. அதை சொன்னேன்..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



பொச்சு விரித்த கதைவிதவை மாமியார் புண்டை நக்கு xnxx.tvparkil otha kadhaitamil pengal pundai types tips அத்தை மருமகன் காம கதை படம்டீச்சர் காம கதைகள்sex story in tamilபுண்டைஆண்டிஎன் பாவாடையை தூக்கி என் புண்டையை அவனுக்கு காண்பித்துநிர்வாண.ஆடல்.புண்டைathaiyin koothi kilintha kathaiTamil sex videos Kadai velakkari வெட்கப்படும் காலேஜ் பொண்ணு முதல் செக்ஸ் ...பெரிய முலை புதிய படங்கள்சதா முலை பால் xxnx sexஅம்மா மகனுக்கு மனைவியான காம கதைகள்♥இதயப் பூவும்.. இளமை வண்டும் -49காதலியை மிரட்டி ஓத்த கதைகள்real kumark amma magan sexலேடிஸ் மார்பகம் SexMamiyarudan muthal erau tamil sex kathaigalஓல் சின porn xxபுண்டைய ஓத்து நக்கி ஊம்ப குத்தாட்டம்Tamil kama kathaikal vendam vittuduடேய் விடுடா இரவு பாத்துகலாம் அம்மா காமகதைதமிழ் காமகதைகள்காதலன் காதலி நிர்வாணம் முலை படங்கள்nadigaikal ole kathaikalx tamil scandalகாம வெறிபெண்கள் கூதியில் ஓண்னூக் இருக்கும் விடியோ விடியோ தமிழ் பள்ளி மாணவி முலை போட்டோஸ்An orenaserkai kama kathaikalதமிழ் ஆஆஆ விரல் போடும் காமவீடியோதமிழ்நாடு டிச்சர் செஸ்abasa kathigalManaivi thangai kama kathaikalகிராமத்து சலூன் கடை கதைகள்கொழு கொழு புண்டை வீடியேதங்கையை நாயை விட்டு ஓக்க வைத்த அண்ணன்Naattu kattai aunti sexதமிழ் ஆண்டி முளை பிசையவும் வீடியோSubee.sax.videoஅன்புடன் அப்பா காம கதைசெக்ஸ்முலைஅண்ணி கூதி அரிப்புகுண்டுமுலைமுலைசப்புதல்ஆடை இல்லாத மேனிஅண்ணிகூதிதமிழி செஸ் படம்Kudumba kalla ool tamil kamakkathikalகவிதா அபச கூதி படம்tamil scandal photosexvedyothamiஆண்ட்டி.ஓக்கும்.படங்கள்தழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்தமிழ் சூடான ஆஆஆஆ காமக்கதைஅம்மாவோடு காமபாடத்தைauntie kulikum pothu marainthu erunthu kama kathai in Tamilதிபா புன்னட கள் பல கூதிகள் கண்ட காமகதைpaal suvaithu tamil sex storyTHAMIL nadikai sxsரம்பா.முலை.படம்tamil neighbor kalla kadhal kathaigalஅக்கா காமகதைamma karpitha kana paadam kamakathai தமிழ் செக்ஸ் புக் அம்மா சித்தப்பாஅழகா ஆண்டிபுண்டைfree tamal sex வீடியோக்கள் htwww.tamilpundaiphotos.comwww thamil sex storytamil my akkavai miratti ottha my appa kathaiஆண்டி முலைமயக்கி ஓக்கும் காம கதைAnnaavin kaamamகணவன் மனைவியை கட்டிலில்குன்டு புன்டை செக்ஸ் வீடியோபெண்கள் புண்டையில் ஓண்னூக்இருக்கும் விடியோ யோவிதவை சித்தி இன்சிஸ்ட் காமக்கதைகள் site:lomaster-spb.ruரேவதி Sex sex விடியெதங்கையின் முலை கசக்கும் வீடியோகூதி.முலைஹோமோ செக்ஸ்www.ammavai otha story tamilஆண்டி செக்ஸ்tamil sex kadhaigalAnut neu xxx photkamaveri kathai tamilnn tamilhotsexஆண்டிபுண்டைAmmavuku brandy koduthu Okkum kathaigalஆடை இல்லாத மேனிSEXFOTOTAMELpachai pachaiyaga pesum grama jodi kamakathaikal