அன்புள்ள ராட்சசி – பகுதி 32

“எ..எனக்கு.. த..தலை சுத்துற மாதிரி இருக்குது மீரா..!!”

“ஹ்ம்ம்.. நான் சொன்னது குழப்பமா இருக்கா..??”

“இ..இல்ல.. இது நெஜமாவே..!!”

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

திணறலாக சொன்ன அசோக், படக்கென தலையை உதறிக்கொண்டான். இமைகளை ஒருமுறை அகலமாக விரித்து, விழித்து பார்த்தான். தடுமாற்றத்தை சமாளித்துக்கொண்டவன், பிறகு ஒரு அவஸ்தை பெருமூச்சுடனே சொன்னான்.

“எ..எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல மீரா.. நீ சொ..சொன்னதெல்லாம்.. ஷாக்கிங்கா இருக்கு..!! ஃப்ரண்ட்ஸ்கிட்ட சவால் விட்டதெல்லாம் சும்மா.. அ..அதுக்கு முன்னாடியே நீ என் மனசுல இருந்த.. பெட் கட்டினதுக்காகலாம் நான் உன்கூட பேச ஆரம்பிக்கல.. I always wanted to have a serious relationship with you..!!”

“I know..!!”

“நானும்.. உன்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்போ.. உ..உன்மேல எனக்கு இவ்வளவு காதல் இருந்ததான்னு கேட்டா.. சத்தியமா இல்லைன்னுதான் சொல்லணும் மீரா.. எல்லாம் உன்கூட பழக ஆரம்பிச்சப்புறந்தான்..!! உ..உன்கூட பேச ஆரம்பிச்ச அந்த செகண்ட்ல இருந்து.. நான் எந்த அளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா..?? ஆனா நீ.. ஒவ்வொரு நாளும் உன் மனசுக்குள்ளயே போராடிட்டு இருந்திருக்குற..!!”

“ம்ம்..!!” மீராவுக்கு இப்போது மீண்டும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

“எ..என்னை டாமினேட் பண்ணின.. டார்ச்சர் பண்ணினன்லாம் என்னன்னவோ சொல்ற.. ஆனா.. நான் எதையும் அப்படி எடுத்துக்கல மீரா..!! அதெல்லாம்தான் உன்னோட குணம்னு எடுத்துக்கிட்டேன்..!! உ..உன்னோடதான் என் லைஃப்ன்னு முடிவானப்புறம்.. உன்னோட குணத்துக்கும் மதிப்பு கொடுக்குறதுதான.. உண்மையான காதலா இருக்க முடியும்..?? நான் என் காதலுக்கு எப்போவும் உண்மையாத்தான் இருந்தேன் மீரா..!!”

“தெ..தெரியுண்டா..!!”

முட்டிக்கொண்டு நின்ற கண்ணீர் இப்போது முணுக்கென்று வெளிப்பட்டு, மீராவின் கன்னம் நனைத்து ஓடியது. அசோக் இப்போது தனது விரல்களால் அவளுடைய கண்ணீரை துடைத்தான்.

“ஹேய்.. இன்னும் ஏன் அழற.. அதான் உன் மனசுல உள்ளதெல்லாம் சொல்லிட்டியே.. எ..என் மனசையும் நல்லா புரிஞ்சுக்கிட்டியே..?? இப்போ.. நெஜமாவே என் மேல உனக்கு காதல் வந்திடுசுல.. அது போதும் எனக்கு..!!” என்றவன் அவளது கைகள் ரெண்டையும் தனது கைகளுக்குள் வைத்து, மென்மையாக முத்தமிட்டவாறே தொடர்ந்து பேசினான்.

“எ..என்னை பொறுத்தவரை இது ஒரு பெரிய விஷயமாவே நான் நெனைக்கல மீரா..!! இதை இத்தோட மறந்துட்டு.. நாம எப்போவும் போல இருக்கலாம்.. ம்ம்..?? சரியா..??”

கேட்டுவிட்டு அசோக் மீராவை ஏறிட.. அவளோ தவிப்பில் துடிக்கிற முகத்துடனும்.. அழுத்தி கடிக்கப்பட்ட உதடுகளுடனும்.. ‘இல்லை.. அது நடக்காது..’ என்பது போல தலையை அசைத்தாள். அசோக் இப்போது சற்றே குழப்பமுற்றவனாய் மீராவை பார்க்க, அவளே வாய்திறந்து பேசினாள்.

“நா..நான் இதெல்லாம் உன்கிட்ட சொன்னது.. நாம எப்போவும் போல இருக்குறதுக்காக இல்ல அசோக்.. இனி எப்போவுமே இதை உன்கிட்ட சொல்ல முடியாதேன்னுதான்..!!”

“வா..வாட்..??”

“Yes ashok.. Today is our last day.. இனிமே நாம மீட் பண்ணிக்கப் போறது இல்ல..!!”

“எ..என்ன சொல்ற நீ..??”

“நான் போறேன் அசோக்.. உன்னை விட்டு போறேன்.. தூரமா போறேன்..!! போறதுக்கு முன்னாடி.. என் மனசுல இருந்த காதலை.. உன் கண்ணைப் பார்த்து சொல்லனும்னு ஆசைப்பட்டேன்.. சொல்லிட்டேன்.. எனக்கு இது போதும்..!!”

மீரா அவ்வாறு உறுதியான குரலில் சொல்ல, அசோக்கின் மனதில் இப்போது மெலிதாக ஒரு கிலி பரவ ஆரம்பித்தது. ஏற்கனவே அவனுக்கு இருந்த தலைச்சுற்றலோடு புதிதாக இந்த உணர்வும் சேர்ந்து கொள்ள, அவன் தடுமாறினான். நிலையாக நிற்க கூட முடியாத அளவுக்கு, அவனுடைய கால்களில் ஒரு நடுக்கம். மூளைக்குள் ஏதோ பலவித குழப்ப மின்னல்கள் வெட்ட, திணறலாகவே அவனால் பேச முடிந்தது.

“வெ..வெளையாடாத மீரா.. ஏ..ஏன் போறேன்னு சொல்ற..??”

“வெளையாண்டது போதும்னுதான்டா போறேன்னு சொல்றேன்..!! உன் மேல ஏதோ ஒரு வெறுப்புல இந்த வெளையாட்டை ஆரம்பிச்சுட்டேன்.. உன் முன்னாடி இந்த மாதிரி தோத்துப்போய் நிக்கப் போறேன்னு தெரிஞ்சிருந்தா.. சத்தியமா இதை ஆரம்பிச்சிருக்க மாட்டேன்..!! போதும்.. வெளையாட்டை முடிச்சுக்கலாம்..!! நான் போயிடுறேன்..!!” மீரா அழுகுரலில் சொல்ல, அசோக்குக்கு இப்போது எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

“பைத்தியமா உனக்கு..?? நீ எதுக்கு போகணும்..??”

“நான் பாவம் பண்ணிருக்கேன் அசோக்.. பெரிய பாவம் பண்ணிருக்கேன்..!! உன் காதலுக்கு நான் தகுதியானவ இல்ல.. உன் வீட்டுக்கு மருமகளா வர, எனக்கு அருகதை இல்ல..!!”

“ஏ..ஏன் மீரா இப்படிலாம் பேசுற..?? நீ.. நீ என்ன பாவம் பண்ணின..??”

“அதெல்லாம் உனக்கு தெரிய வேணாம் அசோக்.. சொல்றதுக்கு எனக்கும் விருப்பமும் இல்ல..!! ஒரு திமிர் புடிச்சவ உன்கூட வெளையாட ட்ரை பண்ணினா.. அப்புறம் உன் காதலுக்கு முன்னாடி தோத்துப்போய் காணாமப் போயிட்டா..!! அந்த அளவுக்கு நீ என்னைப்பத்தி தெரிஞ்சுக்கோ.. போதும்..!!”

“இல்ல.. எனக்கு தெரிஞ்சாகனும்.. சொல்லு..!!”

“ம்ஹூம்..!!”

“சொல்லலேன்னா.. உ..உன்னை இங்க இருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க விட மாட்டேன் மீரா..!!” சொல்லிக்கொண்டே அசோக் மீராவின் புஜத்தை இறுகப் பற்றினான்.

“அது உன்னால முடியாது அசோக்.. You can’t stop me..!!”

“Yes.. I can..!!!! நீ பாட்டுக்கு பைத்தியம் மாதிரி ஏதோ உளறிட்டு போறேன்னு சொல்வ.. நான் பாத்துட்டு சும்மா இருப்பேன்னு நெனச்சியா..?? நோ.. உன்னை போக விட மாட்டேன்..!!”

“இ..இல்ல அசோக்.. உன்னால முடியாது..!!”

“ஏன் முடியாது..?? நான் நெனச்சா.. உ..உன்னை.. இங்க.. இ..இப்படியே..”

ஆரம்பித்ததை முடிப்பதற்கு முன்பே, அசோக்கின் தலை சுற்றல் உச்சபட்சத்தை எட்டியது. உடலும் மூளையும் சுத்தமாக சோர்ந்துபோன மாதிரி ஒரு உணர்வு. இமைகள் அவனுடைய கட்டுப்பாடு இல்லாமலே செருக ஆரம்பிக்க, கால்கள் தள்ளாடின. உடலின் எடை முற்றிலும் குறைந்து போய், அப்படியே காற்றில் மிதப்பது மாதிரி தோன்றியது அவனுக்கு. மிகவும் கஷ்டப்பட்டு விழிகளை திறந்து, மீராவை பரிதாபமாக பார்த்தான்.

அவனுடைய இந்த நிலையைக்கண்டு, மீரா கொஞ்சம் கூட அதிர்ந்து போன மாதிரி தெரியவில்லை. அவளுடய கண்களில் மட்டும் கண்ணீர் உடைப்பெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. தனது புஜத்தை பற்றியிருந்த அசோக்கின் பிடி, இப்போது வலுவிழந்து போயிருக்க, மிக எளிதாக அந்தப் பிடியில் இருந்து விலகிக் கொண்டவாறே, உதடுகள் படபடக்க சொன்னாள்.

“நான்தான் சொன்னேன்ல.. உன்னால முடியாது..!!”

“மீரா.. எ..எனக்கு.. எ..எனக்கு ஒரு மாதிரி..”

அசோக் தடுமாற்றத்துடனே தலையை பிடித்துக் கொண்டான். மீரா இப்போது தனது மணிக்கட்டை திருப்பி நேரம் பார்த்தாள். அசோக்கை ஏறிட்டு சொன்னாள்.

“நீ ஜூஸ் சாப்பிட்டு அரை மணி நேரம் ஆச்சு அசோக்.. அப்படித்தான் இருக்கும்..!!”

“எ..என்ன சொல்ற..”

“வேலியம் 20mg..!! நீ ஹேண்ட் வாஷ் பண்ண போனப்போ.. என் பேக்ல இருந்து ரெண்டு டேப்லட் எடுத்து.. உன் ஜூஸ்ல கலந்துட்டேன்..!!”

“வா..வாட்..??”

“கொ..கொஞ்சம் ஹெவி டோஸேஜ்.. ந..நல்லா தூக்கம் வரும்.. அவ்வளவுதான்..!!”

மீரா அழுகுரலில் சொன்னாள். அசோக்குக்கு இப்போது கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. மீரா சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைகிற நிலைமையில் கூட அவன் இல்லை. 99% மயக்கத்தின் பிடியில் சிக்கியிருந்தான். அவனது மூளை உறங்கிப்போக தயார் நிலையில் இருந்தது. அந்த உறக்கத்தை, அசோக் தலையை உலுக்கி, உடும்புப்பிடியாக உதற முயன்றான். குழம்பிப்போன மூளை அவனுடைய மனதில் பல குழப்பப்படங்களை திரையிட்டது. உடல் தடுமாறியது.. ஆதரவாக எதையாவது பற்றிக்கொள்ள வேண்டி, அவனது கைவிரல்கள் காற்றில் அலைபாய்ந்தன.. இமைகள் திறந்து திறந்து மூடிக்கொண்டன..!! மீரா அவனையே ஒருவித பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சுவாதீனத்தை மெல்ல மெல்ல இழந்துகொண்டிருந்த அசோக்.. அப்படியே தலையை சுழற்றி ஆகாயத்தை பார்த்தான்..!! அவனது உச்சந்தலைக்கு மேலே அந்த பருந்து.. வாய்கிழிய கத்தியபடியே வட்டமடித்துக் கொண்டிருந்தது..!! அவனுக்குள் இப்போது ஒரு அர்த்தமற்ற உந்துதல்.. அந்த இடத்தை விட்டு அகன்று விட வேண்டும் என்று..!! மெல்ல திரும்பினான்.. கால்கள் தள்ளாட நடை போட்டான்.. ஆனால் ஒரு நான்கு அடிகள் எடுத்து வைப்பதற்கு முன்பே.. கால்கள் மடங்கிப்போய் அப்படியே கீழே சரிந்தான்..!!

“அசோக்..!!!”

மீரா அலறிக்கொண்டே அவசரமாய் நகர்ந்து, அசோக் தரையில் விழுவதற்குள் அவனை தாங்கிப் பிடித்துக் கொண்டாள். அவனை கைத்தாங்கலாக அழைத்து சென்று, அருகில் கிடந்த மரப்பெஞ்சில் அமரவைத்தாள். மயக்கத்தில் தத்தளித்த அசோக்கின் முகத்தை, தன் மார்போடு அணைத்துக் கொண்டாள். காதலனின் நிலையைக்கண்டு, அவளுக்கு இப்போது அழுகை பீறிட்டு கிளம்பியது. நீர் கசிகிற கண்களுடன், அசோக்கின் தலைமுடியை கோதிவிட்டவாறே..

“ஒ..ஒன்னுல்லடா.. ஒன்னுல்ல..!! நிம்மதியா கொஞ்ச நேரம் தூங்கப் போற.. வேற ஒன்னுல்ல..!! தூங்கி எந்திரிச்சா.. எல்லாம் சரியாப் போகும்..!! தூங்கு..!!” என்றாள்.

அவனுடைய நெற்றியில் உதடுகள் பதித்து முத்தமிட்டாள். அசோக் இமைகளை திறக்க முடியாமல் திறந்து, திணறலான குரலில் கேட்டான்.

“ஏ..ஏன்.. ஏன் மீரா..??”

“ஸாரிடா.. ஸாரி..!! எதுவுமே சொல்லாம உன்னைவிட்டு பிரிஞ்சு போக எனக்கு மனசு வரல.. ஃபோன்ல என் காதலை சொல்ல எனக்கு விருப்பம் இல்ல.. கடைசியா ஒருநாள் உன்கூட இருக்கணும்னு ஆசைப்பட்டேன்..!! நான் விலகிப்போறேன்னு சொன்னா.. நீ விட மாட்டேன்னு எனக்கு தெரியும்.. அதான்..!! என்னை மன்னிச்சிடுடா..!!”

“போ..போகாத மீரா..!!”

“இல்ல அசோக்.. உன்கூட சேர்ந்து வாழறதுக்கு எனக்கு கொடுப்பினை இல்லடா.. நான் போறேன்..!!”

“………………..”

“நா..நான் .. நான் போனப்புறம் என்னை மறந்துடணும்.. என்னை தேடிக்கண்டுபிடிக்க ட்ரை பண்ணக்கூடாது.. சரியா..?? உ..உனக்கு.. உனக்கு என்னைவிட, ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணா ஒருத்தி வருவாடா.. உன் நல்ல மனசுக்கு, வானத்துல இருந்து குதிச்ச தேவதை மாதிரி ஒருத்தி வருவா.. அ..அவளைக் கட்டிக்கிட்டு.. எந்த குறையும் இல்லாம.. ந..நல்லா.. நல்லா சந்தோஷமா வாழனும்.. என்ன..??”

விம்முகிற குரலில் சொன்ன மீரா, இப்போது விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றினாள். அசோக்கின் சட்டைப்பையில் அதை திணித்தாள்.

“பாட்டிட்ட குடுத்திடு.. இதை போட்டுக்க எனக்கு தகுதி இல்லன்னு சொல்லிடு..!! வீட்ல எல்லார்ட்டயும்.. இந்தப்பாவியை முடிஞ்சா மன்னிச்சிட சொல்லு..!!”

மீரா பேசிக் கொண்டிருக்கையிலேயே அசோக் ஏதோ அவளிடம் சொல்ல முயன்றான். ஆனால் அவனுடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட மறுத்தன. அவன் பேச தவிப்பதை உணர்ந்த மீரா,

“என்னம்மா.. சொல்லு..!!” என்றவாறே தனது காதை அவனது உதடுகளுக்கு அருகே எடுத்து சென்றாள். அசோக் இப்போது உதடுகள் பிரித்து, ஈனஸ்வரத்தில் மெல்ல முனகினான்.

“எ..எனக்கு நீ வேணும் மீரா..!!”

சொல்லும்போதே அவனுடைய கண்களின் ஓரமாய் கண்ணீர் கொப்பளித்து ஓடியது..!! அவ்வளவுதான்..!! மீராவுக்கு அதற்கு மேலும் உள்ளுக்குள் பொங்கிய துக்கத்தை அடக்கிக்கொள்ள முடியவில்லை..!! அம்பு தைத்த பறவை போல.. மடியில் வீழ்ந்து கிடந்த காதலனின்.. பரிதாபகரமான வார்த்தைகள்.. அவளுடைய இதயத்தில் ஈட்டியை பாய்ச்சின..!! விழிகளில் கண்ணீர் ஆறாக ஓட.. ‘ஓஓஓஓஓ’ என்று பெருங்குரலில் ஓலமிட்டு அழுது அரற்றினாள்..!! மார்பில் புதைந்திருந்த அசோக்கின் முகத்தை.. மேலும் இறுக்கிக் கொண்டாள்..!! அவனுடைய நெற்றியில் ‘இச்.. இச்..’ என்று முத்தங்களை வாரி இறைத்தவாறே.. உடைந்துபோன குரலில் சொன்னாள்..!!

“இ..இல்லடா.. இல்ல..!! நான் உனக்கு வேணாம்.. இந்த அதிர்ஷ்டங்கெட்டவ உனக்கு வேணவே வேணாம் அசோக்..!!!”

அசோக் கொஞ்சம் கொஞ்சமாய்.. முழுமயக்கத்துக்கு சென்று கொண்டிருந்தான்..!! எப்படியாவது விழித்திருக்கவேண்டும் என்று அவன் செய்த பிரயத்தனங்கள் எல்லாம்.. உள்ளே சென்றிருந்த ரசாயானத்தினால் தோற்கடிக்கப்பட்டுக் கொண்டிருந்தன..!! அவனுடைய இமைகள் அவனது கட்டுப்பாட்டையும் மீறி.. மெல்ல மெல்ல மூடிக்கொள்ள ஆரம்பித்தன..!! அவனது உதடுகள் மட்டும்.. ‘போயிடாத மீரா.. போயிடாத..’ என்று திரும்ப திரும்ப முணுமுணுத்துக் கொண்டிருந்தன..!! மீராவோ கண்களில் நீர் வழிய.. பிஞ்சுக்குழந்தையை நெஞ்சில் போட்டு தாலாட்டும் தாயைப்போல.. அசோக்கை தனது மார்புத்தொட்டிலில் இட்டு.. அவன் மயக்கத்திற்கு செல்லும்வரை.. இப்படியும் அப்படியுமாய் இதமாக அசைத்து கொடுத்தாள்..!!

அசோக் தூங்கிப் போனான்..!! அப்புறமும் சிறிது நேரம்.. மீரா அவனை தனது மார்போடு சேர்த்து தாலாட்டிக் கொண்டிருந்தாள்.. அழுதவாறே அவனது தலையை இதமாய் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்..!!

பிறகு நேரமாவதை உணர்ந்ததும்.. அவனை மெல்ல இருக்கையில் கிடத்திவிட்டு.. எழுந்தாள்..!! அவனது பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போனை உருவினாள்..!! கிஷோரின் நம்பர் தேடிப்பிடித்து கால் செய்தாள்..!!

“ஆங்.. சொல்லு மச்சி.. என்ன சொல்றா வீரலட்சுமி..??” என்று கிண்டலாக ஆரம்பித்த கிஷோரை கண்டுகொள்ளாமல்,

“கிஷோர் அண்ணா.. நான் மீரா பேசுறேன்..!!” என்றாள் இறுக்கமான குரலில்.

“மீ..மீரா.. நீ..?? நா..நான் அசோக்குனு..”

“பரவாலண்ணா..!! நான் சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளுங்க..!! இங்க.. சத்யா கார்டன் பக்கத்துல ஒரு பார்க் இருக்குல..??”

“ம்ம்.. ஆ..ஆமாம்..!!”

“உள்ள என்டர் ஆனதும்.. லெஃப்ட்ல ஒரு பாதை போகும்.. அதுலயே போனா.. டெட் என்ட்ல ஒரு வுடன் பெஞ்ச் இருக்கும்.. அந்த பெஞ்ச்ல அசோக் மயக்கமா படுத்திருக்கான்.. நீங்க இங்க கொஞ்சம் வந்து.. அவனை வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுங்கண்ணா..!!”

“வா..வாட்..?? ம..மயக்கவா..?? என்னாச்சும்மா..??” கிஷோர் அடுத்த முனையில் அதிர்ந்து கொண்டிருந்தான்.

“பயப்படுறதுக்கு ஒன்னுல்லண்ணா.. நான்தான் தூக்க மாத்திரை குடுத்து தூங்க வச்சிருக்கேன்..!!”

“நீ..நீயா..?? என்ன சொல்ற..??”

“கொஞ்ச நேரம் நல்லா தூங்குவான்.. அவனை ரெஸ்ட் எடுக்க விடுங்க..!! தூங்கி எந்திரிச்சதும் கேளுங்க.. அவனே எல்லாம் சொல்லுவான்..!!”

“எ..என்னம்மா சொல்ற நீ.. எனக்கு ஒன்னும் புரியல..!!”

“பேசிட்டு இருக்க நேரம் இல்லண்ணா.. சீக்கிரம் கெளம்பி வாங்க.. வேணு அண்ணாவோட காரை எடுத்துட்டு வாங்க..!!”

சொல்லி முடித்த மீரா.. காலை உடனே கட் செய்தாள்..!! கட் செய்ததுமே.. அசோக்குடைய செல்ஃபோனின் பக்கவாட்டில் இருந்த தகட்டினை விலக்கி.. உள்ளே செருகப்பட்டிருந்த மெமரி ஸ்டிக்கை.. விரல் நகத்தினால் உருவி எடுத்தாள்..!! அசோக் அவளுடைய செல்போனில் இருந்து.. அவனது செல்ஃபோனுக்கு படங்களை எல்லாம் பிரதி எடுத்துக்கொண்டதை.. முன்கூட்டியே அறிந்தவள் போல செயல்பட்டாள்..!!

இப்போது அசோக்கின் செல்ஃபோனுக்கு கிஷோரின் நம்பரில் இருந்து கால் வந்தது..!! அதை கண்டுகொள்ளாமல்.. அலறுகிற அந்த ஃபோனை.. அசோக்கின் பேன்ட் பாக்கெட்டிலேயே திணித்தாள்..!! இறுதியாகப் பார்க்கிறோம் என்ற எண்ணத்துடன்.. அசோக்கின் முகத்தை காதலும், ஏக்கமுமாய் ஏறிட்டாள்..!! அவன் முகத்திற்கு முன்பாக ரீங்காரமிட்ட ஈ ஒன்றினை.. புறங்கை வீசி விரட்டினாள்..!! கலைந்திருந்த அவனது தலைமுடியை சரி செய்தாள்..!! பொங்கி வந்த அழுகையை அடக்கிக்கொண்டவள்.. அவனுடைய நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தத்தை பதித்துவிட்டு எழுந்தாள்..!!

சற்று நேரத்திற்கு முன்பு நடந்து வந்த பாதையிலேயே.. திரும்பி நடக்க ஆரம்பித்தாள்..!! அவளுடைய பார்வை நிலைகுத்திப்போன மாதிரி.. அந்தரத்தை வெறித்தது..!! வாழ்வில் இருந்த ஒற்றை சந்தோஷத்தையும் இழந்துவிட்ட விரக்தி.. அவளின் முகத்தில் விரவிக் கிடந்தது..!! அவளது கால்கள் மட்டும் அனிச்சையாக.. அடிமேல் அடிவைத்துக் கொண்டிருந்தன..!! கைகள் அவளுடைய செல்ஃபோனை பிரித்தன.. உள்ளே பொதிந்திருந்த சிம்கார்டை உருவின..!! ஏற்கனவே வைத்திருந்த அசோக்கின் மெமரி கார்டுடன் சேர்த்து.. இரண்டினையும்.. மண்டிக்கிடந்த புதருக்குள் வீசி எறிந்தவாறே நடையை தொடர்ந்தாள்.. மீரா..!!

அத்தியாயம் 17

அடுத்த நாள் காலை.. நேரம் ஏழு மணியை தாண்டி இருபது நிமிடங்கள் ஆகியிருந்தது..!! வேணுவின் கார் குமரன் காலனி மெயின் ரோட்டில் இருந்து இடது புறம் திரும்பி.. புழுதியை கிளப்பியவாறே பங்கஜம் ரோட்டில் நுழைந்தது..!! மேலும் ஒரு இருநூறு அடி தூரம் ஓடியதும்.. மெல்ல மெல்ல வேகம் குறைந்து.. பிறகு சரக்கென ப்ரேக் மிதிக்கப்பட.. சாலையோரமாய் க்றீச்சிட்டு நின்றது..!! கார் நின்றதுமே.. பின் சீட்டில் அமர்ந்திருந்த அசோக் அவசரமாய் கீழே இறங்கினான்.. கதவை அறைந்து சாத்தினான்..!! தலையை சற்றே உயர்த்தி அந்த கட்டிடத்தை அண்ணாந்து பார்த்தான்..!!
மூன்று அடுக்குகளுடன் பளபளப்பாக காட்சியளித்த.. அந்த கட்டிட்டத்தின் முன்பாக வந்து நின்றிருந்தது கார்..!! கட்டிடத்தின் முகப்பில்.. ‘Aptech Computer Education’ என்கிற ஆங்கில வார்த்தைகள் பொறிக்கப்பட்ட அலுமினிய தகடு.. அதிகாலை வெயிலுக்கு சற்று அதிகமாகவே ஜொலிஜொலித்தது..!! இரும்பு ஷட்டர்கள் இழுத்து மூடப்பட்டிருக்க.. இன்ஸ்டிட்யூட் இன்னும் தனது இயக்கத்தை ஆரம்பித்திருக்கவில்லை..!! நீல நிற சீருடை அணிந்த வாட்ச்மேன்.. வந்து நின்ற இவர்களை கண்டுகொள்ளளாமல்.. வாசலை கூட்டிப்பெருக்குகிற பெண்ணின் வளைவு நெளிவுகளை.. வாட்ச் செய்து கொண்டிருந்தான்..!! அசோக்கின் நண்பர்களும் இப்போது காரில் இருந்து இறங்கிக்கொள்ள.. அவர்களை தொடர்ந்து.. ‘டப்.. டப்.. டப்..’ என்று கார்க்கதவுகள் சாத்தப்படுகிற சப்தம்.. அடுத்தடுத்து கேட்டன..!!

“நான்தான் சொன்னேன்ல மச்சி.. டைம் ஆகும்டா.. எட்டு மணிக்கு மேலத்தான் ஓப்பன் பண்ணுவானுக..!! கேத்தரினாவோட சித்தி பொண்ணு ஒருத்தி.. இங்கதான் மல்ட்டிமீடியா படிச்சா..!!” சொல்லிக்கொண்டே தோள் மீது கைபோட்ட சாலமனை, அசோக் சற்றே எரிச்சலாக பார்த்தான்.

“ஏய்.. போய் டீ வாங்கிட்டு வாடா..போ..!!” என்று அவனை விரட்டினான்.

முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு, ஓரிரு வினாடிகள் அசோக்கையே பார்த்த சாலமன், பிறகு அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இப்போது வேணு அசோக்குக்கு அருகில் வந்து நின்று காரில் சாய்ந்துகொண்டான். சிகரெட் பாக்கெட் திறந்து ஒன்றை வாயில் பொருத்திக் கொண்டவன், இன்னொன்றை அசோக்கிடம் நீட்டினான். அவனே இருவருக்கும் நெருப்பு பற்றவைத்தான்.

“இந்தா.. வீட்டுக்கு கால் பண்ணி ஆன்ட்டிட்ட பேசிடு..!!” கிஷோர் அசோக்கிடம் செல்ஃபோனை நீட்டினான்.

“வையி.. அப்புறம் பேசலாம்..!!” அசோக்கின் மனமோ வேறொரு கவலையில் மூழ்கியிருந்தது.

“ப்ச்.. பேசுடா..!! அவங்க வேற என்ன ஏதுன்னு தெரியாம கவலைப்பட்டுட்டு இருக்கப் போறாங்க..!! பேசுன்றேன்ல.. இந்தா..!!”

கிஷோர் அவ்வாறு வற்புறுத்தவும், அசோக் வேண்டா வெறுப்பாக செல்ஃபோனை வாங்கி, வீட்டுக்கு நம்பருக்கு கால் செய்தான். பாரதிதான் கால் அட்டன்ட் செய்தாள். இவன் ஹலோ சொன்னதுமே..

“நைட்டு பூரா எங்கடா போய்த் தொலைஞ்ச..??” என்று பொரிய ஆரம்பித்தாள். அசோக் ஒருவித எரிச்சலுடனே அம்மாவிடம் பேசி சமாளித்தான்.

“திடீர்னு கெளம்புற மாதிரி ஆயிடுச்சு மம்மி..”

“…………..”

“ஆமாம் ஆமாம்.. சொல்றதுக்கு கூட நேரம் இல்ல..!!”

“…………..”

“என்ன பண்ண சொல்ற என்னை..?? அதான் கிஷோர் ஃபோன் பண்ணி சொன்னான்ல.. அப்புறம் என்ன..??”

“…………..”

“ப்ச்.. பொலம்பாத மம்மி.. ஃபோனை வையி மொதல்ல..!! நான் மத்தியானம் வீட்டுக்கு வரேன்.. அப்போ பேசிக்கலாம்..!!”

“…………..”

“ஆங்.. சாப்ட்டேன்.. சாப்ட்டேன்..!!”

கடுப்புடன் சொன்ன அசோக், காலை கட் செய்தான். அதற்குள் சாலமன் டீயுடன் வர, நான்கு பேரும் ஆளுக்கொரு க்ளாஸை எடுத்துக் கொண்டார்கள். தேநீர் உறிஞ்சியவாறே.. உறிஞ்சலுக்கிடையே புகை ஊதியவாறே.. கம்ப்யூட்டர் சென்டர் திறக்கும்வரைக்கும்.. காலத்தை ‘கில்’ல ஆரம்பித்தார்கள்..!!

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



தமிழ்.ஆண்டி.செக்ஸ்.புகபடங்கள்wwwtamilbafகருக்குள் கல்ல ஓழ் காமக்கதைகள்நானும் லதாவும் ஓத்தகதைகள்தம நடிகை புன்டைகான்ஸ்டபிள் கவிதா புண்டைவேலம்மா கனவுசெக்குஸ் விடியேஸ்sexvedio tamilrecenttamilsexstoriespundaisextamil andiy mulai sex imageஅம்மாவை ஓத்த வெள்ளைக்காரன்இளம்பெண்ணை ஓத்தக்கதைMathini kundiya nakkum kathaiசென்னை பொண்ணு ஊம்பி காம சுகம்நடிகைபுண்டைமச்சினி கதைபெண்ணின் ஜட்டியை கேட்கும் காமக்கதைகள்வனித்தாநடிகைஆபாசபடம்மாமி காம கதைகள் புகைப்படங்கள்காம படங்கள்செக்குஸ் விடியேஸ்Sex kathaiமுலை படங்கள்bigkundysexஎன் அன்பு சித்தியின் முலை பால்ஷீலாபாத்ரும்அம்மணபடம்appa magal kamakathaiஆண்ணுறை புகைப்படம்Thevidiyakathaikal tamil storypundai ool kathiThailam theikum bothu otha kathaiammavai kuniya vaithu Tamil sex storiesஅக்கா புடவை ஓழ் கதைதழிள் கேல்ஸ் ரகசியமாக ஊம்பு செக்ஸ்அம்மணபடம்அம்மாமுலைவயல் காடு காமகதைகள்வயதாண பொம்பளைய ஓத்தேன்Muthal rape sexஸ்ண்ஸ்ஸ் செஸ் வீடியோ ஒல்கதை2019tamil sex வீடியோ downloedகாம பெண்கள் கவர்ச்சி புகைப்படம்ஓல் கதைகள்avar en mela paduthu kamakathaiதமிழ் கிராமத்து sex xxxகிழவன் கிழவி காம கதைWww.pvndai imageமுலைஅக்காஅக்கா தங்கை தேவிடியா ஓல் கதைகள்அந்த காலத்தில் காமகதைகள்க்ஷ்ன்க்ஷ்க்ஷ்மதினி புண்டைமசலா காமகதைகோதி புண்டை பாடம்மனைவி மொலைகுளியல் அறை தமிழ் காம கதைகள் தமிழ் காமகதைvelamma tamil sexமூடு ஏத்தும் குடும்ப காம கதைகள்aunttysexintamilsex photos mathiஅம்மாவை பஸ்ஸில்samiyar tamil sex storiesகேல்ஷ்,குதினர,செக்ஷ்காதலனிடம் ஓக்கும்போது அப்பாவிடம் மகள் கதைஎன் அம்மாவும் என் மாமனாரும் காம கதைVerithanamanasex15 vaiyathil kamakathiஅம்மணம் H0Tபுன்டை உம்பு தாமில் விடியேசவிதா பாபி பட கதைகள்aunty pundaiஅத்தை புன்டைSuper ol kataikal(tamil)பெண் காம pornசகிலா செக்ஸ் விடியேtamilsexauantyஆஸ்டால் காம கதைManaivi kamakathaiஅப்பாவுக்கும் மகளுக்கும் காம காதல்அண்ணி ஓல்கதைஅத்தை மகள் பால் காமகதைசன்னி லியான் xnxx video