அன்புள்ள ராட்சசி – பகுதி 28

“ம்க்கும்.. உங்க கூட இருபத்தஞ்சு வருஷமா வாழ்ந்திருக்கேன்.. எனக்கு தெரியாதா நீங்க என்ன நெனைப்பீங்கன்னு..??” சொன்ன பாரதி, பிறகு மீராவிடம் திரும்பி,

“அவர் கெடக்குறாரு விடும்மா.. நீ நல்லா சாப்பிடு.. இந்தா..” என்றவாறு தட்டில் இருந்த ஒரு பிஸ்கட்டை எடுத்து மீராவின் வாய்க்கருகே கொண்டு சென்றாள்.

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

“இ..இருக்கட்டும் ஆன்ட்டி.. நான் சாப்பிட்டுக்..”

“பரவாலமா.. இப்போ என்ன.. என் மருமகளுக்கு நான் ஊட்டி விடக் கூடாதா..?? ம்ம்..?? இந்தா.. சாப்பிடு..!!” பாரதி ஊட்டிவிட, மீரா பிஸ்கட்டை ஒரு கடி கடித்தாள்.

“உனக்கு காரந்தான் புடிக்கும்னு.. ஆண்ட்டி உனக்காகவே ஸ்பெஷலா இந்த சில்லி பிஸ்கட் செஞ்சேன்.. எப்டி இருக்கு..??”

“ம்ம்.. நல்லா இருக்கு ஆன்ட்டி..!!”

“மதியத்துக்கு.. ஹைதராபாத்தி ஸ்டைல்ல சிக்கன் செஞ்சுட்டு இருக்கேன்..!! இவங்க யாருக்கும் காரமே பிடிக்காது.. ஆண்ட்டி உனக்கு மட்டும் கொஞ்சம் தனியா.. காரசாரமா பண்ணிடுறேன்.. என்ன..??”

“ஐயோ.. எதுக்கு ஆண்ட்டி அதெல்லாம்.. தேவை இல்லாம உங்களுக்கு கஷ்டம்..??”

“அட.. இதுல என்னம்மா கஷ்டம் இருக்கு..?? ஆண்ட்டிக்கு பிடிச்ச வேலையே சமைக்கிறதுதான் தெரியுமா..?? உனக்கு சமையல் தெரியாதுன்னு அசோக் சொல்லிருக்குறான்.. ஒன்னும் கவலைப்படாத.. ஆண்ட்டி இருக்கேன்.. கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாம் நானே பாத்துக்குறேன்..!!”

“ம்ம்..”

“மதியம் சாப்பிட்டுட்டு.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு.. அப்புறம் சாயந்திரம் எல்லாரும் கபாலீஸ்வரர் கோயில் போயிட்டு.. அப்படியே பீச்சுக்கும் போயிட்டு வரலாம்..!! சரியா..??”

“ம்ம்..”

“இந்தா.. சாப்பிடு.. எல்லாம் உனக்காக செஞ்சதுதான்..!!” பாரதி மீண்டும் ஒரு பிஸ்கட் எடுத்து, மீராவுக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.

பாரதியின் அறையில் இருந்த மீராவை, பிறகு கோமளவல்லி வந்து தங்கள் அறைக்கு அழைத்து சென்றாள். மீராவும் கோமளவல்லியும் மெத்தையில் அமர்ந்திருக்க, நாராயணசாமி அந்தக்கால தனது மேடை நடிப்பின் சாம்பிள் ஒன்றை, மீராவுக்கு நடித்து காட்டினர். அவளும் ‘வாவ்..’ என்று கைதட்டி ரசித்தாள்.

“அந்தக் காலத்துல நான் மேடையேறினதும்.. ‘தேசமெல்லாம் வென்று முடிக்க.. தேசிங்கு ராசா வந்தேனே..’ன்னு கணீர் குரல்ல பாடிக்கிட்டு.. நெஞ்சை நிமித்தி கம்பீரமா ஆடிக்கிட்டே.. வாளை இப்படி எடுத்து.. அப்படி ஒரு சொழட்டு சொழட்டி இழுத்தேன்னு வச்சுக்கோ.. முன்னாடி உக்காந்திருக்குற அத்தனை பொட்டைப் புள்ளைக மனசும்.. அந்த வாளோட சேர்ந்து வந்துரும்.. அதை அப்படியே மொத்தமா என் இடுப்புல சொருகிப்பேன்..!!”

“ஹாஹாஹாஹா..!!” தாத்தாவின் பேச்சு ஸ்லாங்கும், பாடி லாங்குவேஜும் மீராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. எளிறுகள் தெரிய அழகாக சிரித்தாள்.

“எத்தனை புள்ளைக.. எவ்வளவு ஸ்னேஹிதம்.. அது ஒரு காலம்..!! ஊருக்கு ஒரு பத்து சிட்டுகளாவது.. என்னோட சோடி சேர்ந்து பறக்க ரெடியா இருந்தாளுக.. தெரியுமா..??”

“க்ரேட்..!!” மீரா தாத்தாவை பாராட்ட, கோமளவல்லிக்கு ஏனோ இப்போது மனதுக்குள் ஒரு புகைச்சல்.

“ம்க்கும்.. உங்க பழைய பெருமையை பேசலைன்னா.. தூக்கம் வராதே உங்களுக்கு ..??” என்று முகவாய்க்கட்டையை தோள்ப்பட்டையில் இடித்துக் கொண்டாள்.

“ஹாஹா.. பாத்தியா.. உன் பாட்டிக்கு கோவத்த..?? இது தாத்தாவை புரிஞ்சுக்காம வர்ற கோவம் இல்லம்மா மீராக்கண்ணு.. தாத்தா மேல இருக்குற பிரியத்தால வர்ற கோவம்..!! இந்த பிரியந்தான்.. கள்ளம் கபடம் இல்லாத இந்த பாசந்தான்.. ஏதோ பொறக்குறப்போவே ‘இவன்தான் என் புருஷன்’னு சாமிகிட்ட வரம் வாங்கிட்டு வந்தவ மாதிரி.. இவ எங்கிட்ட பழகுன விதந்தான்.. அத்தனை பொட்டைப் புள்ளைகளையும் விட்டுப்புட்டு.. இந்த மகராணி காலடில விழுந்துபுட்டேன்..!! ஹாஹா..!!”

நாராயணசாமி சிரிப்புடன் சொல்ல, இப்போது கோமளவல்லி வெட்கத்தில் முகம் சிவந்துபோய் தலையை குனிந்து கொண்டாள். அவர்கள் இருவரையுமே மீரா ஒரு மரியாதை கலந்த பெருமிதத்துடன் பார்த்தாள். நாராயணசாமி இப்போது மெல்ல நடந்து வந்து மீராவுக்கு அருகே அமர்ந்து கொண்டார். அவளுடைய கையை எடுத்து வாஞ்சையாக தடவிக் கொடுத்தவர், பிறகு மெல்லிய குரலில் கேட்டார்.

“நான் எதுக்கு இவ்வளவு நேரம் என்னைப் பத்தி சொன்னேன் தெரியுமா மீராக்கண்ணு..??”

“இ..இல்ல.. தெரியல.. எ..எதுக்கு..??”

“நான்தான் இந்த மாதிரிலாம்.. நெறைய பொட்டைப் புள்ளைக ஸ்னேஹிதம்..!! என் பேரன் அப்படி இல்லைம்மா.. அதை சொல்றதுக்குத்தான்..!!” நாராயணசாமி சொல்ல, மீரா அவரை சற்றே திகைப்பாக பார்த்தாள்.

“ஓ..!!”

“இதுவரை எந்த பொண்ணு கூடவும் அவன் பழகினது கெடையாது.. இத்தனை வருஷத்துல ‘என் பிரண்டு’ன்னு சொல்லிட்டு, எந்தப் பொண்ணையும் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது கெடையாது..!! ஆனா.. அவன் அப்படி யாரையாவது கூட்டிட்டு வர மாட்டானான்னு இந்த குடும்பம் ரொம்ப ஏங்கி கெடந்தது..!! இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும்.. அல்லி ராணியும், அர்ஜுனனும் மாதிரி நடை நடந்து இந்த வீட்டுக்கு வந்தப்போ.. எங்க மனசே அப்படியே நெறைஞ்சு போச்சம்மா..!!”

“ம்ம்..”

“என் அளவுக்குலாம் என் பேரனுக்கு வெவரம் பத்தாது.. சூதுவாது தெரியாத பய..!! கொஞ்சம் வெளையாட்டு புத்தி.. ஆனா ரொம்ப ரொம்ப நல்லவன்மா.. அவனை கட்டிக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்மா..!!” பெருமிதமாக சொன்ன நாராயணாசாமி, பிறகு மனைவியிடம் திரும்பி,

“என்ன கோமளா.. நான் சொல்றது சரிதான..??” என்று அபிப்ராயம் கேட்டார்.

“ரொம்ப சரியா சொன்னீங்க..!!” கோமளவல்லி மலர்ந்த முகத்துடன் புன்னகைத்தாள்.

மீராவுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஒருவித திகைப்புடன், அமைதியாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். இப்போது கோமளவல்லி மீராவை நெருங்கி அமர்ந்தாள்.

“பெரிய ஜமீன் குடும்பம்மா என்னோடது.. கட்டுன பொடவையோடதான் இவர் என்னை வர சொன்னாரு.. ஆனா இது கூடவே ஒட்டிக்கிட்டு வந்துடுச்சு..”

சொல்லிக்கொண்டே தன் கைவிரலில் போட்டிருந்த மோதிரத்தை கோமளவல்லி கழட்டினாள். எதுவும் புரியாமல் மீரா பார்த்துக் கொண்டிருக்கையிலேயே,

“பரம்பரை மோதிரம்.. வெலை மதிப்பில்லாதது.. இத்தனை நாளா நான் போட்டுக்கிட்டேன்.. இனிமே நீ போட்டுக்கோ கண்ணு..!!” என்றவாறு மீராவின் விரலில் அணிவிக்க முயன்றாள் கோமளவல்லி. மீரா பதறிப் போனாள்.

“ஹையோ.. எ..என்ன பாட்டி இது.. ப்ளீஸ்.. வேணா..”

“இல்ல இல்ல.. அப்படிலாம் சொல்லக் கூடாது.. மொத மொறையா வீட்டுக்கு வந்திருக்குற.. உனக்கு ஏதாவது கொடுக்கணும்னு பாட்டிக்கு ஆசை இருக்காதா..?? ம்ம்..??”

“பாட்டி ரொம்ப ஆசைப்பட்டு தர்றா.. வேணான்னு சொல்லக்கூடாது மீராக்கண்ணு.. போட்டுக்கோ..!!”

கோமளவல்லியோடு சேர்ந்து நாராயணசாமியும் மீராவை வற்புறுத்த, வேறு வழி இல்லாமல் மீரா அந்த மோதிரத்தை அணிந்து கொள்ள வேண்டி இருந்தது. பளிச்சிடுகிற சிறுசிறு வெண்ணிற கற்கள் பாதிக்கப்பட்டு.. பளபளத்த அந்த மோதிரத்தை.. பார்த்துக்கொண்டே இருந்த மீராவுக்கு.. அவளையும் அறியாமல் கண்கள் பனித்துக் கொண்டன..!!

கொஞ்ச நேரத்திலேயே சங்கீதா பாட்டியின் அறைக்குள் கடுகடுத்த முகத்துடன் நுழைந்தாள்.

“போதும் போதும்.. ஆளாளுக்கு பேசி அண்ணியை மொக்கை மேல மொக்கை போட்டது..!! இன்னும் ஒரு மணி நேரத்துக்கு என்னோட கோட்டா.. அண்ணியை என் ரூமுக்கு கூட்டிட்டு போறேன்.. யாரும் எங்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது சொல்லிட்டேன்..!!” என்றவாறே உள்ளே வந்தவள், மீராவை நெருங்கி உரிமையாக அவளுடைய கையை பிடித்து எழுப்பினாள்.

“வாங்க அண்ணி.. என் ரூமுக்கு போகலாம்..!! உங்ககிட்ட பேசுறதுக்கு எனக்கு எக்கச்சக்கமான மேட்டர் இருக்குது..!!”

மீரா சங்கீதாவுடன் அவளுடைய அறைக்கு நடந்தாள். ‘பேசுறதுக்கு’ என்று சங்கீதா சொன்னது தவறு.. ‘பாடுறதுக்கு’ என்று சொல்லியிருக்க வேண்டும்..!! தன்னுடைய லேப்டாப் திறந்து.. தான் தயாரித்து வைத்திருந்த வாய்ஸ் ஆல்பத்தை.. மீராவுக்கு போட்டுக் காட்டினாள்..!!

“ஹெட்ஃபோன் போட்டுக்கங்க அண்ணி.. அப்போத்தான் க்ளியரா இருக்கும்..!!”

சங்கீதாவே மீராவுக்கு ஹெட்ஃபோன் மாட்டி விட்டாள். Folk, Hindustani, Carnatic, Western என.. விதவிதமாய் தனது குரல் திறமையை கொட்டி.. இசையுடன் சேர்த்து பாடி வைத்த பாடல்களை எல்லாம்.. ஒவ்வொன்றாக ஓடவிட்டாள்..!! சங்கீதாவின் அறையில் மீரா இருந்த முக்கால்வாசி நேரம்.. அவளுடைய பாடலைக் கேட்பதிலேயே கழிந்து போனது..!!

“இதை கேளுங்க அண்ணி.. இது ரொம்ப நல்லா இருக்கும்..!! பாட்டு ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு ஆலாபனை பண்ணிருப்பேன்.. அதுதான் ரொம்ப ஸ்பெஷல்.. கேட்டுப்பாத்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க..!!”

ஹெட்ஃபோனில் கசிகிற சங்கீதாவின் குரலை மீரா ரசிக்க.. தனது குரலை ரசிக்கிற அண்ணியின் முகபாவனையையே சங்கீதா ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்..!! பாடலை கேட்டு முடிந்ததும்..

“எப்படி அண்ணி இருக்கு..??” சங்கீதா ஆர்வமாக கேட்க,

“சான்ஸே இல்ல.. லவ்லி வாய்ஸ் உனக்கு..!!” மீரா மனம் திறந்து பாராட்டினாள்.

“ரியல்லி..?? பிடிச்சிருக்கா உங்களுக்கு..??” சங்கீதாவின் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.

“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. க்ரேட்..!!!”

“தேங்க்யூ அண்ணி.. தேங்க்யூ ஸோ மச்..!!”

“ஹ்ம்ம்.. நீ இவ்வளவு நல்லா பாடுற.. அசோக் உன் வாய்ஸ் பத்தி என்னல்லாம் சொல்லிருக்கான் தெரியுமா..?? அவனுக்கு ரசனையே இல்ல சங்கி.. சுத்த வேஸ்ட்டு..!!”

“ஹஹ.. இல்ல அண்ணி.. அப்படி சொல்லாதிங்க..!! ரசனை இல்லாமலா உங்கள லைஃப் பார்ட்னரா சூஸ் பண்ணிருக்கான்..?? உங்க கூட பேசின மொதநாளே உங்களை ஐ லவ் யூ சொல்ல வச்சானே.. அவனா சுத்த வேஸ்ட்டு..??”

சங்கீதா திடீரென அந்தமாதிரி சீரியஸான குரலில் சொல்ல, மீரா இப்போது பதில் பேச முடியாமல் வாயடைத்துப் போனாள். ஒருவித திகைப்புடன் சங்கீதாவையே பார்க்க, அவளோ இவளுடைய முகத்தையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்புறம் சற்றே மென்மையான குரலில் சொன்னாள்.

“உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா அண்ணி..??”

“என்ன..??”

“எல்லாரும்.. அண்ணன்தான் உங்களை இந்த வீட்டுக்கு கொண்டுவந்ததா நெனைக்கிறாங்க.. ஆனா அவன் இல்லைன்னு எனக்கு மட்டுந்தான் தெரியும்..!!” சங்கீதா சொல்ல, இப்போது மீராவின் முகத்தில் ஒரு ஆச்சரிய சுருக்கம்.

“அ..அசோக் இல்லையா.. அப்புறம் யாரு..??”

“அந்த ஆண்டவன்..!!” சங்கீதா அழுத்தம் திருத்தமாக சொல்ல, மீராவின் ஆச்சரியம் மேலும் அதிகரித்தது.

“எ..என்ன சொல்ற நீ.. எனக்கு புரியல..!!”

“சொல்றேன்..!! அண்ணனும் நானும் அடிக்கடி சண்டை போடுவோம் அண்ணி.. ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ரொம்ப ப்ரியம் இருந்தாலும்.. அதை வெளிய காட்டிக்காம.. எந்த நேரமும் சண்டை போட்டுட்டே இருப்போம்..!!”

“ம்ம்..!!”

“ஒருநாள் அந்த மாதிரி சண்டை போடுறப்போ.. கோவத்துல.. கொஞ்சம் கூட அறிவே இல்லாம.. அண்ணனை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டேன்..!! ‘உனக்குலாம் லவ் மேரேஜ் நடக்காது.. உன் மூஞ்சியலாம் எவளுக்கும் பிடிக்காது.. எவளும் உன்னை லவ் பண்ணமாட்டா..’ அப்டின்னு.. கோவத்துல ரொம்ப ஹார்ஷா பேசிட்டேன்..!!”

“ஓ..!!”

“ஆரம்பத்துல என் மேல இருந்த தப்பு எனக்கு புரியல..!! ஆனா அப்புறம்.. பொறுமையா யோசிச்சு பாக்குறப்போ.. நான் பேசினதைக் கேட்டு அண்ணன் எப்படி துடிச்சு போயிருப்பான்னு எனக்கு புரிஞ்சது.. ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணேன்..!!”

“ம்ம்..!!”

“அடுத்த நாள் அண்ணன்ட்ட ஸாரி கேட்டும் எனக்கு மனசு ஆறல..!! என்ன பண்றதுன்னு தெரியாம.. கோயிலுக்கு கெளம்பி போயிட்டேன்.. நான் செஞ்ச தப்புக்கு சாமிகிட்ட மன்னிப்பு கேட்டேன்.. ‘கூடிய சீக்கிரம் அண்ணனுக்கு காதல் வரம் குடுத்து.. என் மூஞ்சில கரியை பூசு சாமி..’ன்னு.. மனசார வேண்டிக்கிட்டேன்..!! நான் வேண்டிக்கிட்ட அடுத்த நாளே.. தேவதை மாதிரி ஒரு பொண்ணு அவன்கிட்ட வந்து ஐ லவ் யூ சொன்னா தெரியுமா..??” சங்கீதா சொன்னது புரியாமல் மீரா விழிக்க, அவள் இப்போது சிரித்தாள்.

“ஹாஹா.. நீங்கதான் அண்ணி அது..!! நான் சாமிக்கிட்ட வேண்டிக்கிட்ட அடுத்த நாள்தான்.. நீங்க அண்ணன்கிட்ட ஐ லவ் யூ சொன்னது..!! ஹ்ம்ம்.. இப்போ சொல்லுங்க.. அந்தக் கடவுள்தான உங்களை எங்க குடும்பத்துக்காக அனுப்பி வச்சிருக்காரு..??”

சங்கீதா சிரிப்புடன்தான் கேட்டாள். ஆனால் மீரா ஒருவித உணர்ச்சி அழுத்தத்துக்கு உள்ளாகி, என்ன சொல்வது என்று புரியாமல், விக்கித்துப் போய் அமர்ந்திருந்தாள். அவளுடைய அமைதியை பார்த்துவிட்டு, சங்கீதாவே இதமான குரலில் தொடர்ந்தாள்.

“முன்னாடிலாம் அவனுக்கு ஒரு ஏக்கம் உண்டு அண்ணி.. நமக்குன்னு ஒரு பொண்ணு இல்லையேன்னு..!! வெளில காட்டிக்க மாட்டான்.. பட்.. மனசுக்குள்ள இருக்கும்..!! ஆனா.. ஆனா இப்போ.. நீங்க அவன்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்புறம்.. இந்த கொஞ்ச நாளா அவன் எவ்வளவு ஹேப்பியா இருக்கான் தெரியுமா..?? அவன் இவ்வளவு சந்தோஷமா இருந்து நான் பாத்ததே இல்ல அண்ணி.. அவன் சந்தோஷத்தை பாத்து.. எங்க எல்லாருக்குமே எவ்வளவு சந்தோஷம் தெரியுமா..!! ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் அண்ணி.. என் அண்ணனுக்கும், இந்த குடும்பத்துக்கும் இவ்வளவு சந்தோஷத்தை கொடுத்ததுக்கு..!!”

சங்கீதா உணர்ச்சிவசப்பட்டு போய் சொல்ல, மீரா அப்படியே ஸ்தம்பித்துப் போனாள். அவளுடைய கண்களில் முணுக்கென்று கண்ணீர் அரும்பியது. அதை அவசரமாய் துடைத்துக் கொண்டாள். ஆனால் அதற்குள்ளாகவே அந்த கண்ணீரை கவனித்துவிட்ட சங்கீதா,

“ஐயோ.. என்னாச்சு அண்ணி.. நான் ஏதாவது தப்பா சொல்லிட்டனா..??” என பதறிப்போய் கேட்டாள்.

மீரா அவளுக்கு வாய் திறந்து பதில் சொல்லவில்லை.. உதடுகளை பற்களால் அழுத்தி கடித்துக் கொண்டு.. ‘இல்லை..’ என்பது போல தலையைத்தான் மெல்ல அசைத்தாள்..!! அப்போதுதான் அசோக் அந்த அறைக்குள் எட்டிப் பார்த்தான்.

“ஹேய் மீரா.. இங்கயா இருக்குற.. எங்கல்லாம் தேடுறது உன்ன..??”

“என்னாச்சு அசோக்..” மீரா திரும்பி பார்த்து கேட்டாள்.

“எந்திரிச்சு வா.. உனக்கு ஒன்னு காட்டனும்..!!” அசோக் அவ்வாறு சொல்ல, சங்கீதா இப்போது திடீரென டென்ஷன் ஆனாள்.

“ஏய் போடா.. அண்ணியலாம் அனுப்ப முடியாது.. அவங்க இங்கதான் இருப்பாங்க..!!” என்று அசோக்கிடம் சீறினாள்.

“ஏன்.. நெக்ஸ்ட் டைம் இவ நம்ம வீட்டுக்கு வர்றத பத்தி நெனச்சே பாக்கக் கூடாதுன்னு எதுவும் ப்ளானா..?? பாட்டுலாம் போட்டு காட்டிருப்பியே.. பாவம் சங்கு அவ.. அவ காது நல்லாருக்குறது உனக்கு பிடிக்கலையா.. விடு.. பொழைச்சு போகட்டும்..!!”

“ஹலோ.. உனக்கு பிடிக்காட்டி போ.. அண்ணிக்கு என் வாய்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு.. எனக்கு அது போதும்..!!”

“ஹாஹா.. ‘உண்மையை சொன்னா சங்கிக்கு ரொம்ப கோவம் வரும் மீரா..’னு வர்றப்போ நான்தான் சொல்லிட்டு வந்தேன்.. அதான் பிடிச்சிருக்குன்னு பொய் சொல்லிருப்பா.. இல்ல மீரா..??” அசோக் கிண்டலாக சொல்ல, சங்கீதா உடனே முகத்தை சுருக்கிக்கொண்டு சிணுங்கினாள்.

“ஹ்ம் ஹ்ம் ஹ்ம்.. பாருங்க அண்ணி.. இவன் எப்போவுமே இப்படித்தான்.. சும்மா சும்மா வம்பு இழுப்பான்..!!” என்றவள் அப்புறம் அசோக்கிடம் திரும்பி,

“ஏய்.. எங்களை டிஸ்டர்ப் பண்ணாம போடா.. அண்ணி உன்கூட வரமாட்டாங்க..!! அதான் உன் ரூம்ல ஒரு கொரங்கு பொம்மை வச்சிருக்கேல.. அதையே போய் கொஞ்சிட்டு கெட போ..!!” சங்கீதா கேஷுவலாக அவ்வாறு சொல்லிவிட, அவ்வளவு நேரம் அண்ணன்-தங்கையின் செல்ல சண்டையை ரசித்துக் கொண்டிருந்த மீரா,

“எ..என்னது.. கொ..கொரங்கு பொம்மையா..??”

என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டாள். உடனே அண்ணனின் விசித்திர வழக்கத்தை, சங்கீதா உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தாள். அசோக் இப்போது அவஸ்தையாக நெளிந்தான்.

அப்புறம் ஒருவழியாக சங்கீதாவை சமாளித்து.. ‘அம்மா உன்னை கூப்டறாங்க. என்னன்னு போய் கேளு..’ என்று பொய் எல்லாம் சொல்லி.. அசோக் மீராவை தனியாக கிளப்பிக்கொண்டு சென்றான்..!!

“வா மீரா.. உனக்கு ஒன்னு காட்டனும்..!!”

“என்ன..??”

“உனக்கு ரொம்ப பிடிக்கும்..!!”

“என்னன்னு கேக்குறேன்ல..??”

“ப்ச்.. வந்து பாரு.. இட்ஸ் சர்ப்ரைஸ்..!!”

அவளுடைய கையை பிடித்து உற்சாகத்துடன் இழுத்து சென்றவன்.. வீட்டுக்கு பின்புறம் இருந்த அந்த கார்டனுக்கு அழைத்து சென்றான்..!! மீரா முன்பொருமுறை தனக்கு பிடிக்கும் என்று சொல்லியிருந்த மஞ்சள் ரோஜா செடிகள்.. அந்த தோட்டமெங்கும் பூத்து குலுங்கிக் கொண்டிருந்தன..!!

“ம்ம்.. இதைத்தான் சொன்னேன்.. எப்படி..??” அசோக் பெருமையாக கேட்டான்.

அந்த ரோஜாக்களை பார்த்த கணத்திலேயே.. மீரா ஒரு குழந்தையென மாறிப் போனாள்..!! ‘வாவ்’ என்று குதுகலித்தவள், ஆசையாக அந்த பூக்களை அணைத்துக்கொண்டு கொஞ்சினாள்..!! அவளுடைய சந்தோஷத்தை கண்டு.. அசோக்கும் அப்படியே பூரித்து போனான்..!!

“பிடிச்சிருக்கா மீரா..??”

“இட்ஸ் ஸோ லவ்லி..!! ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அசோக்.. எ..எனக்கு.. எனக்கு என்ன சொல்றதுனே தெரியல..!!”

“எல்லாம் உனக்கு பிடிக்கும்னுதான் மீரா..!!”

அசோக் புன்னகையுடன் சொல்ல, மீரா அவனுடைய முகத்தையே சில வினாடிகள் சலனமில்லாமல் பார்த்தாள். பிறகு..

“தேங்க்ஸ் அசோக்..!!” என்றாள் சற்றே தழதழத்த குரலில்.

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



மாமியார் தூக்க sex வீடியோtamil sex picturesஅந்த காலத்தில் காமகதைகள்ஆன்டி மீனா முலைமனைவி செக்ஸ் கதைகள்kallathana sex videoபப்லிக் பாத்ரும் குரூப் செக்ஸ் கதைTamil akka panra kiss night sex videosammavai ooka vaitha magalஅம்மணபடம்2000Bittu PadamPuntaikuzi.sex.photos.xxxதிண்டுக்கல் பாரதி செக்ஸ் வீடியோஸ்அம்மாவின் முலைப்பால் செக்ஸ் உறவு கதைகள் என் அன்பு சித்தியின் முலை பால்புண்டைமுலைpuntai imagesஆடை இல்லாத மேனிநடிகர் குஷ்பு குண்டி அடிக்கும் வீடியோtamil sex kamaveri kathai annan thagachi with photoதமில் xன்xxஆண்டி டாக்டர் big boobstamil kamaveriஅத்தையின் அம்மனமான வீடியோகிராமத்து புட்டை sexyகார் பயணம் தமிழ் காமக்கதைtamil sex kamakathai annan thagachi with photossexviedotamliammavudan Madurai tour tamil Sex StoriesTamil vatitholil kama kamakadaigalsithi pariya punda sexvelamma tamil storyதமிழ் பெண் ஆன்டி காமக்கதைகள்கும்தலக்கடி பெண்கள் செக்ஷி போட்டோஸ்மார்பின்அழகானமுலையின்படம்புண்டை படங்கள்சின்ன பெண் முலை படம்pundai kiliya kuthum kalla kadahalangramathu palli manavigal sex video Tamilமாமனார் மருமகள் காம கதைXxxnnnasvayathuku varatha pennidam kamam tamil kathaiSneha vaai poduthalகாமகதைகள்காமம் தகாத உறவு வைத்திருந்த கதைகள்tamil kamaveri kathaigal with photosசாமியார் மனைவியை மிரட்டி ஓத்த கதைபுண்டை அடித்தல் வீடியோஉம்புதல்புண்டை படம் எடுக்க வேண்டுமென ஓழ் கதைகள்ஆன்டி செக்ஸ் வீடியோkallasex tamilstoreyEN AASAI AMMA KAMAKADHAIதமிழ்செக்ஷ் கதைகள்tamilnadu aunty mulai xxx photoநல்ல தோர் குடும்பம் திரைபடம்பின்னழகு ஆண்டிennai ammanama otha maamanarஅம்மாவுடன் மதுரை டூர் 36tamil kamakathaigal newakka thambi bathroom sex kamakathaikal tamilXxxnnnassexvosexvideosமனைவி புண்டையால் வந்த ப்ரோமோஷனுக்கு ஓல் வாங்கிய கதைகாம பெண்கள் முளை படம்தமிழ் ஓழ் படம்தமிழ் முலை கசக்கல்உள்ளத்தின் கதவுகள் காம கதைகள்செக்ஸ் வீடியோ எடுத்து கொள்ளKatalagi mamiyar kathaiகிரமத்து செக்ஸ் கதைகள் மருமகன்sexygolde அம்மாவின் காமவிளையாட்டு 2முலை அழகி வீடீயோஓழமுலை தெரிய எப்படி ஆடை அணிய வேண்டும்