அன்புள்ள ராட்சசி – பகுதி 42

அத்தியாயம் 21

மனிதர்களை போல அவர்களுடைய மனதிற்கு ஒற்றை முகம் கிடையாது.. அது எப்போதும் பன்முகங்கள் கொண்டதாகவே இருக்கிறது.. அறுதியான ஒரு வரையறைக்குள் அகப்பட மறுக்கிறது..!! ‘ஒருவன் மனது ஒன்பதடா.. அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா’ என்று கவியரசர் சொன்னது உங்களுக்கு ஞாபகம் வரலாம்..!! பலதரப்பட்ட சூழ்நிலைகளில்.. பலவிதமான முகங்களை மனிதமனம் மாட்டிக்கொள்கிறது.. அது எல்லோருமே அறிந்த ஒன்றுதான்..!!

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

நான் இங்கே சொல்லவிருப்பது சற்று வித்தியாசமானது..!! எதிர்பாராத இக்கட்டான ஒற்றைச்சூழலில்கூட.. மனிதருடைய ஒற்றைமனம்.. இந்த மாதிரி பன்முகங்களை.. ஒரே நேரத்தில் வெளிக்காட்டக் கூடும்..!! இக்கட்டான ஒரு சூழ்நிலையில்.. நம்மில் எத்தனை பேரால் தெளிவாக சிந்திக்க முடிகிறது..?? ஒருமனதாக ஒரு முடிவெடுக்க தடுமாறுகிறோமே..?? ஏன் அப்படி..??

‘மனம் என்பது மூளையில் எழுகிற எண்ணங்களின் தொகுப்புதான்’ என்கிறது அறிவியல் ஆராய்ச்சி..!! எதிர்பாராத ஒரு நிகழ்வினால்.. எண்ணங்களில் ஏற்படுகிற குளறுபடியினால்.. மனம் ஒரே நேரத்தில் பலவித முகங்களை உடனுக்குடன் மாற்றிக்கொள்ளலாம்..!! தூரத்தில் அசோக்கை பார்க்க நேரிட்ட மீராவுக்கும் அதுதான் நேர்ந்தது..!!

பார்த்த விழிகள் பார்த்தபடியே இருந்தன.. ஜன்னல் கம்பிகளை பற்றிய விரல்கள் பற்றியபடியே இருந்தன.. மீராவுடைய உடலும் பார்வையும் உறைந்து போயிருக்க.. அவளுடைய உளமும் சிந்தனையும் உலுக்கிவிடப் பட்டிருந்தன..!! அடுக்கடுக்காய் பல குழப்பக் கேள்விகள் அவசரமாய் கிளம்பி.. அவளுடைய மனதின் மையத்தில் குவிய ஆரம்பித்தன..!!

‘இது எப்படி சாத்தியமானது..?? இவனால் எப்படி என் முன்னே மீண்டும் தோன்றிட முடிந்தது..?? ஊரும் பெயரும் உறவும் செயலுமென.. இவனிடம் நான் உரைத்தவை எவையிலும் உண்மை துளியும் இல்லையே..?? அநாதை விடுதியில் காகிதத்தை கிழித்த அந்த நொடியிலேயே.. இவன் என்னை அணுகுவதற்கு இருந்த இறுதி இணைப்பையும் துண்டித்து விட்டதாகத்தானே எண்ணினேன்..?? அப்படி இருந்தும் எப்படி இவனால் எனக்கு எதிரே வந்து நின்றிட முடிந்தது..?? முதலில்.. இது கனவில்லையே..?? கானல் நீர் போலொரு தோற்றப்போலி இல்லையே..?? கண்ணாடியில் சற்றுமுன் நின்றிட்டது போல.. கண்ணெதிரே இப்போதும் தோன்றிட்டானோ..?? தோற்றப்போலியே என்றிட்டாலும்.. உடன் தோழனும் எப்படி தோன்றிடுவான்..?? என் சித்தம் கொண்ட பித்தத்திற்கும்.. சாலமனுக்கும்தான் என்ன சம்பந்தம்..??’

“எங்க வீட்டுக்கு எதுத்தாப்ல ஒரு பெரிய அட்வர்டைஸ்மன்ட் போர்ட் வச்சிருப்பாங்க அசோக்..!!”

எப்போதோ அசோக்கிடம் சொன்னது.. மீராவின் மூளையில் இப்போது பளிச்சிட்டது..!! எதிரே வந்து அவன் தோன்றிட, என்ன காரணம் என்பது.. இப்போது அவளுக்கு புரிந்து போனது..!! உடனே.. ‘ப்ச்’ என்றொரு சலிப்பு அவளிடமிருந்து வெளிப்பட்டது..!! ‘Oh, Goddd’ என்றவாறு நெற்றியை பற்றி பிசைந்தாள்.. ஏன் அவ்வாறு உளறிக்கொட்டினோம் என்று இப்போது வருந்தினாள்..!! அடுத்த நொடியே அவளது இன்னொரு மனது சுறுசுறுப்பானது..

‘அப்படி இருந்தாலுமே.. இந்த மாதிரியான நெகிழ்தகடு.. இந்த சென்னை முழுதும்.. குறைந்தது இருபது இடங்களிலாவது இடம்பெற்றிருக்க வேண்டுமே..?? ஒவ்வொரு இடத்திலுமே.. இந்த நெகிழ்தகட்டினை சுற்றி.. குறைந்தது ஆயிரம் சாளரங்களாவது அமையப் பெற்றிருக்க வேண்டுமே..?? அப்புறமும் எப்படி..?? அப்படியானால்.. அப்படியானால்.. அத்தனை வீடுகளிலும் ஏறியிறங்கி.. என்னை தேடியலையப் போகிறானா..?? அப்படி அலைந்தாலுமே.. நான் அகப்படுவேன் என்பதும் அத்தனை உறுதியில்லையே..??’

என்பது மாதிரி அந்த மனது யோசிக்க யோசிக்க.. ‘Oh, Nooo’ என்றொரு திகைப்பும், பிரமிப்பும் அவளிடம்..!!

‘எத்தனை கடினமான தேடுதல் இது..?? எவ்வளவு முட்டாள்த்தனமான முயற்சி இது..?? என்னவொரு கண்மூடித்தனமான காதல் இவனது..??”

இப்போது மீராவுக்கு அசோக்கின் மீது ஒருவித கனிவும், கவலையும் வந்து இரட்டையாய் பிறந்தன..!! தூரத்தில் நின்றிருந்த அசோக்.. இவள் நின்றிருந்த ஜன்னல் பக்கமாய் கைகாட்டி சாலமனிடம் ஏதோ சொல்ல.. இவள் இங்கிருந்தே.. கண்களில் ஒருவித மிரட்சியும்.. மனதில் ஒருவித தவிப்புமாய் அவனை பார்த்தாள்..!! சுள்ளென்று அடிக்கிற நண்பகல் வெயிலுக்கு.. நெற்றியில் கொப்பளித்த வியர்வைக் ஊற்றினை.. அசோக் தனது கட்டைவிரலால் வழித்து உதற.. அதைப் பார்க்க நேர்ந்த மீராவின் மெல்லிதயத்தை.. காதலன் மீதான பரிதாபம் வந்து இப்போது கவ்விக்கொண்டது..!! அவள் கண்களில் முணுக்கென்று நீர் துளிர்க்க.. உதடுகள் தவிப்புடன் மெலிதாக தடதடக்க.. அப்படியே தளர்ந்துபோய்.. அருகில் கிடந்த அந்த வெண்ணிற நாற்காலியின் மீது.. ‘சொத்’தென்று அமர்ந்தாள்..!! ஒருகையால் வாயைப் பொத்திக்கொண்டு.. தூரத்தில் தெரிந்த அசோக்கையே பரிதாபமாக பார்த்தாள்..!!

‘ஏனடா இப்படி செய்கிறாய் என் செல்லமே..?? ஏன் இப்படி என்னை குற்ற உணர்ச்சியில் குறுகிப் போக வைக்கிறாய்..?? என்னிடம் என்ன உள்ளதென்று இப்படி என்னை தேடியலைகிறாய்..?? அப்படி என்ன உனக்கு என்மீது அந்த… மடத்தனமான காதல்..?? எதுவுமே செய்ததில்லையே.. இந்தப்பாவி எதுவுமே செய்ததில்லையே.. உன்னுடன் பழகிய அந்த நாட்களில், உன் மனதில் காதலை வளர்க்கும் விதமாய்.. இந்தப்பாவி எதுவுமே செய்ததில்லையே..?? உன்னை அடித்திருக்கிறேன்.. அலைக்கழித்திருக்கிறேன்.. அசிங்கப்படுத்தி பார்த்திருக்கிறேன்.. அவமானமூட்டி ரசித்திருக்கிறேன்..!! அதைத்தவிர.. அன்புள்ளதொரு காதலியாய்.. என்றுமே நான் நடந்து கொண்டதில்லையேடா அறிவற்றவனே..?? அப்புறமும் ஏன்..??’

மீராவுடைய ஒருமனது அந்தமாதிரி ஆதங்கத்துடன் தத்தளித்துக் கொண்டிருக்க.. அவளுடைய இன்னொரு மனது..

‘அசோக்.. என் அசோக்.. என் காதலன்..!! என் மீது எவ்வளவு பைத்தியமாய் இருக்கிறான் பார்.. என் மீது அவனிக்கிருக்கிற அன்பின் ஆழத்தை பார்.. கருணை இல்லாமல் நான் அவனை தவிக்கவிட்டு வந்தபோதிலும்.. காதல் குறையாமல் அவன் என்னை தேடியலைகிற கோலத்தை பார்..!! அசோக்.. என் அசோக்.. என் அருமைக்காதலன்..!!”

என்று அந்த ஆதங்கத்தையும் மீறி பெருமைப்பட்டுக் கொண்டது..!!

‘என் காதலை இவனுக்கு உரைத்ததுதான் தவறாய் போனதோ.. அதனால்த்தான் இவனிடம் இத்தனை தீவிரமோ..?? மனதினை திறந்து காட்டாமலேயே மறைந்து போயிருக்க வேண்டுமோ..??’ – குழப்பமாய் கேள்வி கேட்டது ஒரு மனது.

‘இல்லையில்லை.. எந்த சூழ்நிலையிலும் இவன் இதைத்தான் செய்திருக்கப் போகிறான்.. அவனது காதல் அந்த மாதிரி..!! உனது காதலை அவனுக்கு உரைத்ததிலெல்லாம் ஒன்றும் தவறில்லை.. அவனுக்கு உன்மீதான காதலில்தான் கொஞ்சமும் தளர்வில்லை போலிருக்கிறது..!!’ – தெளிவாக பதில் சொன்னது இன்னொரு மனது.

அசோக் இப்போது அந்த கட்டிடத்தில் இருந்து இறங்க ஆரம்பித்திருந்தான்.. அவன் பின்னே சாலமனும்..!! கட்டிடத்தின் பக்கவாட்டில்.. குறுக்கும் நெடுக்குமாய் ஒட்டிக்கொண்டிருந்த படிக்கட்டுகளில்.. நிதானமாக இறங்கிக்கொண்டிருக்கிற அசோக்கை.. மீராவால் இப்போது இன்னும் தெளிவாக பார்க்க முடிந்தது..!! அவளுடைய மனதிலும் இப்போது மெலிதான ஒரு பதற்றம்..!!

‘என்ன செய்யப் போகிறான் இப்போது..?? இங்கிருக்கிற ஒவ்வொரு வீடாக சென்று கதவை தட்ட போகிறானா..?? கதவைத்தட்டி எனது முகம் தட்டுப்படுகிறதா என்று தவிப்புடன் தேடப் போகிறானா..?? இந்த வீட்டு கதவையும் வந்து தட்டுவானோ..?? அப்படி தட்டினால் நான் என்ன செய்யட்டும்..?? வீட்டுக்குள் இருந்துகொண்டே கதவை திறக்காமல் அவனை திரும்பி போக செய்வதா.. அல்லது.. அவன் வருவதற்கு முன்பே வீட்டை விட்டு வெளியேறி முற்றிலும் அவனை தவிர்த்து விடுவதா..?? என்ன செய்யலாம்.. எதுவும் புரியவில்லையே..??’

ஒருபக்கம் அவளுடைய மனம் அவ்வாறு பதறிக்கொண்டிருந்தாலும்.. அதே மனதின் இன்னொரு பக்கத்தில் ஒரு பரிதாபகரமான ஏக்கம்..!! அசோக்கை பிரிந்த இந்த நான்கைந்து நாட்களில்.. அவளுடைய மனதில் எப்போதும் குடிகொண்டிருக்கிற ஒரு ஏக்கம்தான் அது.. இப்போது அவனை நேரிலேயே காண நேர்ந்ததும்.. அந்த ஏக்கத்தின் அளவு எக்கச்சக்கமாக ஏறிப்போயிருந்தது..!!

‘ஏன்..?? ஏன் இந்த தவிப்பு..?? எதற்காக இந்த துயரம்..?? அப்படி என்ன உனக்கு ஒரு பிடிவாதம்..?? பிறந்தது முதலாய் இருண்டு போயிருந்த உன் வாழ்க்கையை.. பிரகாசமாக மாற்றக்கூடிய பகலவன் ஒருவன்.. படிக்கட்டில் இறங்கி வருகிறான் பார்..!! உன்னை விட்டு விலகேன் என்று.. உன் வீட்டு வாசலிலேயே வந்து நிற்க போகிறான் பார்..!! உனது பிடிவாதம் அகற்று.. ஓடிச்சென்று அவனை அணைத்துக்கொள்.. அணைத்துக்கொண்டு அவன் மார்பில் முகம் புதைத்து அழு.. கண்ணீருடனே உன் கதையை அவனுக்கு உரைத்திடு.. ‘இதற்காகத்தான் ஓடி ஒளிந்தாயா பைத்தியம்?’ என்றவன் புன்னகைக்கையில்.. அவனுடைய முகத்தில் ஆயிரம் முத்தங்கள் வைத்திடு..!! போ.. அவனுடன் இணைந்து விடு.. நீயும் வேதனையில் உழன்று, அவனையும் வெறுமனே அலைக்கழிக்காதே..!!’

மீராவுடைய ஒருமனது.. அந்தமாதிரி காதலனுடன் கலந்துவிடலாமா என ஏக்கத்துடன் எண்ணிக்கொண்டிருக்கிற வேளையிலே.. அவளுடைய இன்னொரு மனது படக்கென்று விழித்துக்கொண்டது.. கழிவிரக்கத்தின் பிடியில் சிக்கி, அடிக்கடி அவளை திட்டி தீர்க்கிற அந்த மனது..!!

‘அடச்சீய்.. வெட்கங்கெட்டவளே..!! புத்தி போகிறது பார்..!! அணைத்துக்கொள்ளப் போகிறாளாம்.. அழுதுபுலம்ப போகிறாளாம்.. அறிவில்லை உனக்கு..?? அவனுடைய அன்பு ஆழமானதுதான்.. ஆழமான அந்த அன்பினால்த்தான் உனக்காய் இப்படி அலைந்து திரிகிறான்.. ஆனால்.. அந்த அன்பிற்கு உரியவளாக உனக்கென்ன அருகதை இருக்கிறது..?? நீ கற்பிழந்த கதையைச் சொல்லியா அவனிடம் இருந்து காதலைப் பெற்றாய்..?? அவனிடம் நீ சொன்னதெல்லாம்.. வாய் நிறைய புழுகும்.. வண்டி வண்டியாய் பொய்களும்தானே..?? அவன் உன்னை கண்மூடித்தனமாய் காதலிக்கிறான் என்றதும்.. அவனது மாசற்ற அந்த காதலை.. உன் வசதிக்கேற்ப உனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள பார்க்கிறாயா..?? ச்சீச்சீய்..!! எந்த மாதிரியானதொரு சந்தர்ப்பவாதியடி நீ..?? வேதனை தாளவில்லையென வெட்கம் துறந்திட துணிந்தாயோ..?? மகிழ்வான வாழ்வுக்கென மனசாட்சி கொன்றிட நினைத்தாயோ..??’ – அந்த மனது அவ்வாறு சாட்டை சுழற்ற..

‘இல்லை.. நான் அப்படிப்பட்டவள் இல்லை..!!’ – அடுத்த மனது அஞ்சி நடுங்கியது..!!

‘சரி.. அதெல்லாம் இருக்கட்டும்.. முதலில் இதற்கு பதில் சொல்.. உனது காதலை அவனுடைய கண்ணைப் பார்த்து சொல்லியே தீருவேன் என்று அடம்பிடித்தாயே.. அதேபோல் உனது கற்பை தொலைத்த கதையையும் அதே கண்களை பார்த்து உரைத்திடும் தைரியம் இருக்கிறதா உன்னிடம்..?? எப்படி சொல்வாய்.. எங்கிருந்து ஆரம்பிப்பாய்.. எதையெல்லாம் சொல்லிவிடுவதாக எண்ணம் உனக்கு..?? உனது கதையைக் கேட்டு.. அவனது கண்களில் அனிச்சையாய் ஒரு கலக்கம் ஏற்பட்டாலும்.. அதைத் தாங்கிக்கொள்கிற திறனிருக்கிறதா உன்னிடம்..??’

‘இல்லை.. சத்தியமாக இல்லை..!!’

‘அப்புறம் எப்படி சொல்லப் போகிறாயாம்..??’

‘முடியாது.. என்னால் முடியவே முடியாது..!!’

எதிர்பாராத சூழ்நிலை.. எண்ணங்களில் ஏற்பட்ட பிறழ்வு..!! மீராவுடைய மனம்.. அதிர்ச்சி, குழப்பம், பிரமிப்பு, பெருமிதம், காதல், ஏக்கம், கழிவிரக்கம் என.. விதவிதமான முகங்களை உடனுக்குடன் மாற்றிக்கொண்டு.. மீராவை நிலைகுலைந்து போக செய்தன..!! தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தவள்.. குழப்பமான எண்ணங்களை அடக்கி.. ஒரு தெளிவான முடிவெடுக்க முயற்சி செய்தாள்..!!

‘இல்லை.. அவன் என்னை பார்க்க கூடாது.. அவன் என்னை பார்க்கிறானோ இல்லையோ.. நான் இனி அவனை பார்க்கவே கூடாது.. என் மனதை என்னாலேயே நம்ப முடியவில்லை.. ‘அணைத்துக்கொண்டு அழு போ’ என்று என்னையே முடுக்கி விடுகிறது.. அவனை எதிரே பார்த்தால் என் வைராக்கியம் உடைபடப்போவது உறுதி..!! அது நடக்கக்கூடாது.. அவன் வரும்போது நான் இங்கிருக்க கூடாது.. அவன் வந்து எழுப்பப்போகிற அழைப்புமணி ஓசை என் காதில் விழவே கூடாது..!!’

“கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்… கிர்ர்ர்ர்ர்…”

மீரா ஒரு தெளிவான முடிவுக்கு வந்து கொண்டிருக்கும்போதே.. வீட்டுக்குள் அழைப்புமணியின் சப்தம் காதை கிழித்தது..!! அதைக்கேட்டதும் அவளிடம் மெலிதான ஒரு பதற்றம்.. ஒரு சிறு அதிர்ச்சி.. குழப்ப ரேகைகள் ஓடுகிற முகத்துடன் வெடுக்கென எழுந்தாள்.. திரைச்சீலை விலக்கி ஜன்னலுக்கு வெளியே பார்த்தாள்..!! தூரத்தில் அசோக் தெரிந்தான்.. இப்போதுதான் படிக்கட்டை விட்டிறங்கி.. சாலையில் பிரவேசித்திருந்தான்.. இவளது வீடிருக்கும் திசையை நோக்கி நடை போட ஆரம்பித்திருந்தான்..!!

‘வீதியிலே அவன் என்றானால்.. வீட்டு வாசலில் யார்..??’

ஓரிரு வினாடிகள் குழப்பமாக நெற்றி சுருக்கிய மீரா.. பிறகு அவசரமாக திரும்பினாள்.. விடுவிடுவென நடந்து அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.. ஹாலுக்குள் நுழைந்தவள் கதவினை நோக்கி நடந்தாள்.. படக்கென கதவை திறந்து பார்வையை வெளியே வீசினாள்..!!

வெளியே மனோகர் நின்றிருந்தான்..!! வெளுத்த முகம்.. அதில் ஒரு கருப்பு கண்ணாடி.. அடர்த்தியான கேசம்.. அதில் ஐந்தாறு நரைமுடி.. அகலமான நெற்றி.. அதில் இப்போது வியர்வை ஈரம்.. தடித்த உதடுகள்.. அதில் இப்போது அசட்டு சிரிப்பு..!! வெளியில் நின்றிருந்த மனோகரை பார்த்ததும்.. மீரா ஒரேநேரத்தில் ஒருவித எரிச்சலுக்கும், சலிப்புக்கும் உள்ளானாள்..!!

“என்ன..??” என்றாள் அந்த எரிச்சல் தொனிக்கும் குரலுடனே.

“என்ன என்ன..??” அவன் புரியாதவன் மாதிரி கேட்டான்.

“ப்ச்.. எதுக்காக வந்திருக்கீங்கன்னு கேட்டேன்..!!”

“ஹ்ஹ.. என் வீட்டுக்கு நான் வர்றதுக்கு காரண காரியத்தோடத்தான் வரணுமா..?? வழியை விடு..!!”

எகத்தாளமாக சொன்னவன்.. தனது கனத்த உடம்புடன் கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைய.. அவன் தன்மீது இடித்துவிடக்கூடாதென, மீரா அவசரமாய் விலகி நின்று கொண்டாள்..!!

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பாஆஆ..!! என்னா வெயிலு..?? ச்ச.. எல்லாம் அப்படியே அவிஞ்சுரும் போல இருக்கு..!!”

சலிப்புடன் சொன்ன மனோகர்.. குளிர்கண்ணாடியை கழற்றி பாக்கெட்டில் செருகிக்கொண்டான்..!! சட்டையின் மேலிரண்டு பட்டன்களை கழற்றி விட்டுக்கொண்டான்.. உரிமையுள்ளவனாக நடந்து சென்று உள்ளறைக்குள் நுழைந்தான்..!! கதவை அறைந்து சாத்திய மீரா.. ஹாலில் நின்றவாறே அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! மனோகர் சென்று ஃப்ரிட்ஜை திறந்தான்.. உள்ளே அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற உணவுப்பண்டங்களை ஓரிரு வினாடிகள் நோட்டமிட்டான்..!!

“ஐ ஹேட் திஸ்..!!”

சொல்லிக்கொண்டே உள்ளேயிருந்து அந்த பழச்சாறு பாட்டிலை எடுத்தான்.. ஃப்ரிட்ஜ் மீதே அடுக்கி வைக்கப்பட்டிருந்த கண்ணாடி தம்ளர்களில் ஒன்றை எடுத்து.. அதில் அந்த வெண்ணிற பழச்சாறை நிரப்பிக்கொண்டான்..!! ஃப்ரிட்ஜை மூடிவிட்டு மீராவின் பக்கம் திரும்பினான்..!!

“ஐ ரியல்லி ஹேட் லைம் ஜூஸ்..!!”

என எரிச்சலாக சொல்லியபடியே.. க்ளாஸிலிருந்த எலுமிச்சைச்சாறை உறிஞ்சிக்கொண்டான்..!! கையில் ஜூஸ் தம்ளருடனே.. நடந்து ஹாலுக்கு வந்தான்..!! அவ்வளவு நேரமாக அவனையே முறைத்துக்கொண்டிருந்த மீரா.. இப்போது பார்வையை வேறுபக்கமாக திருப்பிக்கொண்டாள்..!! மனோகர் அவ்வப்போது பழச்சாறை உறிஞ்சிக்கொண்டே.. முகத்தை திருப்பி சுற்றும் முற்றும் பார்த்து.. பார்வையாலேயே அந்த வீட்டை அளவெடுத்தான்..!!

மனோகர்.. மதுசூதனனின் மருமகன்.. மதுசூதனனின் முதல் மனைவிக்கு பிறந்த மகளான புவனாவுடைய புருஷன்..!! பக்கவாதம் வந்து படுத்த படுக்கையாக கிடந்த மதுசூதனன்.. பத்து மாதங்களுக்கு முன்பாக உயிரை விட்டதில் இருந்து.. அவருடைய கம்பனி முதலான சொத்துக்களை எல்லாம்.. கண்காணிக்கிற பொறுப்பு மனோகருக்கு வந்தது சேர்ந்தது.. இல்லாவிட்டால்.. இவனாகவே அந்த பொறுப்பை எடுத்துக்கொண்டான் என்றும் சொல்லலாம்..!! கண்காணிக்க ஆரம்பித்த சொத்துக்களை எல்லாம்.. இப்போது ஒவ்வொன்றாக கையகப்படுத்திக் கொண்டிருக்கிறான்..!!

“வீடு மாதிரியா இருக்குது இது.. ஏதோ பண்டாரப்பசங்க தங்குற மடம் மாதிரி இருக்குது..!!” வீட்டை சுற்றி பார்த்த மனோகர் சலிப்பாக சொன்னான்.

“………………….” மீரா பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள்.

“ஹ்ம்ம்.. நெறைய வேலையாகும் போல இருக்கே..?? இன்டீரியர்லாம் கம்ப்ளீட்டா மாத்தனும்.. மொதல்ல இந்த கலரை மாத்தணும்.. வெள்ளவெளேர்னு அசிங்கமா..!!”

“………………….”

கொஞ்சமாய் மிச்சமிருந்த பழச்சாறையும், மனோகர் இப்போது தொண்டைக்குள் சரித்துக்கொண்டான். உதட்டை நாவால் நக்கிக்கொண்டான். க்ளாஸை டீப்பாயில் வைத்தவன், மீராவை ஏறிட்டு திடீரென சொன்னான்.

“ஹேய்.. அந்த விழுப்புரம் பார்ட்டி சொன்னேன்ல.. அவங்க அடுத்த வாரம் வீட்டை பார்க்க வர்றேன்னு சொல்லிருக்காங்க..!!”

“ஓ..!!”

“வீடு புடிச்சிருந்தா.. உடனே ரிஜிஸ்ட்ரேஷன் வச்சுக்கலாம்னு சொல்லிருக்காங்க..!!”

“ம்ம்..!!”

“ரிஜிஸ்ட்ரேஷன் முடிஞ்சதுன்னா.. நீ உடனே வீட்டை காலி பண்ற மாதிரி இருக்கும்..!!”

மனோகர் அந்த மாதிரி கூலாக சொல்ல, மீரா இப்போது முகத்தை சரக்கென திருப்பி அவனை முறைத்தாள். சற்றே வெப்பம் தகிக்கிற குரலில் சொன்னாள்.

“உடனேலாம் என்னால முடியாது.. ஒருமாசமாவது எனக்கு டைம் வேணும்..!!”

அவளுடைய முகத்தில் தெரிந்த ஆவேசத்தில் மனோகர் சற்றே மிரண்டு போனான் என்றுதான் சொல்லவேண்டும். ஒரிருவினாடிகள் திகைத்தவன், உடனடியாக தனது குரலையும் முகத்தையும் குழைவாக மாற்றிக்கொண்டு சொன்னான்.

“ஓகே ஓகே.. ரிலாக்ஸ்..!! ஒரு மாசந்தான.. இட்ஸ் ஓகே.. டேக் யுவர் டைம்..!!”

மதுசூதனன் நீலப்ரபாவுக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறார்.. மீராவுடைய வாழ்வே துயரமாகிப் போக முக்கிய காரணமாயிருந்திருக்கிறார்.. அதேநேரம்.. அவர் ஒருசில நல்ல காரியங்களும் செய்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்..!! பல வருடங்களுக்கு முன்பே இந்த சிந்தாதிரிப்பேட்டை வீட்டை நீலப்ரபாவின் பெயரில் எழுதி வைத்திருந்தார்.. அதேமாதிரி.. அவர் பக்கவாதம் வந்து படுத்துக்கிடந்த காலத்திலும் கூட.. மாதச்செலவுக்கான பணம் நீலப்ரபாவுக்கு சென்று சேர்ந்துவிடுமாறு பார்த்துக்கொண்டார்..!! சுருக்கமாக சொன்னால்.. வாழ்க்கையை கெடுத்திருந்தாலும் வசதியை கொடுத்திருந்தார்..!!

அவருடைய மரணத்திற்கு பிறகு.. மாமனாரின் சொத்துக்களை கண்காணிக்க ஆரம்பித்த மனோகருக்கு.. இந்த சிந்தாதிரிப்பேட்டை வீடு கண்ணை உறுத்த ஆரம்பித்தது..!! அந்த வீட்டின் மார்க்கெட் மதிப்பு வேறு.. அவனுடைய மனதை உறுத்தியது..!! கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து, ஆசை நாயகிக்கும் அவள் வாரிசுக்குமா என.. ஆரம்பத்ததில் இருந்தே அவனுக்குள் ஒரு எண்ணம்.. எப்படியாவது அந்த சொத்தை அபகரித்து விடவேண்டும் என்பது மாதிரியான ஒரு திருட்டு எண்ணம்..!! நீலப்ரபாவும் திடீரென தவறிவிட.. மீரா தனியாளாகிப் போய்விட.. அவனது திருட்டு எண்ணம் திண்ணமாகிப் போயிற்று..!!

ஏதேதோ தகிடுதத்தம் செய்து.. பொய்யாக ஒரு போலிப்பத்திரம் தயாரித்தான்..!! கைவிளங்காத மாமனார் எழுதிய கடைசி உயில் இதுதான் என சத்தியம் செய்தான்.. தொழிலில் ஏற்பட்ட இழப்பை சரிக்கட்ட, அந்த வீட்டை விற்றால்தான் சரிப்படும் என்று சப்பைக்கட்டு கட்டினான்..!!

புவனா நல்லவள்தான்.. ஆனால் அப்பாவி.. புருஷனை எதிர்த்து செயல்படுகிற துணிவில்லாதவள்..!! அதேபோல.. மீராவுக்கும் அப்பாவின் சொத்து மீது சிறிதும் அக்கறை கிடையாது.. உரிமை பேசி விவாதம் செய்யவெல்லாம் அவள் விரும்பவில்லை..!! எல்லாவற்றையும் சரியாக பயன்படுத்திக்கொண்ட மனோகர்.. அந்த வீட்டை அவனது பிடிமானத்துக்குள் கொண்டுவந்துவிட்டான்..!! இப்போது.. பேச்சை மாற்றும் விதமாக மீராவிடம் சொன்னான்..!!

“ஆங்.. அப்புறம்.. இன்னொரு விஷயம்..!!”

“என்ன..??”

“அடுத்த வாரம் அவங்க வீட்டை பாக்க வர்றப்போ.. நீ வீட்ல இருக்க வேணாம்.. கொஞ்ச நேரம் எங்கயாவது வெளில போய் சுத்திட்டு வா..!! எதுக்கு சொல்றேன்னு புரியுதா..??”

“……………………”

மனோகர் சொல்ல வருவது புரிந்து மீரா அவனையே முறைத்துக்கொண்டிருக்க, அவன் அவளை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினான்.

“அவங்கபாட்டுக்கு வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்காம.. உன்னைப்பத்தி ஏதாவது கேட்பாங்க.. யாரு,என்ன,ஏதுன்னு..!! என்னாலயும் ரொம்ப நேரம் எதுவும் சொல்லாம கண்ட்ரோல் பண்ணிட்டு முடியாது.. ஏதாவது வாயை விட்ருவேன்..!! That won’t be nice.. ok..?? I just want to avoid that..!!”

“ம்ம்.. புரியுது..!!”

– தொடரும்

மேலும் குடும்ப செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

Comments



xvibeos com ரம்பா நடிகை sexalaku pundai tamilமாமியின் ரவிக்கையுடன்சின்ன பையனுடன் காம கதைஅக்கா ஜக்கெட் முலை காம்புகள் தம்பி சப்பு xxx videosvidhvai anni sex videoswww.in இந்தியன் குண்டு முலைகள் பெண்கள் புதியது சூத்தூதமிழ் தேவிடியா புண்டைமுலைகேல்ஸ் ரகசிய ஊம்பு செக்ஸ்Tamilsexstoreswww@comபருவ பெண்களின் ஒழ் விடியோsex videos tamil andikal kulikkum aktar.entei.xvideoTamil kalla sex vitiyosஅஞ்சலி.புண்டை.படம்காம விடியோநடிகை அஞ்சலி ஓல்கதைகள்காமகதைTamil sex story in mamanar pannaiyarWww.mulaikambu xxx.comஅம்மாவின் அணைப்பு பெரியம்மாவின் உடல் வனப்புNew 2019 in tamil kama kadaigal in lesbiyan stores in tamilமுலைமாமியின் பின்புறம் கதைஇளம் பெண் திருட்டு sexஆண்டி முலைகள்புடவை ஆன்டிகள் xxxதமிழ் ஆண்டி முலை மற்றும் காம கதைபுண்டை ஒல் படம் முலை18 இலம் பென் புன்னட படம்Tamilsexstoreswww@comSaxstoretmilபெரிய இடுப்பு HD sex vidioஅண்ணா தங்கை காமம் கடலில் குளிக்கும் ஆன்டி தமிழ் செக்ஸ் வீடியோ.இளம்பெண்கள் புண்டை ஓல் கதைகள்.xxx காட்டில் மயக்கம் ஆனவர்கள்www tamilscandals com porn videos tag E0 AE 95 E0 AE BE E0 AE AE E0 AE AA E0 AE 9F E0 AE AE E0 AF 8Dtamil camara braa aunty sex videosTamil old aunty sex kamakkathiஓல் வாங்கும் அழகி வீடீயோடீச்சரை கட்டி தடவி ஆசிரியர்சித்தியும் அண்ணனும் ச***** வீடியோஸ்தனியாக இருக்கும் மங்கை xxxtamil aunty sex photosThamilxvideotamil anty kama sex strieshot and sexe fuke Indian cute girls moviesஅத்தை முலைக்கு மசாஜ் செய்யும் மாப்பிளைoolsukam kanpathu eppatiமாம் பிரா கதைஆண்டி கதைபூலை சப்பி சுவைக்க ஆரம்பித்தாள் மச்சினிமச்சினி தொடர் காமகதைதமிழ் இனம் பெண் sex.compolice Amma kamakathaipengaluku sapuvaduநீளமான முரட்டு சுண்ணி காம கதைபருவபுண்டைசங்கவி அபச முனல படம்AAA?புன்டை எப்பாடி ஓக்குராது படம்நியூ செக்ஸ் வீடியோஸ்சங்கவி அபசா ஒல் படம்சுன்னி மொட்டை மாடிக்கு சென்றேன்மும்பை ஆண்டி காம கதைகள்அண்ணன் தங்கை செக்ஸ்tamil mamiyar sex storiesமும்பை செக்ஸ் மூவிதமிழ் ஆண் செக்ஸ் கதைப்ரியா முதலாளியுடன் காமaunty pundaiபூலை உம்புOolpornsexசித்தியுடன் ஓல் அப்பாவின் இரண்டாவது மனைவி ஓல் கதைரயில் பயணம் லெஸ்பியன் தமிழ் காமக் கதைகள்தமிழ் புண்டைங்க லீலைகள்tamilaabasa kathaikalகாட்டுக்குள்ளே கன்னி புண்டைதமிழ் குடும்ப செக்ஷ் கதைகளை 20 1915 வயது முலைமலை பகுதியில் ரகசிய செக்ஸ் கேல்ஸ்குரூப் ஓல்VELAIKARI MULAI MASAJ VIDEOS TAMILumpu thangachi kama kathai